Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்


தனி அஞ்சலில் தொடர்பு கொள்ள இயலாத அனைத்து வலைப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்

(வாழ்த்து அட்டை தனி வலைப்பக்கத்தில் திறக்கும்)

Monday, December 29, 2008

Scribe Fire: நேற்றைய குறை இன்று தீர்ந்தது

Scribe Fire பற்றிய முந்தைய பதிவில் படங்களை வலையேற்றுவதில் ஏற்படும் அளவு பிரச்சனை குறிப்பிட்டிருந்தேன். அதற்கான தீர்வு இன்று கிடைத்தது.
படங்களை வலையேற்றுகையில் Scribe Fire "max-width: 800 px வைத்து பிகாஸா வெப் ஆல்பத்திற்கு வலையேற்றுகிறது. பின்னர் வலைப்பக்கத்திலும் அதே அளவு படத்தை காண்பிக்கிறது. ஆனால் நம் வலை வார்ப்புருவில் (Template) உள்ள அகலம் அதை விட குறைவாக இருப்பதால் படத்தின் ஒரு பகுதியையே காண முடிகிறது.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்திற்கு வலையேற்றியபின் கிடைத்த நிரலி

<img style="max-width: 800px;" src="http://lh4.ggpht.com/_cQDFu3JrK0o/SVetJ4hFcmI/AAAAAAAAAXM/vWhtaEx2vmI/%5BUNSET%5D.jpg?imgmax=800" />

ஆனால் வலைப் பக்கத்தில் 800 px முழுவதுமாகக் காட்டப்படாது. அதனால் 800 px வரும் இடங்களில் 400 px என்று மாற்றிக்கொள்ளவும். இதை Edit HTML லில் சென்று செய்ய வேண்டும். அப்போது படம் அளவில் குறுக்கப்பட்டு சரியாக முழுவதுமாகக் காட்சியளிக்கும்.


(அளவில் குறுக்கப்பட்டப் படம்; இதை பெரிதாக்க இணப்பு இல்லை)

அடுத்ததாக முழு படத்தையும் பெரிதாகக் காண்பிப்பதற்கு இணைப்பு தர வேண்டும். அதற்கு படத்தை highlight செய்து Add a Link மெனுவை திறந்து நிரலியில் பட இணைப்பிற்கான பகுதியை மட்டும் உள்ளீடு செய்து Ok செய்து விடவும்.

மேலே உள்ள நிரலியில் இணைப்பிற்கான பகுதி :

http://lh4.ggpht.com/_cQDFu3JrK0o/SVetJ4hFcmI/AAAAAAAAAXM/vWhtaEx2vmI/%5BUNSET%5D.jpg


இப்போது மேலே உள்ள படத்தை ப்ளாகரில் பார்ப்பது போலவே பெரிதாக்கிப் பாருங்கள்.

வெற்றி !! வெற்றி !!!

இனி எந்த சிரமும் இல்லாமல் Scribe Fire பயன் படுத்தி மகிழுங்கள். :))

Sunday, December 28, 2008

நெருப்பு நரி பற்ற வைத்திருக்கும் ’தீ’

இடுகைகளை பிரசுரிப்பதற்கு முன்பே தங்கள் வலைப்பூவில் எப்படித் தெரியும் என்பதை முன்னோட்டமாகப் பார்க்க Fire fox தரும் add on மென்பொருள் Scribe Fire இப்போது உதவுகிறது.

இடுகைகளை வெளியிட பலர் பலவிதமான வழிமுறைகளை கையாளக்கூடும். நான் என் இடுகைக்கானக் கட்டுரைகளை தனியாக தட்டச்சு செய்து வைத்துக்கொண்டு பின்னர் ப்ளாகரில் கடவு சொல் மூலம் உள் நுழைந்து புது பதிவிற்கான பெட்டியில் நகலெடுத்து ஒட்டுவது வழக்கம். பலர் நேரடியாக மின்னஞ்சலில் செய்வதாகக் கேள்வி. அதை முயற்சித்து பார்த்தது இல்லை.

