tag:blogger.com,1999:blog-43708112257859236012024-03-13T07:03:55.001-07:00கற்கை நன்றேபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger142125tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-69543553855436801962023-12-14T19:08:00.000-08:002023-12-14T19:08:26.838-08:00ஹைடிரோபானிக்ஸ்- என் பரிசோதனைகள்-2<p> இதன் முதல் பகுதியில் நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் தாவரங்களை வளர்ப்பதன் மேன்மைகளைச் சொல்லி அதில் என் ஆரம்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். </p><p><a href="http://nirmal-kabir.blogspot.com/2018/07/1.html" target="_blank">அதைப்பற்றி தெரிந்து கொள்ள..... </a></p><p>இதை எழுதி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் என் பரிசோதனைகளை சிறிய அளவில் நடத்திக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை. என் வீட்டு மாடியில் மழைநீர் சேகரிப்பு, Green House 130 சதுர அடி என சில முஸ்தீபுகளை செய்து கொண்டு தீவிரமான முயற்சியில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் பிடித்தது. </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj2sifU0qLWW-jkWJlMcCl8nuGy13rbG52Did1tRV_Up1nbRQi2A5Dony5TyrSD_Y3h2hfX5sDe8WPtGeEvhkoaK_IePIYuxItvfNAdhx_UMAvzBuw0j6pIqFGPHhpkAhmomi-WrHAhwM1rvk_9j-rkU4wRNEpaAkVjzEdtYnr6D2LT1_srmB6XCeYeV8/s1170/tower_cultivation.jpeg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="1170" data-original-width="540" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj2sifU0qLWW-jkWJlMcCl8nuGy13rbG52Did1tRV_Up1nbRQi2A5Dony5TyrSD_Y3h2hfX5sDe8WPtGeEvhkoaK_IePIYuxItvfNAdhx_UMAvzBuw0j6pIqFGPHhpkAhmomi-WrHAhwM1rvk_9j-rkU4wRNEpaAkVjzEdtYnr6D2LT1_srmB6XCeYeV8/s320/tower_cultivation.jpeg" width="148" /></a></div>க்ரீன் ஹவுஸ் ஏன் தேவைபடுகிறது என்றால் திறந்த வெளியில் அதிக காற்று மழை அடிக்கடி பாதிப்பு ஏற்படுத்துவதால் நமக்கு சரியான முடிவுக்கு வரமுடியாமலே பரிசோதனை கெட்டுப் போய் விடுகிறது. <p></p><p>குறைந்த இடத்தில் அதிகப்பயிர் என்னும் படியான தொழில்நுட்பத்தை க்ரீன்ஹவுஸ்-னுள் புகுத்திப் பார்க்க- Tower Cultivation எனப்படும்- நெட்டையான குழாய்களில் வளர்க்கும் முறையை இணையத்தின் மூலம் வாங்கி என்னுடைய புதிய சோதனைகளை இந்த வருடம் மே மாதக் கடைசியில் ஆரம்பித்தேன்.</p><p>இது நம் கோவில்களில் உள்ள கொடிமரத்தை நினைவுபடுத்துவதால் கொடிமரக்குழாய் வளர்ப்பு என்றே பெயரிடுவோம்.</p><p>கொடிமரக் குழாயின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீர் இறைப்பான் ( submersible pump) நீரை மேலிருந்து -உட்புறத்தில்-வடிய செய்வதால் நீரின் சுழற்சியில் செடிகளுக்கு தேவையான நீர் (அதன் மூலம் ஊட்டச்சத்து) மற்றும் பிராணவாயு தொடர்ந்து கிடைக்கிறது. ஐந்தரை அடி உயரமுள்ள குழாய்களில் 32 செடிகளுக்கு இடம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் செயல்முறையை பல டியூப் சானல்களில் காணலாம்.</p><p>இதிலுள்ள பம்பு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. செடிகளின் வேர்களில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் நான் 'இரண்டு நிமிடம் இறைப்பு' 'பத்து நிமிடம் ஓய்வு' என்ற சுழற்சி முறையை ஒரு Timer மூலம் நடைப்படுத்தினேன்.</p><p>மிக மிக திருப்திகரமாக வேலை செய்து வருகிறது. 18 வாட்ஸ் பம்பு ஒரு நாள் முழுதும் இந்த சுழற்சியில் ஓடினால் ஆகும் மின் அளவு 72 Wh. அதாவது இரண்டு வாரங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.</p><p>மேலும் க்ரீன் ஹவுஸ் உள்ளேயே இருப்பதால் பூச்சித் தாக்குதல் அறவே இருக்கவில்லை. ஆவியாகும் தண்ணீரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அளவு பார்த்து நிரப்பவேண்டும். இது ஒரு நாளைக்கு 2 லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. மாதம் ஒன்றிற்கு 70 முதல் 80 லிட்டர் அளவிலேயே தேவைப்பட்டது. இதற்கு நான் சேமித்து வைத்திருக்கும் மழைநீரையே முழுவதுமாக பயன்படுத்தினேன்.</p><p>தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கரைசல் ஒரு லிட்டருக்கு 300 லிருந்து 400 மிகி மட்டுமே. 15 லிட்டர் கரைசலுக்கு தேவைப்படும் NPK கூட்டு உரத்தின் அளவு 6.00 முதல் 10 கிராம் மட்டுமே. இதில் வீணாய் போகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாதத்திற்கு 100 லிட்டர் என்று வைத்துக் கொண்டாலும் 40 கிராம் உரத்திற்கான விலை ரூபாய் ஐந்திற்கும் குறைவே. இப்படியாக எப்படிப் பார்த்தாலும் சிக்கனமான வளர்ப்பின் பயனை உணர முடிந்தது. </p><p>ஒரே சமயத்தில் எட்டு விதமான செடிகளை கொடிமரக் குழாயில் வளர்க்க ஆரம்பித்தேன். அதில் கீரை வகைகள் இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளேயே வளர்ந்து அறுவடைக்கு வந்துவிட்டன. அதற்குள் தக்காளி சாமந்தி போன்றவை கிளை பிரிந்து இலைகள் பெரியனவாகி வேறு செடிகளை வளரவிடாமல் தடுத்து விட்டன. கீழே உள்ள தொகுப்பில் அவற்றின் வளர்ச்சியைக் காணலாம். </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_b759zQv7iWIPQqWx4WPSE-nhPXRsLcnCXiS4SoTTPvq1_b4sjUJUlz7ZMJzwc9Vsj5bOnpTWegTKAMJJBodG9j5yFu35_j3G4nicSZBJF1Agz3doM4iNM1HW91SHvfGDK1tDc2JxOLrh-veHtAhfcEoymh1mId7OEQKt_U0O0fDEwkpE8XoZQfCJbhg/s1676/hydroponic_summary1.