Tuesday, December 2, 2008

அமைதிக்கு திறவுகோல்- தாயின் அன்பு

God could not be everywhere and therefore he made mothers. ~Jewish Proverb

அமைதியை தேடித் தவிக்கும் மக்கள் அதற்கான திறவுகோலை தம்மிடமே வைத்துக் கொண்டு வெளியே தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Men are what their mothers made them. - Ralph Waldo Emerson

All that I am, or hope to be, I owe to my angel mother. - Lincoln

Let France have good Mothers, and she will have good sons. - Napoleon

ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பலர் போற்ற வாழ்வதைக் காண ஆசைப்படுவாள். அவள் தன் மகனோ மகளோ வன்முறையில் ஈடுபட்டு பலருக்கும் துன்பம் விளைவித்து தனக்கும் துன்பம் தேடிக்கொள்வதை விரும்புவாளா ?

குறிக்கோள் எவ்வளவே உயர்வாயினும் அதை அடைய தீவிரவாதம் முறையான வழியாகது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் சமூக விரோதிகள்.

வன்முறையை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியே கதியென்றிருக்கும் லட்சக்கணக்கான தாய்மார்களிடம் இந்த உணர்ச்சிகளை அழுத்தமாகத் தூண்டிவிட வேண்டும்.

அந்த அடிப்படையில், செப்டெம்பெர் 11-ல் விளைவிக்கப்பட அழிவிற்கு பிறகு, அக்கருத்தை மையப்படுத்தி ஒரு சிறு விளக்கப்படம் ஒன்றை 2001-ல் தயாரித்து அதை ஒரு வலைப்பக்கத்தில் போட்டு வைத்திருந்தேன். இப்போது மும்பய் வன்முறை கண்ட பிறகு அதன் அவசியம் இன்னமும் அதிகமானது போல் உணர்கிறேன். அதனால் அதை இந்த வலைப்பக்கத்திலும் ஒரு முறை இணைத்து விடுகிறேன்.

Power of the Mother
View SlideShare presentation or Upload your own. (tags: fraternity peace)



மதிப்பிற்குரிய மேதகு அப்துல்கலாம் அவர்கள் தன் தாய்க்கு சூட்டும் நன்றிக் கவிதையையும் படியுங்கள்

Mother

My Mother, you came to me like heavens carrying arms,
I remember the war days when life was challenge and toil-

...

All this pain of a young boy
My Mother you transformed in to pious strength
With kneeling and bowing five times
For the grace of the Almighty only my Mother
Your strong piety is your children's strength
You always shared your best with to whoever needed the most,
You always gave and gave with faith in him,

I still remember the day when I was ten,
Sleeping on your lap to the envy of my elder brothers and sisters.
It was full moon night, my world only you knew Mother!, My Mother!
When at midnight, I woke with tears falling on my knee
You knew the pain of your child, My Mother.
Your caring hands, tenderly removing the pain
Your love, your care, your faith gave me strength,
To face the world without fear and with His strength.
We will meet again on the great Judgment Day. My Mother!

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் புரிவாரோடு இணங்க வேண்டாம் -- உலகநீதி

4 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு கபீர் அன்பன்.

எனது ’என்னதான் வேண்டும் உமக்கு’ கவிதையில் நீளம் மற்றும் நடை வேறு பட்டதன் காரணமாக நீக்கிய வரிகள் இங்கு:
”பத்து மாதம் சுமந்தும்மை
பெற்றது ஒருத்தி அது போலத்தான்
மற்றவரும் வந்திந்த மண்ணிலே
பிறந்தார் அறிவீரடா!”

அப்துல் கலாமின் கவிதையும் தொடரும் உலக நீதியும் ’நச்’.

[விளக்கப் படம் எவ்வளவு காத்திருந்தும் திறக்க இயலவில்லையே:(?]

KABEER ANBAN said...

நன்றி ராமலக்ஷ்மி

சூப்பர் ஃபாஸ்ட் பின்னூட்டத்திற்கு. மாற்றங்களை அறிவித்ததற்கு நன்றி.

HTML கோளாறினால் விளக்கப்படம் தடைபட்டது. சரி பண்ணியாச்சு. பதிவின் முக்கிய அங்கமே அதுதான். பார்த்து சொல்லவும்.
நன்றி

ராமலக்ஷ்மி said...

தாய்மை சக்தி வாய்ந்தது. தாய்மையால் சாதிக்க முடியாததில்லை என்பதை எடுத்துச் சொல்லும் அருமையான விளக்கப் படம். பாராட்டுக்கள். இதை எல்லோரும் தங்களுக்கு தெரிந்த எல்லா தாய்மார்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நானும் செய்கிறேன். இவ் விளக்கப் படம் மின் மடலில் உலகைச் சுற்றி வர வேண்டும்.

KABEER ANBAN said...

//அருமையான விளக்கப் படம். பாராட்டுக்கள். //

அக்கறையுடன் மீண்டும் வந்து, படித்து சொல்லிய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

குடும்பக்கட்டுப்பாடு, எய்ட்ஸ், குடிப்பழக்கம் இவற்றிற்கான விழிப்புணர்வு நடவடிக்கைப் போலவே குடும்பத்தலைவிகள் சமுதாயம் கட்டுக்குலையாமல் இருக்க செய்யவேண்டியன என்ன என்பனவற்றை அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து விரிவாக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இளைஞர்கள் வழிதவறுவது வறுமையால் அல்ல. அன்பும் அரவணைப்புமற்ற குடும்பச் சூழ்நிலைகள்தான் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.