Blogger-ல் பதிவுக்கான பெட்டிக்குள் காணப்படும் எழுத்துருவுக்கும் வலைப்பூவில் காட்டப்படுவதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. மேலும் அது தரும் முன்னோட்டம் படு அபத்தம். படங்களுக்கும் எழுத்துகளுக்கும் இருக்கும் இடைவெளி மற்றும் பல பத்திகளுக்கு இடையே இருக்கும் இடவெளி இவற்றை பெட்டிக்குள் வைத்து முழுவதுமாக முடிவு செய்ய முடியாது. அதனால்
இடுகையை பிரசுரித்தப் பின்பும் பலமுறை மீண்டும் மீண்டும்- திருப்தியாகும் வரை- உள்ளும் வெளியுமாக அலைந்து சரி பார்த்து இறுதியான வடிவம் தர வேண்டியதாகிறது.

Scribe Fire இக்குறையை தீர்க்கிறது.

(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

இதன் முக்கிய பயன்கள்
:

1. உங்கள் முழு இடுகையையும் ஆன்-லைனில் வராமலே வலைப்பூவில் தெரிவது போல் முன்னோட்டமாகப் பார்க்க இயலும்.

2. Scribe Fire லிருந்து நேரடியாக வலைப்பூவில் பிரசுரிக்கவும் முடியும்.

3. உங்களுக்கு பல வலைப்பூக்கள் இருப்பின் எல்லா வலைப்பூக்களிலும் முன்னோட்டம் பார்க்க முடியும். அதற்கு ஒரே ஒருமுறை நீங்கள் ஆன் -லைனில் அந்த வலைப்பூவுடன் Scribe Fire மூலமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதன் பின் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், சேமித்து வைத்துக் கொண்டுள்ள வலைப்பூவின் வார்ப்புருவின் மூலம் அந்த இடுகை எப்படித் தெரியுமோ அதை அப்படியே முன்னோட்டமாகக் காட்டுகிறது.

4. இதிலிருக்கும் Tool bar அதிகமான பல உள்ளீட்டு கருவிகளை கொண்டுள்ளது.

5. நீங்கள் பிரசுரித்த இடுகைகள் அனைத்தையும் Posts என்ற பெயரிலும் தயாரிப்பில் இருக்கும் இடுகைகளை Notes என்ற பெயரிலும் சேமித்து வைத்துக் கொள்கிறது. இதனால் எல்லா பதிவுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரே சொடுக்கில் வந்து பார்க்க முடியும். சிதறிக் கிடக்கும் பல கோப்புகளுக்கிடையில் பழைய இடுகைகளுக்கான கோப்புகளை தேட வேண்டிய அவசியம் இல்லை.

(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

6. விளம்பரங்கள் மூலம் வருவாய் விழைவோர்க்கு உதவும் வகையிலும் திரட்டிகளில் நேரடியாக பிங் செய்யக்கூடிய வகையிலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளன.


முன்னோட்டம் Scribe Free பெட்டிக்குள்



(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

ஒரு பெரிய குறை: படங்களை ப்ளாகர் செய்வது போல் Auto size செய்வது இல்லை. API மூலம் வலையேற்றப்படும் படங்கள் பிகாசா வெப் ஆல்பம்-ல் Drop box என்ற பெயரில் சேகரிக்கப்பட்டு முழு அளவில் வலைப்பூவில் காட்டப்படுகிறது. அதனால் வார்ப்புருவின் அளவை விட பெரிதாக இருந்தால் பாதி படம் மட்டுமே காட்டப்படுகிறது. கீழே பார்க்கவும். இது Scribe Fire மூலம் வலையேற்றப்பட்டது.



ஆகையால் படங்களே இல்லாத அல்லது சிறிய அளவு படங்களுடைய பதிவுகளுக்கு Scribe Fire பெரும் பயன் தரும். பெரிய படங்களை காட்டவேண்டிய கட்டாயம் இருந்தால் Scribe Fire லிருந்து draft mode ல் வலையேற்றி பின்னர் ப்ளாகர் உள் நுழைந்து படங்களை தனியாக வலையேற்றி இடுகையின் கட்டமைப்பை சரி செய்ய வேண்டும்.

இப்போது அப்படித்தான் செய்திருக்கிறேன். :-)
Scribe Fire-ல் நான் விரும்பும் இப்போது இல்லாத இன்னொரு ஒரு வசதி, செய்த தவறைத் திருத்துவதற்கான Undo பொத்தான்.