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="1676" height="305" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_b759zQv7iWIPQqWx4WPSE-nhPXRsLcnCXiS4SoTTPvq1_b4sjUJUlz7ZMJzwc9Vsj5bOnpTWegTKAMJJBodG9j5yFu35_j3G4nicSZBJF1Agz3doM4iNM1HW91SHvfGDK1tDc2JxOLrh-veHtAhfcEoymh1mId7OEQKt_U0O0fDEwkpE8XoZQfCJbhg/w400-h305/hydroponic_summary1.png" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><i><span style="color: #2b00fe; font-size: xx-small;">(படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்)</span></i></div><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYmdWIbHqBO3xi4FMgv2OoDqHuKfrozXYTV91IB94dBCYU573MHLyl4LycNUFKZ3faIHJxfvDrCrFXVtvN2S_oaN-g7T9Hc-_x8Mc2RfknMA0R-tOGt5dR2xnUkM_Zfnnu3yRIkzADMZyONyX-6etltopxScGiuZe9U2M8WQmSc2BYuiwd2-21AYvZLJQ/s1453/hydroponic_summary2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="687" data-original-width="1453" height="189" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYmdWIbHqBO3xi4FMgv2OoDqHuKfrozXYTV91IB94dBCYU573MHLyl4LycNUFKZ3faIHJxfvDrCrFXVtvN2S_oaN-g7T9Hc-_x8Mc2RfknMA0R-tOGt5dR2xnUkM_Zfnnu3yRIkzADMZyONyX-6etltopxScGiuZe9U2M8WQmSc2BYuiwd2-21AYvZLJQ/w400-h189/hydroponic_summary2.png" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"> கடந்த ஆறு மாத காலத்தில் என் அனுபவம் உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. பூச்செடிகளான காசித்தும்பை, துலுக்க சாமந்தி, பூஜைக்கான துளசி, தும்பை, கீரைவகைகளான புதினா, பாலக், செர்ரி டொமேடொ எனப்படும் சிறிய வகை தக்காளி ( <span style="font-size: x-small;"><i>இன்னமும் காய்த்துக் கொண்டிருக்கிறது!</i></span>) என்பதாக பலவகை செடிகளின் மிக ஆரோக்கியமான வளர்ச்சியை காணமுடிந்தது. மேலும் வேர்தாக்கலால் வரக்கூடிய நோய்களும் இருக்கவில்லை. </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">அடிக்கடி வெளியூர்களுக்கு போவதானாலும் "தண்ணீர் விட வேண்டுமே... செடிகள் காய்ந்து விடுமே" என்ற கவலையில்லை. </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">இதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் குழாயினுள் எல்லாச் செடிகளின் வேர்களும் மிக அடர்த்தியாக வளர்ந்து பின்னிப்பிணைந்து கொள்கின்றன. இதனால் சில செடிகளை அதன் காலம் முடிந்ததும் எடுத்துவிடலாம் என்றால் சிக்கல் இன்றி எடுக்க முடிவதில்லை.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: right;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtOZDJndS7GioZUmBoh6obiK_LII0Mbfddr7KMYMKumAQsrnGjmKjLGXURdqoS9z7ytEwoqXb2bReorcEKy5MLkwbDj-nHVa8o7R2FJ6-MJoPsb-wpxtPn7sb_DNFJnbQRa0XD_G7LeKycATQu9fkPClh_K5je8hn2APEJuWAw1rP03oVvqaW9MrZhv2Q/s2992/20230622_173045.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2992" data-original-width="2992" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtOZDJndS7GioZUmBoh6obiK_LII0Mbfddr7KMYMKumAQsrnGjmKjLGXURdqoS9z7ytEwoqXb2bReorcEKy5MLkwbDj-nHVa8o7R2FJ6-MJoPsb-wpxtPn7sb_DNFJnbQRa0XD_G7LeKycATQu9fkPClh_K5je8hn2APEJuWAw1rP03oVvqaW9MrZhv2Q/w200-h200/20230622_173045.jpg" width="200" /></a></div>அடுத்ததாக தொட்டி வளர்ப்பில் குத்தாக வளரும் செடிகள் இந்த கொடிமரக்குழாயில் கோணலாக வெளிவந்து பின்னர் நிமிரத்தொடங்குகின்றன. இதனால் பெரிய இலையுள்ள பாலக் போன்ற செடிகள் சிறிய இலை கொண்ட கொத்துமல்லி புதினா இவற்றின் வளர்ச்சியை பாதிக்கின்றன. கொடிமரக் குழாயைப் பயன்படுத்தும் வகைகளை நிதானமாக முறைப்படுத்தி குறுகிய காலத்தில் அதிகப் பயனடைவது எப்படி என்று கண்டறிவதே அடுத்த கட்ட பயணம்.</div><div class="separator" style="clear: both; text-align: left;">குறிப்பாக வேறு காய்கறி செடிகளை எப்படி பயிரிடலாம், அவை எல்லாவற்றின் ஊட்டச்சத்துத் தேவைகளும் ஒரே மாதிரி இருக்குமா எந்த செடிகளோடு எவை எவை ஒத்துப்போகும் எனப்பலவகையான கேள்விகள் எழுகின்றன.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">அடுத்த பொங்கலுக்குள் (2024) மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டம் போட்டு செயல் படுத்த வேண்டும். ஏனெனில் பல வகை செடிகளின் பலனளிக்கும் காலமே 60 அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தான் தொடங்குகிறது. அதுவரை புசு புசு என்று அடர்த்தியாக வளரும் இலைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகளை கத்தரிக்கலாமா வேண்டாமா என்ற கவலை என்போன்ற அனுபவமில்லாதவர்களுக்கு ஏற்படும்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">எல்லாமே ஒரு நல்ல படிப்பினைதான். </div>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-90288005803770324572023-12-06T01:38:00.000-08:002023-12-06T01:48:02.978-08:00காணறியா இறைவன் சூது<p> அந்த காலத்தில் 16 m.m. திரையில் எங்கள் காலனியில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை திறந்த வெளியில் திரையிடும் போது பல வேடிக்கைகள் நடக்கும். அடிக்கடி ரீல் அறுந்து போகும். ஏற்கனவே படம் பார்த்திருப்பவர்கள் அதற்கான உரையாடல்களை கூடவே சொல்லிக் கொண்டு போவார்கள். படத்தை விட பார்க்க வந்திருப்பவர்களின் வைபோகமே அதிகம்.</p><p> ஒரு முறை நான்கு வயது சிறுவன் சுற்றியிருந்த இருளும் திரையில் படமும் புரியாததாலோ என்னமோ திரும்பி நின்று கொண்டு "அம்மா லைட்' 'அம்மா லைட்" ப்ரொஜக்டரைக் காட்டிக் கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தான். (அந்த வெளிச்சம் பரவாமல் ஏன் யாவரும் இருட்டில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வியே அவனுள்ளத்தில் இருந்திருக்குமோ ?) சிறிய துவாரத்தின் மூலம் வெளியான அவ்வெளிச்சம் தான் திரையில் காணும் காட்சிகளுக்கு காரணம் என்பது அவனுக்கு புரியவில்லை. "ஆமா ஆமா லைட் தான் படுத்து தூங்கு" என்று சிரமப்பட்டு அவனை தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள் அவனுடைய தாயார். </p><p>"Go to the source " என்பது ஆன்மவிசாரம் செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை. ஆன்மாவின் ஒளிதான் தேகம் மற்றும் உலகத்தின் இயக்கத்திற்கே அடிப்படை. அதை கவனிக்க ஆரம்பித்தால் உலகம் என்ற திரை நம் முதுகு பக்கமாகி நம்மை பாதிக்காது. இதையே அந்தர்முகம் என்று தியானவகுப்பில் சொல்கின்றனர். </p><p>அந்த கவனிப்பு நீளும் அளவு மனம் கொந்தளிப்புகள் அடங்கி குளிர்ந்து இருக்கும். இதன் அவசியத்தை டி.வி.ஜி. அவர்கள் மக்குத் திம்மன் கவிதை ஒன்றில் அழகாக உரைக்கிறார்.</p><p>இனியென்ன மற்றென்ன, கதி ஏது எனப் பதறினும் </p><p>விதியதன் எழுது கோலும் உளதோ உன் கையில் ? </p><p>கண்களுக்கு எட்டாது அவன் நடத்தும் சூது</p><p>குளிர்ந்திருப்பாய் உன் ஆன்மாவிலே- மன்கு திம்மா.