Friday, August 14, 2009

சுதந்திர தின விருது: மூன்று பதிவர்களுக்கு

இன்று சுதந்திர தினம். பத்ம விருதுகள் பற்றி பத்திரிக்கைகளில் விவரங்கள் வந்திருக்கும். அவர்களுக்கெல்லாம் ஒரு பாராட்டு.

நம் வலையுலகம் பெரிது. அதில் நாம் புழங்கும் வட்டமோ சிறிது. அந்த சிறிய வட்டத்திற்குள்ளே நாமறிந்த ஒரு சிலருக்கு விருது அளித்து சந்தோஷப் படுவோமே !

கவிநயா அவர்கள் எனக்கு இந்த விருது கொடுத்தாங்க. அதை சித்திரமும் கைப்பழக்கம் வலைப்பூவில் பொருத்தி விட்டேன். நமக்கு கொடுத்ததை நாலு பேரோட பகிர்ந்து கொள்ளணும். ஆனா இது தீபாவளி ஸ்வீட் மாதிரி. நாம் கொடு்க்கத் தயாரானாலும் வாங்க ஆளு கெடையாது. ஏற்கனவே ஆணியில நெறைய தொங்கிக்கிட்டு இருக்கு. மாட்ட எடம் இல்லைன்னு சொல்றவங்க நெறைய பேர்.

என்ன பண்ண? எப்படியோ மூணு பேரை கண்டு பிடிச்சிட்டேன். அவர்கள் எல்லோருமே Interesting Bloggers தான். மிகவும் பயனுள்ள தகவல்களை சுவையாக தருபவர்கள். அவர்கள் மறுக்காமல் என் விண்ணப்பத்தை ஏற்று கௌரவிக்க வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.




முதலாவதாக வின்சென்ட் ஐயா அவர்கள். அவருடைய ”மண் மரம் மழை மனிதன்” பலரும் அறிந்ததே. அவருக்கோ அவரது அருமையான பணிக்கோ அறிமுகம் தேவையில்லை. மிக அற்புதமான பல நல்ல தகவல்களை மேலும் தாங்கி வரவேண்டும் என்பது என் விருப்பம்.

வடுவூர் குமார் அவர்களின் கட்டுமானத்துறை பதிவுகள் நான் தொடர்ந்து படித்து வரும் ஒரு வலைப்பூ. அவருடைய கட்டுமானத்துறை இடுகைகள் யாவும் short & sweet. தொழில் நுட்பம் பற்றிய விவரங்கள் மட்டுமல்லாது தன்னைக் கவர்ந்த பல்சுவை தகவல்களையும் அவர் எந்த அலட்டலும் இல்லாமல் தருவது மிகவும் பிடிக்கும். சந்தேகம் இல்லாமல் இவரும் ஒரு Interesting Blogger தான்.

இன்னொரு சுவையான வலைப்பூ தர்ஷிணி அவர்களின் ”இன்று முதல்” . இவருடைய செயல்முறை விளக்கங்களுடன் கூடிய வண்ண வண்ண கைவினை கலைப் படைப்புகள் யாவும் மிகவும் மனதை ஈர்ப்பவை. அவை ஒவ்வொன்றின் பின்னும் இருக்கும் உழைப்பும் உற்சாகமும் போற்றப்பட வேண்டிய ஒன்று. எனவே இந்த விருது அவருக்கும் சாலப் பொருந்தும்.

இன்னும் சிலருக்குக் கொடுக்க விருப்பந்தான். ஆனால் என் வட்டம் மிகச்சிறியது ஆதலின் சிறிது காலம் பொறுத்திருந்து கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். குடியரசு தினம் ?

விருது பெற்றவர்கள் இந்த விருதை தமக்கு பிடித்தவர்களுக்கு அணிவித்து மகிழலாம்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்