பிற்சேர்க்கை :29/12/2008
படங்களை வலையேற்றுவதில் உள்ள பிரச்சனை தீர்க்கப் பட்டுவிட்டது. இதற்கு அடுத்த பதிவை காணவும்.

Tuesday, December 23, 2008

காக்கா கூட்டத்த பாருங்க,அதுக்கு சொல்லி கொடுத்தது யாருங்க

இரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) ஒரு ஆங்கிலோ இந்தியர். எழுத்து உலகில் மிகவும் புகழ் பெற்றவர். ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னரும் இந்தியாவிலேயே தங்கி விட்டர். அவர் எழுதும் கதைகள் கட்டுரைகள் உலக அளவில் பெரிதும் விரும்பி படிக்கப்படுகிறது.சாகித்திய அகடெமி விருது பத்மஸ்ரீ விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.

ஒரு காகத்தோடு உரையாடுவது போல் அவர் எழுதிய கட்டுரை ஒன்றை காண்போம்.

ஒரு காகம் எழுத்தாளனுக்கு வாழ்க்கைத் தத்துவத்தை போதிக்கிறது.

நம் நாட்டில் இது ஒன்றும் அதிசயம் இல்லை.காகபுசுண்டர் என்று ஒரு சித்தர். ஒரு காகத்தின் வடிவில் கல்லால மரத்திலிருந்து கொண்டு பல யுகங்கள் வாழ்ந்து கண்ட உண்மைகளையும் தத்துவங்களையும் புசுண்ட நாடி, காகபுசுண்டர் ஞானம், காகபுசுண்டர் காவியம்,காகபுசுண்டர் குறள் என்ற பெயர்களில் தொகுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

இப்போது ஆங்கில காக புசுண்டர் (Ruskin Bond) தத்துவத்தை பார்ப்போம்.


கோடை நாளில் ஒரு மாலை வேளை. ஊதா வர்ண மலைகளில் மழையைக் குறிக்கும் மேகம் சூழத் தொடங்கியிருந்தது. மேனி பளபளக்க ஒரு கரிய காகம் ஜன்னல் அருகே வந்தமர்ந்தது.

தலையை ஒரு புறமாகத் திருப்பி “ஏது! அய்யா இன்னிக்கி கவலையா இருக்காரு. நம்மாலெ ஏதாச்சும் முடிஞ்சா செய்யிறேன் “ என்று சொல்லி உரையாடலை ஆரம்பித்தது.
ஆடும் சாய்நாற்காலியில் மெதுவாக மேலும் கீழுமாக அசைந்து கொண்டு வாழ்க்கையின் ஓட்டத்தையும் ஏமாற்றங்களையும் அசைப்போட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்தால் அப்படித்தான் இருந்திருக்கும் போலிருக்கு. எதிர்பாராத அதன் வரவால் என் தனிமை கலைந்தது.

“மன்னிக்கணும், கேட்டது புரியலெ” என்றேன் பணிவாக.

இப்போதெல்லாம் தெரியாதவர்களிடம் பேசும்போது பணிவாக இருப்பது அவசியம். சிலரிடம் கத்தியும் துப்பாக்கிகள் கூட இருக்குமாம்.

“ஒண்ணுமில்லே.சும்மாதான், முகத்திலே சந்தோஷத்தை காணோமேன்னு கேட்டேன்.அவ்ளோதான்” என்றது காகம்.

“நிஜம் தான்,அதுக்கு யாரும் எதுவும் செய்யமுடியாது. அது உனக்கு சம்பந்தப்பட்ட விஷயமும் அல்ல” என்றேன்

“அதை மட்டும் சொல்லாதே “

”அப்படீன்னா ? ....இப்போ என்ன சொல்ல வர்றே ?”

“இதோ பார்.நானும் மனுஷனா இருந்தவன் தான். சாங்-சு வோட சீடனாயிருந்தேன்; எபிக்டஸ்-ஸோட ஃபிரெண்டாயிருந்தேன். புராணத்துல கஷ்யபன் காலத்திலேந்து எல்லாத்தையும் பார்த்தவனாக்கும் !”

“என்ன அதனாலே.இப்ப நீ காக்கா தானே. இதுவா முன்னேறுகிற லட்சணம்?”