</p><p>திரையில் ஓடும் காட்சிகளோடு மனம் ஒன்றியிருக்கும் போது கதையின் போக்கு திகிலூட்டக்கூடும். ஆனால் அதிலிருந்து விலகிடும் போது மனதை திரைக்கதை பாதிப்பதில்லை. </p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9QSpUfj_xdg6DarXILhL3bpH_COpAMH8JtRoQFTgB3a2ruyb8_T24yDVo5eckJiNaADgN7DtPSNIyOOzyLMeivojGiF-3Ha9Dpa_dY_d7PL6ChD7ylo5kEsC0pWgcV0ehkw-cD5J2B0Zm83czWLjMhjwlfX_wMCWs39qEdPmHf8S1f19CuvPqIMXyfDs/s1320/zen_monk_2.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="1320" data-original-width="588" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9QSpUfj_xdg6DarXILhL3bpH_COpAMH8JtRoQFTgB3a2ruyb8_T24yDVo5eckJiNaADgN7DtPSNIyOOzyLMeivojGiF-3Ha9Dpa_dY_d7PL6ChD7ylo5kEsC0pWgcV0ehkw-cD5J2B0Zm83czWLjMhjwlfX_wMCWs39qEdPmHf8S1f19CuvPqIMXyfDs/w179-h400/zen_monk_2.jpg" width="179" /></a></div>உலக விசாரங்களில் நம் மனதின்படி முடிவுகள் வராமல் போய்விட்டால் அதை சுலபமாக மனம் ஏற்றுக் கொள்ளாமல் தவிப்பை அதிகமாக்கிக் கொள்கிறது. இறைவனின் இச்சைப்படிதான் இந்த உலகில் எல்லாம் நடக்கிறது என்ற போக்கை கடைபிடித்தால் மனமும் போராட்டங்கள் இல்லாமல் குளிந்திருக்கும். அதற்கான வழிதான் ஆன்மாவில் கவனம் செலுத்துவது என்கிறார் திரு குண்டப்பா அவர்கள்.<p></p><p>இதே உண்மையை ஜென் கருத்தும் எவ்வளவு பொருத்தமாக எடுத்து சொல்கிறது !! 'நாம் முடிவு செய்பவர் அல்லர்' என்பதை புரிந்து கொண்டால்</p><p>"....your struggles with life will end " </p>பாடலின் மூலமும், தமிழில் முயற்சியும் :<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkMoihr4PCy94p9kFb9qaZ9BNorh5g-dIkfB4sfxxaO3TiKN-PBSxhdeOF3KdpLKMl14yCyJJ6sWml3vn8DSeP9ZIocrZ0sVqB9QqOSurAXIXf1XDZsWvrR4nfwf4qfU6mO88vR8hR_4-SpzPgQ2KAHLZLYzbySTWlkRhfEjwg_QoMR8onIbnBb7D2Z90/s1088/WhatsApp%20Image%202023-12-06%20at%2014.32.19.jpeg" style="clear: left; display: inline !important; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="312" data-original-width="1088" height="92" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkMoihr4PCy94p9kFb9qaZ9BNorh5g-dIkfB4sfxxaO3TiKN-PBSxhdeOF3KdpLKMl14yCyJJ6sWml3vn8DSeP9ZIocrZ0sVqB9QqOSurAXIXf1XDZsWvrR4nfwf4qfU6mO88vR8hR_4-SpzPgQ2KAHLZLYzbySTWlkRhfEjwg_QoMR8onIbnBb7D2Z90/w320-h92/WhatsApp%20Image%202023-12-06%20at%2014.32.19.jpeg" width="320" /></a><br /><br /><div><div><span style="color: #2b00fe;">கதியிதுவோ மற்றெதுவோ எனப் பதைப்பதும் ஏன்?</span></div><div><span style="color: #2b00fe;">விதியதன் கோலும் உன் கையில் உளதோ?</span></div><div><span style="color: #2b00fe;">பதியவன் காணறியா சூதின் வழி நடக்கும் உலகு </span></div><div><span style="color: #2b00fe;">மதியும் குளிரட்டும் ஆத்மனிலே-மக்குத் திம்மா</span> (# 360)<br /><p><span style="font-size: x-small;"><i>(பதி =இறைவன்; காணறியா சூது = கற்பனைக்கெட்டாத வழி முறை )</i></span></p><p><span style="font-size: x-small;"><i>பின் குறிப்பு :</i></span></p><p> <i><span style="font-size: x-small;">( தபாலில் வந்த ஒரு உறை மேல் கிறுக்கிய இந்த படத்திற்கு டிஜிடல் வர்ணம் பூசி, ஜென் ஞானத்துடன் வாட்ஸப்பில் சிலருடன் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு அது எனக்கே வேறொருவர் மூலமாக வந்தது ... இப்போது டிவிஜி கவிதைக்கு துணையாகிறது. )</span></i> </p><p><br /></p><p><br /></p></div></div>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-19057497145588139252023-07-08T09:24:00.003-07:002023-07-08T21:24:12.051-07:00ஆறு மனமே ஆறு ...."ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு " என்பது ஆண்டவன் கட்டளை என்கிற திரைப்படத்தில் இடம் பெற்ற மிகவும் புகழ் பெற்றப் பாடல்.<div><br /></div><div>இதில் கவிஞர் கண்ணதாசன் ஆறு குணங்களை மனிதரின் மன ஆறுதலுக்காகப் பட்டியலிடுகிறார். அவை 1) ஒன்றே சொல், அதையே செய் 2) இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்த நியதி 3) உண்மையை சொல்லி நன்மையை செய் 4) நிலை உயரும் போது பணிவு கொள் 5) ஆசை, கோபம் களவு மிருக குணங்கள் 6) அன்பு கருணை நன்றி -தெய்வ குணங்கள்.<div><div>அற்புதமான இசையமைப்புடன் கூடிய அந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.</div><div><br /></div><div>மேற்கண்ட குணங்களை பலவேறு கோணங்களில் மக்குதிம்மன் மூலமாக குண்டப்பா அவர்களும் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார். இந்த பதிவில்</div><div>மனிதரின் முன்னேற்றத்திற்கென அவர் சொல்லும் மூன்று குணங்களை பார்ப்போம். முதலில் பாடலும் அதன் மொழிபெயர்ப்பும்: <div><br />ಚಾರುದೃಶ್ಯಂಗಳಿಂ ಪ್ರೀತಿ ಹೃದಯವಿಕಾಸ|<br />ಕ್ರೂರದೌಷ್ಟ್ಯಯಂಗಳಿಂ ವೀರಾನುಕಂಪ ||<br />ಭೈರವಾದ್ಧುತಗಳಿಂ ಮೌನದಂತರ್ಮನನ |<br />ದಾರಿಯುದ್ಧಾರಕಿವು- ಮಂಕುತಿಮ್ಮ || 457 ||<div><div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><span style="color: #2b00fe;">மன விகாசம் தரும் இயற்கையின் காட்சி</span></div><div><span style="color: #2b00fe;">வன்மையைக் காணில் வெகுளும் மற நெகிழ்ச்சி</span></div><div><span style="color: #2b00fe;">மோனத்தில் வியந்திரு பிரளயங் காட்டும் மிரட்சி</span></div><div><span style="color: #2b00fe;">மேன்மைக்கு வழியிதுவே- மக்குத் திம்மா</span></div><div><br /></div><div><span style="font-size: x-small;"><i>( விகசித்தல் = மலர்தல்; பிரளயங் காட்டும் மிரட்சி= பயந்தரும் இயற்கையின் சீற்றம் ; </i></span><span style="font-size: x-small;"><i>மற நெகிழ்ச்சி = வீரத்தின் பின்புலத்தில் இரக்கம் -வீர அனுகம்பம் </i></span><i style="font-size: small;"> )</i></div><div><div> </div><div>முதலாவது இயற்கையோடு இயைந்திருப்பது. </div><div> இரண்டாவது தர்மத்தோடு இயைந்திருப்பது . </div><div>மூன்றாவதாக எல்லாம் வல்ல இறைசக்தியின் முன் தலை வணங்கி நிற்பது. </div><div><br /></div><div>முதல் வரியில் இயற்கையோடு இயைந்திருப்பதின் ரகசியத்தை சொல்கிறார். </div><div> </div><div><span style="color: #2b00fe;">மன விகாசம் தரும் இயற்கைக் காட்சி</span></div><div>நாம் பார்க்கின்ற ஒரு காட்சி நம்முடைய மனதை கொள்ளைகொள்ளும் போது நமது மனம் மிகவும் மென்மையானதாகிறது . குழந்தையின் சிரிப்பிலாகட்டும், மலர்களின் மலர்ச்சியாகட்டும் அக்கணங்களில் மனம் லேசாவதை உணரலாம். அதை இறையோடு ஒன்றிய நிலை என்றும் கூறலாம். </div><div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmUH45rycjkJc2PeFJBFRumHXMTgjfUbK5ZlaMZequSSFLVjX_PYwJvjg1edj_0qUTj4nK0K6a83swacf-x0C-qdSJeMBKBXCnjDJyqptueitiQO-1VZnwEmFyXv83caYxgZt4A0QfooiCrpYfgskf6JSC7BhpIHzbDEyRS7s-TVkaRHXGfNMVWNPZ8qA/s403/two_great_kings-2.