Thursday, January 29, 2009

வலைப் பதிவு அன்பர்களுக்கு நற்செய்தி

எழுதிய இடுகைகளை எழுதியவரே படிக்க வேண்டிய நிலையா

இடுகைகள் படிக்கப்படும் முன்பே திரட்டிகளில் புதைந்து போய்விடுகின்றதா

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் அப்போ இப்போ என்று ஓரிருவர் எட்டிப்பார்க்கின்றனரா

பின்னூட்டங்கள் பெரும்பாலும் ஒற்றை படை இலக்கத்தை தாண்டுவதே கடினமா

மொக்கைக்கான ஐடியாவெல்லாம் கூட தீர்ந்து போச்சுதா

புதுசா எழுதாவிட்டால் யாரும் எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்ற நிலைமையா


என்னங்க இது! இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே

ஆமாங்க , ஆனா ஒரு நல்ல நியூஸ்!

மேலே உள்ள எல்லாவற்றிற்கும் உங்கள் பதில் ஆமாம் என்றால் இன்னும் படியுங்கள்.

வந்துவிட்டது தேன் சிட்டு



இது திரட்டியா -இல்லை

அவார்டு பம்மாத்தா -இல்லை

அன்பர்களே தமிழ் வலையுலகிலேயே முதல் முறையாக ஒரு வலைப்பூந்தோட்டம். (தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க)

தேன்சிட்டு-வளையத்தில் உறுப்பினராகுங்கள்.

தேன்சிட்டு வாசகர்களை உங்கள் வலைக்கு அழைத்து வரும்
.

அதாவது வெறும் கூகிளாரையும் திரட்டிகளையும் நம்பாம இன்னொரு வழியிலேயும் வாசகர்களை உங்கள் வலைப்பக்கம் வரவழைக்க இது ஒரு வழி.

உதாரணத்திற்கு ஆன்மீகத்தேனில் இணைந்த ஒரு வலைப்பக்கம் போய் பாருங்க.

பலவகை வளையத்தில் இணைவதற்கு இங்கே செல்லவும்.

மிச்சத்தை அங்கேயே போய் படிச்சுங்குங்க ! மறக்காம என்ன தோணுதுன்னு (அங்கேயோ இங்கேயோ) சொல்லிட்டு போங்க. நன்றி

Sunday, January 25, 2009

Slumdog Millionaire - வெள்ளைக்காரன் சொன்னால் ”சரி”

நான் இந்த படத்தை கணிணியில் பார்த்தேன்.

படத்தின் ஆரம்பமே ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது.

போட்டியில் விடைகளை சரியாக சொல்லிக் கொண்டு வந்ததாலேயே ஒருவனை காவல்துறை சித்திரவதை செய்வதும் பின்னர் ஏதும் நடக்காதது போல் மீண்டும் போட்டியில் கலந்து கொள்வதும் சற்றும் ஏற்கும்படியாக இல்லை. காவல்துறை விசாரிப்புகள் தொலைக்காட்சி செய்திகள் மூலம் யாவருக்கும் தெரியப்படுத்த படுகிறது.

அப்படியானால் பல கோடிகள் செலவழித்து போட்டி ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கே தமது போட்டியின் தயாரிப்பு முறையில் நம்பிக்கை இல்லையா?

மனித உரிமை கழகங்கள் என்று ஒன்று இருப்பதை கதாசிரியரும் தயாரிப்பாளர்களும் அறியாரா? நமது காவல்துறையினரும் வெற்றி பெற்று வரும் ஒரு அப்பாவியை துன்புறுத்தும் அளவுக்கு ஈவு இரக்கம் அற்ற கொடியவர்களா?

வாழ்க்கையின் அவலங்களை சித்தரிக்க ஆரம்பித்தால் அதற்கு எல்லையே கிடையாது.
நிஜங்கள் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்தி விடலாம்.

இந்தியாவில் மனிதாபிமானம் என்ற ஒன்று இல்லை, வெறும் பணவெறி பிடித்த சிலரின் ஆட்சிதான் நடக்கிறது என்பது போல் சித்தரிக்கப்பட்டிருப்பது மிகவும் அவமானகரமானது ஆகும்.

சிறுவர்களின் அபாரமான நடிப்பு, நல்ல காமிரா, திரைத் தொகுப்பு போன்ற பல தரமான அம்சங்கள் உண்டு. இந்திய படங்களின் ஃபார்முலா காட்சிகளும் உண்டு!

ஆனால் படத்தின் ஆரம்பமே மனதுடன் ஒட்டாததால் ஏதோ ஒரு படம் பார்த்தோம் என்றுதான் தோன்றியது.

இதே தரத்தில் மணிரத்தினம் மகேஷ்பட் ஷ்யாம்பெனகல் போன்றவர்கள் எடுக்கக் கூடியவர்கள்தான். ஆனால் அப்போது இந்த வரவேற்பு இருந்திருக்குமா அல்லது விருதுகள்தான் குவிந்திருக்குமா ?:((

ரஹ்மானின் இசையில் நமக்கு எதுவும் புதுமை தெரியவில்லை. (கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை ?) ஒரு வேளை வெள்ளைக்காரர்களுக்கு புதிதாக இருக்குமோ என்னமோ ? வெள்ளைக்காரன் சொன்னால் ”சரி”


surveyசனின் இடுகைக்கு பின்னூட்டமாக எழுதி, நீளம் காரணமாக தனிப்பதிவானது :)

Tuesday, January 13, 2009

உழுபவனுக்கு ஏது திருநாள் ?

உழுபவன் கணக்கு பாத்தா உழக்குக் கூட மிஞ்சாது.

பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விவசாயம் குறைந்து வருகிறது. அதை பலரும் சுட்டிக்காட்டி நம் நாட்டிலும் அந்நிலை வந்துவிடக்கூடாது என்று எவ்வளவு சத்தம் போட்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது நம் அரசியல் நிலைமை. உழவர் சந்தை போன்ற ஒரு சில நல்ல யோசனைகள் கூட வோட்டுக்கான திட்டமாகி அங்கும் தரகர்கள் பினாமி பேர்களில் இயங்குவதாகக் கேள்வி :(

பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கம், பட்டு உற்பத்தி கூட்டுறவு போல் கறிகாய் உற்பத்தி, நெல், பயிறு பிற தானியங்களுக்கும் கூட்டுறவு முறை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு வேளை பெரும் சுவான்தாரர்கள் இவற்றில் பங்கேற்காமல் தனியாக இயங்குவதால் ஒற்றுமை இல்லையோ என்னவோ.

சூரிய இந்திரரின் அருள் எல்லோருக்கும் பொது. உழைப்பின் பலன் உரியவர்களுக்கு போய் சேர்வது நாட்டிற்கு நலம் பயக்கும். கூடியவரை சந்தையில் சென்று விளைபவருக்கு பொருளின் விலை கொடுத்தால் அதுவே நாம் செய்யும் பெரும் உதவி.

வாழையை வளர்க்க வார்த்தோம் நீர்
விற்பனைக்கும் கேட்குது வியர்வை நீர்
பேரத்தில் பொழுதை கழித்திடுவீர் நீர்
எமக்கு பசியாறக்
கிடைப்பதோ ஒரு கோப்பை தேநீர்


உழுது விளைந்தால் போதாதய்யா
உழைப்பது சந்தை வரைத் தொடருதய்யா
வெயிலோ வெங்காயமோ, எம் மனக்காயம்
புரிந்தவர் எவரும் இல்லை அய்யா


அனைவருக்கும் பொங்கல் திருநாளின் நல்வாழ்த்துகள்