“தெரியாத்தனமா போன ஜன்மத்துல அரசியல்ல புகுந்துட்டேன். அதனால வந்த வினை. இந்த பிறவியில கொஞ்சநாள் காக்காயாக சுத்தணும். நிஜம்மா பாத்தா காக்காய் ஜன்மம் ஒண்ணும் மோசமில்லை. வேணுமின்னே எங்களுக்கு ஒரு கெட்ட பேரு காக்கா-கூட்டமின்னு. எல்லா பறவைகள விடவும் எங்களுக்கு புத்திசாலித்தனமும் பொழச்சுபோற குணமும் அதிகம். அந்த பொழைக்கிற வழி தெரியாமத்தானே நீ தவிக்கிறே.”

அட ! கரெக்டா பாய்ண்டப் புடிக்குதே இந்த காக்காய். எழுத்தாளனா பொழைப்பு நடத்துணமின்னா ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கு.

”என்னாலே என்னென்ன முடியுமோ அவ்வளவும் செய்துகிட்டுதான் இருக்கிறேன்”

மெல்ல ரெண்டு தத்து தத்தி பக்கத்தில் வந்தது.

”அது தான் நீ பண்ற தப்பு. வெறும் உழைப்பு உழைப்புன்னு இருந்தா வெற்றி வந்திடுமா? எவனொருத்தன் ரொம்ப குறைச்சலா செஞ்சு ரொம்ப அதிகமா பயனடைவானோ அவன் தான் நிஜம்மாலுமே வெற்றி பெற்றவனாக்கும்.”


“எழுதாமையே பெரிய எழுத்தாளனா எப்படி ஆக முடியும்?” என்றேன் காரமாக.

“தப்பா புரிஞ்சுக்கிட்டே நீ. நான் சோம்பேறி யா இருக்கச் சொல்லவில்லை. எங்கேயாவது சோம்பேறி காக்காயைப் பார்த்திருக்கியா? பார்த்திருக்க முடியாது. சரி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிற காகத்தையாவது பார்த்திருப்பியா ? அதுவும் முடியாது. ஆனா எங்களுக்கு எப்பவுமே எல்லாத்துலேயும் ஒருகண் இருந்துகிட்டே இருக்கும். அதுதான் சமய சந்தர்ப்பம்.”

இன்னும் சற்று அருகே தத்தி வந்து கையில் வைத்திருந்த ரொட்டித்துண்டை லபக்கென்று இழுத்தது.

“பார்த்தியா, எனக்கு வேண்டியது கிடைச்சுதா இல்லியா! அதுவும் கஷ்டப்படாமலே. கவனிக்க வேண்டியது என்னான்னா சரியான சமயத்தில சரியான இடத்தில இருக்கணும்.”

எனக்கு அது செஞ்சது பிடிக்கவில்லை.

“ஆமாம் ஆமாம், அடுத்தவனோட தீனியைப் பிடுங்குவது தான் உன் வழி என்றால் அது எழுத்தாளனுக்கு எப்படி பொருந்தும்? அடுத்தவங்களோட எழுத்தை காப்பி அடிக்கச் சொல்லிறியா?”

“அதை செய்யிறவங்களும் நிறைய பேர் இருக்காங்க. ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல. கொஞ்சம் விவரமானவனா இரு அப்படீன்னு தான். ரொம்ப பேரோட-எழுத்தாளனும் அதில் அடங்கும்- பிரச்சனை என்னான்னா அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் தான். ஒரு ரொட்டித்துண்டு போதும்னு சும்மா இருக்காமே ஒவ்வொரு சாப்பாட்டையுமே பெரிய கல்யாண விருந்தா எதிர்பார்க்கிறீங்க. எங்கேயாவது முடியுமா? இதுதான் நீங்க செய்யிற முதல் தவறு ”

ரெண்டாது மிஸ்டேக் என்னான்னா ’விரட்டி’கிட்டே போறது. பெரியவரே நான் சொல்றது எழுத்தாளனுக்கு மட்டுமில்லே எல்லாருக்கும்தான். எல்லாருமே என்ன வேண்டுறோம்? வெற்றி வெற்றி. இப்ப நான் ஒரு வெற்றிகரமான காக்கை; நீ ஒத்துகிட்டாலும் இல்லாட்டியும் அதுதான் நெஜம்.நாம் தேடறது கெடச்சுட்டா அது ’வெற்றி’. பொறுத்திரு,பார்த்திரு,அடைந்திடு. எல்லாத்தையும் சேர்த்து என் கொள்கைன்னு சொல்லணும்னா ’விழித்திரு.