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="227" data-original-width="403" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmUH45rycjkJc2PeFJBFRumHXMTgjfUbK5ZlaMZequSSFLVjX_PYwJvjg1edj_0qUTj4nK0K6a83swacf-x0C-qdSJeMBKBXCnjDJyqptueitiQO-1VZnwEmFyXv83caYxgZt4A0QfooiCrpYfgskf6JSC7BhpIHzbDEyRS7s-TVkaRHXGfNMVWNPZ8qA/s320/two_great_kings-2.jpg" width="320" /></a></div> காட்டின் வழியில் முல்லைக் கொடிக்கு தேர் ஈந்தான் பாரி மன்னன் என்றும் அழகிய தோகை விரித்தாடும் மயிலைக் கண்டு குளிரால் நடுங்கியது என்று விலையுர்ந்த போர்வையை போர்த்தினான் மன்னன் பேகன் என்றும் அறியும் போது அவர்களது மனம் எந்த அளவிற்கு மென்மை அடைந்திருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். மனதின் அந்த நெகிழ்ச்சியே அவர்களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது. </div><div><br /></div><div>ஆனால் இந்த மென்மை சமூக வாழ்க்கையில் பயன்தருமா? மனம் மென்மையானாலும் வீரம் குறையக் கூடாது. அநீதிக்கு எதிராக எழ வேண்டும். அதை இரண்டாவது வரியில் குறிப்பிடுகிறார். </div></div><div><span style="color: #2b00fe;"><br /></span></div><div><span style="color: #2b00fe;">வன்மையைக் காணில் வெகுளும் மற நெகிழ்ச்சி</span></div><div><br /></div><div>வீர அனுகம்பம் என்று ஒரு வார்த்தையை கையாளுகிறார் டி.வி.ஜி. அதாவது இரக்கத்தினால் வெளிப்படும் வீரத்தன்மை. தமிழ் அகராதியில் அனுகம்பம் என்கிற வார்த்தைக்கு இரக்கம் என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது வடமொழியிலிருந்து வந்திருக்கும் சொல். கன்னடம் தமிழ் இரண்டிலும் புழக்கம் உண்டு.<br /><br />யாருக்கேனும் ஏற்படும் குரூரமான துன்பத்தைக் கண்டு, மனமிரங்கி , அதைக் களைய வேண்டி ஒருவருக்கு ஏற்படும் மனநிலையை குறிக்க வந்தது இது.<div>இதை நிறைவேற்ற ஒருவர் இரத்தம் சிந்தவோ உயிரை விடவோ கூட நேரலாம். ஆனால் அது பிற உயிர் மேல் கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாக எழும் உணர்ச்சி. </div><div><br /></div><div>அப்போது மனதின் மென்மைத்தன்மை மறைந்து வீரத்தின் அறிகுறியான மறத் தன்மை வெளிப்படுகிறது. அதை 'வீர அனுக்கம்பம் என்கிறார் டி .வி.ஜி. </div><div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1foUf55iJ6u_tUVwDIaPxIvvq3u3VOCeHau5z4w-ejcjVZtKSGmFo4EQ98SnLNe1C847AANNDYZXHOvWXphrnkRnYg58gVtGOQecf5jPgp6Z2DVBsi6XGbSYGV7NDZ66SSjQKx3jIowqKJToSK1pmZ2NhBOHV5G952PvETDolZwsnIPB2OcTZWXLSUg/s618/two_great_kings.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="288" data-original-width="618" height="186" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1foUf55iJ6u_tUVwDIaPxIvvq3u3VOCeHau5z4w-ejcjVZtKSGmFo4EQ98SnLNe1C847AANNDYZXHOvWXphrnkRnYg58gVtGOQecf5jPgp6Z2DVBsi6XGbSYGV7NDZ66SSjQKx3jIowqKJToSK1pmZ2NhBOHV5G952PvETDolZwsnIPB2OcTZWXLSUg/w400-h186/two_great_kings.jpg" width="400" /></a></div><div> உதாரணமாக தன்னுடைய தசையை அறுத்து எடைக்கு எடை கொடுத்து ஒரு புறாவைக் காப்பாற்ற முன்வந்த சிபி சக்ரவர்த்தியாகட்டும், கன்றை இழந்து தவித்த பசுவிற்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணமான தன் மகனை தேரடியில் கிடத்திய மனுநீதி சோழன் போன்றவர்களின் மனநிலையை சொல்லலாம். இங்கே பெரும்பாலும் தியாக குணம் இருக்கும். தன்னலத்திற்கு இல்லாமல் பிறர் நலனுக்காக போராடும் குணம் வெளிப்படும். அதனால் இதையும் மனமுயர்த்தும் வழி என்கிறார் டி.வி.ஜி. </div><div><br /><div>மூன்றாவதாக சர்வ வல்லமை வாய்ந்த இயற்கையின் கோர சக்தியை கண்டு அதன் முன் எப்படி மனிதனின் ஆற்றல்கள் யாவும் ஒரு துரும்பு போன்றது என்பதை நினைக்கும் போது ஆணவம் அடங்கி மன அடக்கம் ஓங்குகிறது. அப்போது மனிதனால் அந்த சக்தியை மௌனமாக வியக்க முடியுமே அன்றி வேறெதுவும் செய்ய இயலாதவன் ஆகிறான். இந்தப் புரிதலும் மனிதரின் முன்னேற்றத்திற்கு ஒரு தேவையே! </div><div><br /></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS_tLZLLufSL0RVx5rdOgVKTOPBWN2G4T5aLRrHJVl3SoKHmLrdjnpiN4EoGQKOtJ0XmFWVv7K7bQOwzfQDc6XahxBbmpHzPzHoXQyRxSnGq_RfXN36En9gaPXe1REOeKxxmzLKO86dBxmzE4caKcRykpkzy4A6PYx-Otl_vdsDbFmQDA61i99eQnUuWQ/s582/natural_disasters.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="354" data-original-width="582" height="244" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiS_tLZLLufSL0RVx5rdOgVKTOPBWN2G4T5aLRrHJVl3SoKHmLrdjnpiN4EoGQKOtJ0XmFWVv7K7bQOwzfQDc6XahxBbmpHzPzHoXQyRxSnGq_RfXN36En9gaPXe1REOeKxxmzLKO86dBxmzE4caKcRykpkzy4A6PYx-Otl_vdsDbFmQDA61i99eQnUuWQ/w400-h244/natural_disasters.jpg" width="400" /></a></div><br /></div><div style="text-align: center;"><span style="color: #2b00fe;">மோனத்தில் வியந்திரு பிரளயங் காட்டும் மிரட்சி</span></div><div><span style="color: #2b00fe;"><br /></span></div><div> இந்தப் பாடல், சத்சங்கத்தில் இருக்கும் சாதகர்களுக்கு என்பதாக வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அடிப்படை நல்லொழுக்க நெறிகளை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சாதனையில் அடுத்த கட்டத்திற்கு நகருவதற்காக அமைத்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை என்று கொள்ளலாம். அதற்கான வழி சொல்லும் பாடல் இது.</div><div><br /></div>மாற்று : ( கொள்ளை என்ற சொல்லை பல பொருளில் பயன்படுத்த ஒரு சோதனை முயற்சி. )</div></div><div><br /></div><div>கொள்ளை அழகில் விகசிக்கும் மனம் - abundance</div><div>கொள்ளை கொலை கண்டு வீறும் மறம் - robbery</div><div>கொள்ளை வியப்பு ஊழிதன் நர்த்தனம் - plenty</div><div>கொள்ளை யுண்டு மனிதருக்கே மக்குத் திம்மா - profit</div><div><br /></div><div><br /></div><div>Tamil Lexicon : </div><div><span style="color: #2b00fe; font-size: x-small;">[<hw style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;"><tam style="box-sizing: border-box;">கொள்ளை</tam> <t style="box-sizing: border-box;">koḷḷai</t></hw><span style="background-color: white; font-family: arial;"> , </span><i style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">n</i><span style="background-color: white; font-family: arial;">. < </span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">கொள்-</tam><span style="background-color: white; font-family: arial;">. 1. [T. </span><i style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">kolla</i><span style="background-color: white; font-family: arial;">, K. </span><i style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">koḷḷe</i><span style="background-color: white; font-family: arial;">, M. </span><i style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">koḷḷa</i><span style="background-color: white; font-family: arial;">.] Robbery, plunder, pillage; </span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">சூறைகொள்ளுகை</tam><span style="background-color: white; font-family: arial;">. 2. [T. </span><i style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">kolla</i><span style="background-color: white; font-family: arial;">.] Excess, abundance, copiousness, plenty; </span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">மிகுதி. கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம்</tam><span style="background-color: white; font-family: arial;"> (</span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">பாகவ</tam><span style="background-color: white; font-family: arial;">. 1, 5, 14). 3. Crowd, throng; </span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">கூட்டம். கொள்ளையிற் பலர் கூறலும்</tam><span style="background-color: white; font-family: arial;"> (</span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">கந்தபு. விண்குடி</tam><span style="background-color: white; font-family: arial;">. 14). 4. Plague, pestilence, epidemic; </span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">பெருவாரிநோய்</tam><span style="background-color: white; font-family: arial;">. 5. Hindrance, obstacle, difficulty; </span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">தடை. அதைச்செய்ய உனக்கு என்ன கொள்ளை</tam><span style="background-color: white; font-family: arial;">? 6. Price; </span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">விலை. சில்பத வுணவின் கொள்ளை சாற்றி</tam><span style="background-color: white; font-family: arial;"> (</span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">பெரும்பாண்</tam><span style="background-color: white; font-family: arial;">. 64). 7. Use, profit; </span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">பயன். நானிருந்தென்ன கொள்ளை</tam><span style="background-color: white; font-family: arial;"> (</span><tam style="background-color: white; box-sizing: border-box; font-family: arial;">இராமநா. பால கா</tam><span style="background-color: white; font-family: arial;">. 9).]</span></span></div><div><br /></div><br /></div></div></div></div></div>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-28449677547691301272023-06-29T09:50:00.000-07:002023-06-29T09:50:14.653-07:00Smart socket and UPS inverter :<p>இந்த தலைப்பை தமிழில் எழுதத் தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். சரி, விஷயத்திற்கு வருவோம். </p><p> கர்நாடகாவில் மின்சாரத்துறை குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. முதலில் இலவசம் என்ற அறிவிப்பு ஒருபுறம். மறுபுறம் யூனிட்க்கு ரூ 4/லிருந்து ரூ 7/க்கு கட்டணம் அதிகரிப்பு. இதைத் தவிர உபரி வரிகள். இலவசம் என்பது ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமலாகும், அதுவும் கடந்த வருட சராசரி பயன்பாட்டைப் பொறுத்து முடிவாகும் என்று நாளுக்கு ஒரு அறிவிப்பு யார் யார் மூலமாகவோ வந்து கொண்டிருக்கிறது.</p><p>என் நண்பருக்கு கவலை பிடித்துக் கொண்டது. அவர் மாதம் 120 முதல் 180 யூனிட்டுகளுக்கு குறைவில்லாமல் கட்டி வந்திருக்கிறார். பேச்சு வாக்கில் பயன்பாட்டை குறைப்பது பற்றிக் கேட்டார். வழக்கமான கேள்விகளில் தெரியவந்தது அவர் வீட்டில் வெந்நீருக்கு கீஸர் ஒன்றைத் தவிர பெரியதாக மின்சார பயன்பாட்டைஅதிகரிக்கும் இயந்திரங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு ஃபிரிட்ஜ், அதுவும் இன்வெர்டர் பிரிட்ஜ். அதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட்டுக்கும் குறைவாகவே இருக்கும். வாஷிங் மிஷன், மிக்ஸி, கிரைண்டர் போன்ற இயந்திரங்களே இல்லை. மற்றபடி தொலைக்காட்சிப் பெட்டி, மின் விசிறிகள், குழாய் விளக்கு போன்றவைதான். ஒரு <span style="font-family: arial;">UPS</span> இன்வெர்டர் 12 வோல்ட் பாட்டரியுடன் மின்தடை காலங்களின் பயன்பாடு கருதி இணக்கப்பட்டிருந்தது.