நான் வேட்டையாடி தின்னும் பறவையுமில்லை.நீயும் வேட்டையாடும் மிருகமும் இல்லை. அதனால்தான் துரத்தி பிடிச்சு வெற்றி அடைவது என்பது முடியாத காரியம். எப்படி வேட்டையாடப் படுகிற பிராணி தப்பிச்சு ஓட பார்க்குமோ நாம் துரத்துற சமாச்சாரமும் நம்மை விட்டு ஓடத்தான் பார்க்கும். இந்த வெற்றியும் அப்படிதான். நீ எவ்வளவு வேகமா புடிக்கப் பாக்குறியோ அவ்வளவு வேகமா ஓடும்.”

”இப்போ என்ன செய்யணுமிங்கிறே? புத்தகம் எழுதிட்டு மறந்து போ ன்னு சொல்றியா?”

”சரியா சொன்னே.மறந்து போ ன்னு சொல்லமாட்டேன். உலகத்தோட மூலை முடுக்குக்கெல்லாம் அனுப்பி வை.ஆனா ரொம்ப பெரிசா எதையும் எதிர்பார்க்காதே. அதையே நெனச்சு புலம்பிக்கிட்டு இருக்காதே. அதுதான் மூணாவது தப்பு. வராததை நெனச்சுக்கிட்டு புலம்புறது. எப்ப புலம்ப ஆரம்பிக்கிறியோ அப்போ மூளைக்கு வேற எதையும் யோசிக்கிற சக்தி போயிடும்”

“உம்.நீ சொல்றதும் சரிதான். நான் கவலைப்படுற ஜென்மம் தான்”

“தப்பு.பெரிய தப்பு. எதப்பத்தி கவலைப் படுறே?”

“எவ்வளவோ சின்னச் சின்ன விஷயங்கள்”

“பெரிசா எதுவும் ?”

“இப்போதைக்கு இல்லே”

“ஆனாலும் பெரிசா ஏதோ கெட்டது நடக்கப் போவுதுன்னு ஒரு பயம் ?”

“முன்கூட்டியே எதிர்பார்த்திட்டா மனசு தயாரா இருக்குமில்ல “

“எங்க அகராதியில அது கெடையாது. நாங்க எப்பவுமே நல்லதயே எதிர்ப்பார்போம்”

கொஞ்சம் நகர்ந்து பீர் குவளைக்குள்ளே தலைய விட்டு பீரை உறிஞ்ச ஆரம்பித்தது.

“ஆமா பீர் குடிக்கிறதுக்கு காசு இருந்தா வசதியா இருக்கேன்னுதான்ன அர்த்தம்”

“நான் ஒண்ணும் தினம் குடிக்கிறது இல்லை. அது சரி என்மேலே உனக்கு என்ன அவ்வளவு அக்கறை ?”

காகம் கழுத்தை ஒரு பக்கம் சாய்த்து பார்த்தது

“உன்னை எனக்கு பிடிச்சிருக்கு அதனாலத்தான். நீ எங்க வர்க்கத்துக்கு தொந்தரவு செய்யறது இல்லை”

“நான் உங்க வர்க்கத்தை அதிகமா கண்டுகிட்டது கிடையாது”
“ அடப் பரிதாபமே. எவ்வளவு விஷயம் எங்ககிட்ட கத்துக்கறதுக்கு இருக்கு! சுதந்திரம்,பொழைக்கிற வழி,ஜாலியா இருக்கறது இப்படி எத்தனையோ! எங்களைப்பத்தி எழுதாத பெரிய எழுத்தாளனே இருக்க முடியாதே. ஹூம் “

பீரை இன்னொரு தடவை உறிஞ்சி இறக்கையை ரெண்டு முறை படபடத்து விர்ரென்று மேலே கிளம்பி பக்கத்துல இருக்கிற பிரியாணி கடை பக்கமாக பறந்தது.

(Delhi is not Far by Ruskin Bond. Penguin Books ISBN:0-14-024606-1)

Sunday, December 14, 2008

BOSS பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் !

இது ’சிவாஜி த பாஸ்’ பற்றி அல்ல.