</p><p>அதுவும் சரியாக பராமரிக்கப்படாமல் பாட்டரியின் நீர் அளவு குறைவாகவும் உப்புப் பூத்த டெர்மினலுடன் காணப்பட்டது. என் கணக்குப்படி முதல் திருடன் இதுதான். இது கண்டிப்பாக பெரும் விரயத்தை ஏற்படுத்துகிறது என்று தோன்றியது. கீஸரிலாவது ஆட்டோ சிவிட்ச் <span style="font-family: arial;">( thermostat) </span>மூலம் மின்சார விரயம் குறைக்கப்படுகிறது. </p><p><span style="font-family: arial;">UPS</span>-ஸில் ஆட்டோ ஸ்விட்ச் பாட்டரியில் சேமிக்கப்பட்ட மின் அளவைப் பொருத்து செயல்படும். பாட்டரியின் எந்த ஒரு செல் பகுதி பலவீனமானாலும் அது முழு சார்ஜ் ஏற்காது. அதனால் இன்வெர்டர் அதை எப்போதும் சார்ஜ் செய்து கொண்டே இருக்கும்.</p><p>.சரியாக பராமரிக்கப்படும் பாட்டரியில் கூட 20 வாட்ஸ் வரையிலும் தொடர்ந்து இழப்பு இருந்து கொண்டே இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு 480<span style="font-family: arial;"> wh</span> அல்லது ஒரு நாளைக்கு அரை யூனிட் . மாதம் 15 யூனிட்கள். இது ஸ்டாண்ட் -பை <span style="font-family: arial;">( standby loss) </span>இழப்பு எனப்படும். நமது அளவுக்கூடக் கூட இதுவும் கூடும். </p><p><b>பெரும்பாலும் இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஏனெனில் இதை அளப்பதற்கு சரியான கருவிகள் இல்லை.</b></p><p>அப்படி எனக்கொரு கருவி கிடைத்து அதை கடந்த ஒன்றரை வருடங்களாக உபயோகித்து வருகிறேன். ஆனால் அதை வாங்கியபோது அது இப்படி பயன்படும் என்று அறிந்திருக்கவில்லை.</p><p>அது ஸ்மார்ட் ப்ளக் <span style="font-family: arial;">( Smart plug ) </span>எனப்படும், கணினி, கைப்பேசி மூலமாக இயக்கக்கூடிய மின் இணைப்பு முறையாகும். இதன் மூலம் நமக்கு தேவையான குறிப்பிட்ட கருவியை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ நிறுத்தவோ முடியும். அதை எங்கிருந்தாலும் இணைய இணைப்பு இருந்தால் செய்ய முடியும். தானியங்கி செயல்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட்டு இதில் சேமித்து விட்டால் அக்குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிடப்பட்ட செயலை நிறைவேற்றும். உலகில் நீங்கள் அதன் செயல்பாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்.</p><p>அப்படி ஒரு ஸ்மார்ட் ப்ளக்கை இணைய தளத்திலிருந்து வாங்கி என் வீட்டு சோலார் இன்வெர்டருடன் இணைத்தேன். என்னுடைய தேவை பாட்டரியின் பயன்பாட்டை அதிகப்படுத்தி மின்வாரியத்தின் புழக்கத்தை குறைப்பதே. இதன் மூலம் தானியங்கி ப்ளக்கைக் கொண்டு -அனுபவத்தின் அடிப்படையில் - பருவ நிலைக்குத் தக்கவாறு கண்காணித்து செயல்படுத்தி வருகிறேன்.</p><p><b>நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம்</b> என்னவென்றால் நாம் எந்த எந்திரத்துடன் இணைத்துள்ளோமோ அதன் தனிப்பட்ட மின்னளவு பயன்பாட்டை துல்லியமாக தொடர்ந்து கணித்து அதை எப்போது வேண்டுமானாலும் நம் ஸ்மார்ட் ஃபோனில் பார்க்கின்ற வசதியை தயாரிப்பாளர்கள் செய்திருக்கிறார்கள். இதனால் என்னுடைய இன்வெர்டர் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் நிகழ்நிலையிலேயே (<span style="font-family: arial;"> Real time</span>) அதைத் தெரிவிக்கிறது.</p><p>உதாரணத்திற்கு இந்த படத்தில் என்னுடைய கடந்த சில மாதங்களுக்கான இன்வெர்டரின் பயனளவை காட்டியிருக்கிறேன். <i>( இரவு 12 மணி முதல் காலை 7:45 மணியளவிலேயே <span style="font-family: arial;">130 wh உபயோகித்திருக்கிறது. 1000 </span></i><i><span style="font-family: arial;">wh = 1 kwh அல்லது 1 யூனிட் எனப்படும்)</span></i><i><span style="font-family: arial;"> )</span></i></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrZl0JNxVbNaDXyMwCXOzAYTbxpW0nwGOdFzL7rDAbXvF6uk5uoejqzZq7trLmdtMOidlFNbc_A0xURt_uMCB90nCZeJFDFouYw7OURr9qcHrx865Pg75bKmDmzc24PtH4exKtKKWukBDQ5vFHISl40JrutDvHO1U8GlteB43v4Pw4lMR8bGFoH1Y4prk/s575/Halonix%20Smart_plug.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="575" data-original-width="569" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrZl0JNxVbNaDXyMwCXOzAYTbxpW0nwGOdFzL7rDAbXvF6uk5uoejqzZq7trLmdtMOidlFNbc_A0xURt_uMCB90nCZeJFDFouYw7OURr9qcHrx865Pg75bKmDmzc24PtH4exKtKKWukBDQ5vFHISl40JrutDvHO1U8GlteB43v4Pw4lMR8bGFoH1Y4prk/w396-h400/Halonix%20Smart_plug.png" width="396" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">இதில் <span style="font-family: arial;">2022 </span>ஆம் வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் நாங்கள் ஊரில் இல்லாதபோதும் 7 அல்லது 8 யூனிட்டுகளை அது உபயோகித்திருக்கிறது. நான் நல்ல முறையில் என் பாட்டரிகளை பராமரித்து வருவதால் அதன் மின் இழப்பு வேகம் குறைந்திருக்கலாம். இழப்பு குறையும் போது ஈடுகட்ட வேண்டிய மின்தேவையும் குறையத்தானே செய்யும்! </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">அதிக அளவில் மின்தேவை ஏற்படும் பொழுது இன்வெர்டர் எடுத்துக் கொள்ளும் அளவும் (<span style="font-family: arial;"> self maintenance )</span> அதிகரிக்கிறது. இதை மாதாந்திர உபயோகத்தின் அளவுகளைக் கண்டு புரிந்து கொள்ளலாம். </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4GSjFVsm4uHKNglz0DC7hqALBocf2ALdNpTcDL-67upy197WFriXZWvSBe6z5AP67jsATN8RjqDDU4p1HGXuHdcK83csHDKour6ZrGJnhnYGVP1MRZ_rdpuMWoerG0wf3xc5iEEIsxMps8LfnvPH8MY6yn_cJJZ97tVFOWNs4t-_HmEH4l8_JJTgL6jQ/s677/EB_Inverter.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="443" data-original-width="677" height="261" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4GSjFVsm4uHKNglz0DC7hqALBocf2ALdNpTcDL-67upy197WFriXZWvSBe6z5AP67jsATN8RjqDDU4p1HGXuHdcK83csHDKour6ZrGJnhnYGVP1MRZ_rdpuMWoerG0wf3xc5iEEIsxMps8LfnvPH8MY6yn_cJJZ97tVFOWNs4t-_HmEH4l8_JJTgL6jQ/w400-h261/EB_Inverter.png" width="400" /></a></div><br /><div class="separator" style="clear: both; text-align: left;">கீழே இருக்கும் எண்கள் இன்வெர்டர் யூனிட்டுகள் மேலே உள்ளவை அந்தந்த மாதத்திற்கான பயனீட்டு அளவு. சராசரியாக இன்வர்டர் மட்டும் மாதம் 24 யூனிட்டுகளுக்கு காரணமாகிறது. அதிக அளவு மின்சாரம் இன்வெர்டர் மூலம் இழுக்கப்படும் பொழுது சூட்டைத் தணிக்க அதிலுள்ள <span style="font-family: arial;">cooling fan அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால் அன்றைய தட்ப வெப்பத்தைப்பொருத்தும் தினசரி வேறுபாடுகள் இருக்கும்.</span></div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">இதையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேனென்றால் <span style="font-family: arial;">UPS</span> சேவை மிக அவசியம் என்று நாம் பெரும்பாலும் தேவையின்றி பாட்டரியை சார்ஜ் செய்து கொண்டு அதிகப்படியான மின்கட்டணம் கட்டி வருகிறோம்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><b>பயனீட்டின் அளவு அதிகரிக்கும் போது இன்வெர்டரின் தேவை 65 வாட்ஸ் வரை கூட போகலாம் என்று இணையத்தில் பலருடைய அனுபவங்கள் வாயிலாக அறிகிறேன்</b>. </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">அப்போது இன்வெர்டரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க முடிந்தால் 30 யூனிட்டுகளை குறைக்க முடியும். அதாவது மாதம் ரூ 210 + உபரி வரிகளை குறைக்கலாம். </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><b>இன்வெர்டர் <span style="font-family: arial;">UPS</span> வைத்து இருப்பவர்கள் பாட்டரியை வாரம் ஒரு முறை சார்ஜ் செய்து அதை மெயின் லைனிலிருந்து <span style="font-family: arial;">switch off</span> செய்து விடுங்கள். மின்தடை ஏற்படும்பொழுது மட்டும் அதை ON செய்து கொண்டால் போதுமானது. இதனால் தேவையின்றி இன்வெர்டர் இயங்காது. சூடாகாது. அது போல் பாட்டரியின் இழப்பு வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும். </b></div><div class="separator" style="clear: both; text-align: left;"><b><br /></b></div><div class="separator" style="clear: both; text-align: left;">முக்கியமாக பாட்டரியின் ஆயுட்காலம் எத்தனை முறை செறிவூட்ட சுழற்சி <span style="font-family: arial;">(Charging cycles) என்பதைப் பொருத்தது. எப்பொழுதும் மின் இணைப்பிலேயே வைத்திருக்கும் பொழுது மிக விரைவிலேயே சுழற்சி எண்ணிக்கையை எட்டி விடுகிறது. இதனால் ஐந்து வருட காலம் என்பது மூன்றாக சுருங்கி போய் விடும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பராமரிப்பு சரியில்லாமல் இருந்தால் அதிக அளவில் மின் இழப்பை ஏற்படுத்தும். </span></div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">மேலே கூறிய அனைத்தும் வெறும் இன்வெர்டர் <span style="font-family: arial;">UPS</span> வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. </div><div><br /></div><div><b>பின் குறிப்பு : இந்த சேமிப்பின் பரிமாணம் என்ன?</b></div><div><b>மாதம் ரூ 200 என்று வைத்துக் கொண்டால் வருடத்திற்கு ரூ2400/</b></div><div><b> ஐந்து வருடத்தில் சேமிப்பின் அளவு ரூ 12000/</b></div><div><b><br /></b></div><div><b>அதாவது அடுத்த பாட்டரி வாங்குவதற்கான பணத்தை முறையான கண்காணிப்பினாலேயே சேமிக்க வழியுண்டு என்பதை புரிந்து கொண்டாலே போதும்</b>.</div><p><br /></p><p><br /></p>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-78624786322900513632023-06-24T03:38:00.001-07:002023-06-24T04:14:53.182-07:00வேண்டியதை ஈவான் ஈசன்<p>இயற்கையின் நியதிப் படித்தான் எல்லாம் நடக்கிறது என்பது வழி வழியாக சான்றோர்கள் ஏற்றுக் கொண்டுள்ள வழக்கு.</p><p>இதில் நமக்கு என்னப் பிரச்சனையென்றால் இயற்கை (அல்லது கடவுள்) அந்த நியதிகளை வெளிப்படையாக திறந்த புத்தகமாக நமக்குக் காட்டுவதில்லை. இதனால் சஸ்பென்ஸ் அதிகமாகப் போய் பெரிய நகரத்தில் மொழி, வழி தெரியாமல் சிக்கிக் கொண்டவனைப் போல் ' ..........இத்தாவிர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்" என்று சிவபுராணத்தில் மணிவாசகர் சொல்வதை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறோம்.</p><p>இப்போது ஒரே வழி அந்த கடவுளிடம் சரணடைவதே. அவனிடம் வேண்டப்போவது என்ன ? </p><p> D.V.G. இதற்கு மாணிக்கவாசகர் மொழியிலேயே விடை தருகிறார்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQxn4XllOf5zmoNeK76DeHL0egflrJezW9Af_l2XoP2EfC2Q25_CRbzdp-Eq1wzMjP8Nfq49gAmtLH51mwYY6MPAvQxAWWQ_h_l4CrEbDDcqnhbXwihYqfhEIWhYr91oFCPzQwPJGxbYuXD4um8gQ6sp0aG8c9i_3UB0GDSCDWcQ2T0XaGmgmAGorDrwo/s2680/thimma_943.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1243" data-original-width="2680" height="185" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQxn4XllOf5zmoNeK76DeHL0egflrJezW9Af_l2XoP2EfC2Q25_CRbzdp-Eq1wzMjP8Nfq49gAmtLH51mwYY6MPAvQxAWWQ_h_l4CrEbDDcqnhbXwihYqfhEIWhYr91oFCPzQwPJGxbYuXD4um8gQ6sp0aG8c9i_3UB0GDSCDWcQ2T0XaGmgmAGorDrwo/w400-h185/thimma_943.jpg" width="400" /></a></div><br /><p>இங்கே மனிதர்களுக்கே உரித்தான மனத் தடுமாற்றத்தை அழகாகப் படம் பிடிக்கிறார். நம்முடையே இச்சைகளை அவன் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஆனால் அதை அருளுவானோ இல்லையோ என்ற சந்தேகம். அதே வேளை நாம் இச்சைப்பட்டதெல்லாம் நமக்கு நன்மை தருமா என்பதும் தெரியாது. சரி அவனிச்சைப்படியே நடக்கட்டும் என்று உறுதியாக நம்பும் மனமாவது உண்டா ? ( என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்).</p><p>ஆகையால் கடவுளிடம் ஏதாவது வரம் வேண்டுவதானால் "நீ அருளுவதை ஏற்றுக் கொள்ளும் உறுதியான மனதைக் கொடு' என்பது மட்டுமாகவே இருக்கட்டும் என்று மக்குத் திம்மன் வாயிலாக நமக்கு சொல்கிறார் டி.வி.ஜி.