அல்லது என்னோட பாஸ் பற்றியதும் அல்ல !

நான் கேட்க விரும்புற BOSS, பாரத் ஆபரேடிங் சிஸ்டம் சொல்யூஷன்ஸ்-ங்கற C-DAC அறிமுகப்படுத்தியிருக்கிற புது மென்பொருள் பற்றியது. லினெக்ஸ் திறந்த கட்டற்ற மென்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இதன் முக்கிய நோக்கம் இந்திய மொழிகளில் கணிணி பயன்பாட்டை விரிவாக்குதல் ஆகும்.

இதில் கட்டளை நீட்சிகள் எல்லாம் தமிழ் மற்றும் இந்தி போன்ற இந்திய மொழிகளிலே காணக் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

லினக்ஸ் சார்ந்த டெபியன், உபுண்டு போன்ற சேவைகளால் இது முடியாததாகையால் இது முக்கியத்துவம் பெறுகிறது

இதில் Fire fox 3.0 உலாவியும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டிருப்பதாகவும் 18000 பலவேறு மென்பொருட்கள் தரவிறக்கம் செய்து பரவலாக பயன் படுத்த் முடியும் என்றும் c-DAC வல்லுனர்கள் கூறுகிறார்கள். மேலும் வலையுலகில் வலம் வர மிகவும் பாதுகாப்பானது என்றும் சொல்கிறார்கள்.

இதை யாரவது நமது வலையுலக நண்பர்கள் பயன் படுத்தியிருந்தாலோ அல்லது அனுபவங்களை ஏற்கனவே பதிந்திருந்தாலோ அதற்கான இணைப்புகளை கொடுத்தால் என் போன்ற வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சில ஆங்கில குழுமங்களில் தேடிய விவரங்கள் பயனளிப்பதாக இருக்கவில்லை.

ஹைதராபாத்தில் இம்மாதம் 18 ஆம் தேதி இலவச விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு வலைப்பக்கம் மூலமாகவே பதிவு செய்து கொள்ள முடியும். அங்கு வசிக்கும் நண்பர்கள் இதை பயன் படுத்திக்கொள்ளவும். இலவச குறுந்தகடுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது !!

எப்படியோ கிராம கிராமங்களுக்கும் கணிணியை கொண்டு செல்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றம் வந்திருப்பது மகிழ்ச்சி

Wednesday, December 10, 2008

கூகிள் க்ரோம் தந்த அதிர்ச்சி

இன்று மாலை கூகிள் க்ரோம்-ல் HDFC வங்கிக் கணக்கை Net Banking ல் திறந்து வேண்டியவர் ஒருவரின் இன்னொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த விழைந்தேன்.
Third party transfer ஆதலால் அவருடைய பெயரை நேற்றே பதிவு செய்து,அவர்கள் சொல்லியிருந்தபடி 24 மணிநேரம் கழித்து ஒப்புதல் இருப்பின் பணம் செலுத்த வேண்டும் என்பதால் ஒப்புதலை அறியவும் பணம் செலுத்தவும் முறைப்படி உள்நுழைந்தால் எனக்கு அதிர்ச்சி.
மூன்றாமவருக்கான பணம் மாற்றுவதற்கான நீட்சி (menu) காணப்படவில்லை. Sidebar menu விலும் காணப்படவில்லை.

ஏதேனும் தவறாகி அந்த வசதியே முடக்கப்பட்டுவிட்டதா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில் இது நான் கல்லூரியில் படிக்கும் என் மகனுக்காக தொடர்ந்து உபயோகித்துவரும் ஒரு சேவை. ஆகையால் முடக்கப்பட்டு விட்டால் பல பிரச்சனைகள் ஏற்படுமே என்ற கவலைத் தொற்றிக்கொண்டது.

சரி, உள் நுழையும் போதே ஏதேனும் கவனிக்காமல் விட்டிருப்போமோ என்று ஒருமுறை வெளியேறி மீண்டும் கவனமாக ஒவ்வொரு அடியையும் கவனித்து சரிபார்த்து உள்நுழைந்தேன். திரும்பவும் அதே பிரச்சனை.

ஏதடா இது மதுரைக்கு வந்த சோதனை யாரிடம் முறை போக வேண்டும் என்று யோசித்தேன். நேற்றுவரை சரியாக இருந்தது இன்று எப்படி மாறிவிடும் ? பளிச்சென்று ஒரு உண்மை புரிந்தது. நேற்று உட்புகுந்தது Firefox உலாவியில். இன்று Chrome-ல்!!

இன்னுமொருமுறை நரியாரை தூது விடுவோம் என்று Firefox மூலம் உட்புகுந்தால் எல்லா நீட்சிகளும் (மெனுக்களும்) அழகாக இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன.


வந்த வேலையை முடித்துவிட்டு firefox லிருந்து வெளியேறி மீண்டும் GOOgle Chrome-ல் உட்புகுந்தால் பழைய கதைதான். மேலிருக்க வேண்டிய நீட்சிகள் காணப்படவில்லை.
இந்த பிரச்சனை வங்கியைச் சேர்ந்த வலைத்தள அமைப்பாளர்கள் சரி செய்ய வேண்டியதா அல்லது கூகிள் க்ரோம் சரி செய்ய வேண்டியதா ?

நிபுணர்கள் இதை சம்பந்தப் பட்டவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றால் பலருக்கும் உதவியாக இருக்கும்.

Tuesday, December 2, 2008

அமைதிக்கு திறவுகோல்- தாயின் அன்பு

God could not be everywhere and therefore he made mothers. ~Jewish Proverb

அமைதியை தேடித் தவிக்கும் மக்கள் அதற்கான திறவுகோலை தம்மிடமே வைத்துக் கொண்டு வெளியே தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Men are what their mothers made them. - Ralph Waldo Emerson

All that I am, or hope to be, I owe to my angel mother. - Lincoln

Let France have good Mothers, and she will have good sons. - Napoleon

ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பலர் போற்ற வாழ்வதைக் காண ஆசைப்படுவாள். அவள் தன் மகனோ மகளோ வன்முறையில் ஈடுபட்டு பலருக்கும் துன்பம் விளைவித்து தனக்கும் துன்பம் தேடிக்கொள்வதை விரும்புவாளா ?

குறிக்கோள் எவ்வளவே உயர்வாயினும் அதை அடைய தீவிரவாதம் முறையான வழியாகது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் சமூக விரோதிகள்.

வன்முறையை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியே கதியென்றிருக்கும் லட்சக்கணக்கான தாய்மார்களிடம் இந்த உணர்ச்சிகளை அழுத்தமாகத் தூண்டிவிட வேண்டும்.

அந்த அடிப்படையில், செப்டெம்பெர் 11-ல் விளைவிக்கப்பட அழிவிற்கு பிறகு, அக்கருத்தை மையப்படுத்தி ஒரு சிறு விளக்கப்படம் ஒன்றை 2001-ல் தயாரித்து அதை ஒரு வலைப்பக்கத்தில் போட்டு வைத்திருந்தேன். இப்போது மும்பய் வன்முறை கண்ட பிறகு அதன் அவசியம் இன்னமும் அதிகமானது போல் உணர்கிறேன். அதனால் அதை இந்த வலைப்பக்கத்திலும் ஒரு முறை இணைத்து விடுகிறேன்.

Power of the Mother
View SlideShare presentation or Upload your own. (tags: fraternity peace)



மதிப்பிற்குரிய மேதகு அப்துல்கலாம் அவர்கள் தன் தாய்க்கு சூட்டும் நன்றிக் கவிதையையும் படியுங்கள்

Mother

My Mother, you came to me like heavens carrying arms,
I remember the war days when life was challenge and toil-

...

All this pain of a young boy
My Mother you transformed in to pious strength
With kneeling and bowing five times
For the grace of the Almighty only my Mother
Your strong piety is your children's strength
You always shared your best with to whoever needed the most,
You always gave and gave with faith in him,

I still remember the day when I was ten,
Sleeping on your lap to the envy of my elder brothers and sisters.
It was full moon night, my world only you knew Mother!, My Mother!
When at midnight, I woke with tears falling on my knee
You knew the pain of your child, My Mother.
Your caring hands, tenderly removing the pain
Your love, your care, your faith gave me strength,
To face the world without fear and with His strength.
We will meet again on the great Judgment Day. My Mother!

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் புரிவாரோடு இணங்க வேண்டாம் -- உலகநீதி