</p><p>மொழிபெயர்ப்பு :</p><p><span style="color: #2b00fe;">வேண்டியதை ஈவான் ஈசன் என்ற நிலையில்லை</span></p><p><span style="color: #2b00fe;">வேண்டுவதில் நலம் யாதென அறிவுமில்லை</span></p><p><span style="color: #2b00fe;">வேண்டாமலே வருவது அவனிச்சை எனக் கொள்</span></p><p><span style="color: #2b00fe;">வேண்டிடு நீ அந்நெஞ்சுரம் - மக்குத் திம்மா ( 943)</span></p><p><span style="color: #444444;">மாணிக்கவாசகர் வழியிலேயே சொல்லுகிறார் என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் காலத்தால் மொழியால் பிரிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடையே உள்ள கருத்து ஒற்றுமை எப்படி வெளிப்படுகிறது என்பதை கீழ்கண்ட திருவாசகப் பாடலை படித்தாலே புரியும்.</span></p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1hBQY_8flkRa7k-nmjfRMOcDVPeeDGuvxdjGv8znxlbdOVMQieZaPwldMdwYBz2apL1AGzNrE0bbzmA6RNdm7ikP209S_qtIYccz7qqN76v1ZZWdjZxnGBpFiM2MEPwgyTcZeT7M-hFPs9zUgXAdPhoQbt3uj12HeaOITquFIWCntltM3R5dCzpJZPSQ/s1278/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1278" data-original-width="1080" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1hBQY_8flkRa7k-nmjfRMOcDVPeeDGuvxdjGv8znxlbdOVMQieZaPwldMdwYBz2apL1AGzNrE0bbzmA6RNdm7ikP209S_qtIYccz7qqN76v1ZZWdjZxnGBpFiM2MEPwgyTcZeT7M-hFPs9zUgXAdPhoQbt3uj12HeaOITquFIWCntltM3R5dCzpJZPSQ/w338-h400/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="338" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">"அதுவும் உந்தன் விருப்பன்றே" என்கிற மாணிக்கவாசகப் பெருமானுக்கு இருந்த மன உறுதியை பெறுவதே நம்முடைய பிரார்த்தனைகளுக்கான முழுமையான பலன் என்று உணர்ந்தாலே நமக்குள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டதாகப் பொருள் கொள்ளலாம்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;">அப்போது நம்மைப் பற்றி யார் என்ன நினைத்தால் என்ன? எல்லாம் ஈசுவர இச்சைப்படி நடக்கிறது.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWXb_8aaE7H4olWWRU4CmVBhsBGWOvYfgAk4q4Wqzc19AqOaHxfJCfL5IgjImyylpF2A7D3X6slD2skk2pxTqg828EfAmoIKPiAqIA1-mZc3jPWsOnpNNtmdUMg4VlCMunlztofXtyE9urr9GQ1lzr5UXHM5axSJ1vAbqyAnLQf1Rz3sL80aLCmAXvWe4/s1440/little_boy.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="1080" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWXb_8aaE7H4olWWRU4CmVBhsBGWOvYfgAk4q4Wqzc19AqOaHxfJCfL5IgjImyylpF2A7D3X6slD2skk2pxTqg828EfAmoIKPiAqIA1-mZc3jPWsOnpNNtmdUMg4VlCMunlztofXtyE9urr9GQ1lzr5UXHM5axSJ1vAbqyAnLQf1Rz3sL80aLCmAXvWe4/w300-h400/little_boy.jpg" width="300" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;">( டிஜிடல் வரைவு )</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><br /><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><br /><span style="color: #444444;"><br /></span><p></p><p> </p>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-35848106071399258012022-12-20T02:33:00.000-08:002022-12-20T02:33:12.433-08:00வேடல்- தமிழ் சொற்புதிர் <p>இன்னும் பத்து நாட்களில் புது வருடம் பிறக்கப் போகிறது.</p><p>இந்த 2022 -ஐ எதுவும் பதிவே போடாமல் கழித்தாயிற்று.</p><p>கற்கை நன்றே என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்து, புதிதாகக் கற்றதை எதையாவது பகிர்ந்து கொள்ள வேண்டாமா? இல்லாவிட்டால் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்று ஆகிவிடுமே என்ற கவலை தொத்திக் கொண்டது.</p><p>என்னுடைய -ஹைட்ரோபானிக்ஸ் போன்ற- கற்றுக் கொள்ளும் முயற்சிகள் பலவும் இன்னமும் அரைகுறையாய் தொடர்வதால் அவற்றைப் பற்றி எதையும் எழுத முடியாத நிலை.</p><p>இன்று 'சொல்லாடல்' புதிரை விடுவிக்க முயலும் போது தான் ஏன் இதைப்பற்றிய பதிவு போடலாமே என்று தோன்றியது.</p><p>'சொல்லாடல்' என்னும் தமிழ் புதிரை கடந்த சில மாதங்களாக நான் என் சகோதர சகோதரியுடன் தொடர்ந்து விடுவித்து வருகிறேன். இது ஆங்கில மொழிக்கான WORDLE என்ற தினம் ஒரு 'சொல்லை' கண்டு பிடிக்கும் விளையாட்டின் தமிழ் வடிவம். இதை வடிவமைத்திருக்கும் கணினி நிபுணர் <b>திரு முகிலன் முருகன்,</b> மலேசியத் தமிழர். </p><p>மிகவும் பாராட்டிற்குரிய தமிழ் சேவை. </p><p>சொல்லாடல் பற்றிய மேலும் விவரங்களை <a href="https://selliyal.com/archives/240099" target="_blank">செல்லியல் வலைப்பூவில்</a> படிக்கலாம்</p><p>இதில் ஆங்கிலத்தை விட ஒரு படி மேலே சென்று 'பொது' மற்றும் 'இலக்கியம்' என்று இரு பிரிவுகளை ஏற்படுத்தி சொற்களை தேடி அறிந்து கொள்வதை சுவாரஸ்யமாக்கி இருக்கிறார். </p><p>தற்போது விகடன் போன்ற பல பத்திரிக்கைகளும் சிற்சில மாற்றங்களுடன் இந்த விளையாட்டை ஆரம்பித்துள்ளன.</p><p>ஒரு நாளைக்கு ஒரு புதிர் மட்டுமே. புதிரை எட்டு முயற்சிகளுக்குள் விடுவிக்க வேண்டும். விடுவித்த பின் அதற்கான பொருளையும் புள்ளிவிவரங்களையும் நமக்கு திரையில் தெரிவிக்கிறது. </p><p>ஒவ்வொரு முயற்சியின் புள்ளிவிவரம் அவரவர் கணினி அல்லது அலைபேசியில் சேமிக்கப்படுவதால் நாம் ஒரே உபகரணத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கீழே என்னுடைய முயற்சிகளின் புள்ளி விவரத்தைப் பார்க்கலாம்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOw7smMDe1dW-gXaRV0_9JvJlkA2BwnBpBH2dNFqpEqSXRUMJRIk8vkdkSjJkQHIDhWLxJc81f1Su6QTlgD_1_zMr_uGB8q4_1BpAcTQO4YXAMNhUM-svtO2WyG2uPU_WsEObFMhWmc4lwuaWq0HTAtf23GSOF77GU_z15d6j0xU4SNSmWyLzEK5CD/s2340/Screenshot_20221219-194631_Samsung%20Internet.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="2340" data-original-width="1080" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOw7smMDe1dW-gXaRV0_9JvJlkA2BwnBpBH2dNFqpEqSXRUMJRIk8vkdkSjJkQHIDhWLxJc81f1Su6QTlgD_1_zMr_uGB8q4_1BpAcTQO4YXAMNhUM-svtO2WyG2uPU_WsEObFMhWmc4lwuaWq0HTAtf23GSOF77GU_z15d6j0xU4SNSmWyLzEK5CD/w185-h400/Screenshot_20221219-194631_Samsung%20Internet.jpg" width="185" /></a></div>இந்த விவரத்தின்படி என்னுடைய 158 முயற்சிகளில் 99 விழுக்காடுகள் தீர்வு கண்டிருக்கிறேன். அவற்றில் 43 மற்றும் 46 முறைகள் மூன்றாவது நான்காவது முயற்சியிலேயே தீர்வு செய்ய முடிந்திருக்கிறது. <div><br /></div><div>பதினோரு முறை இரண்டாம் முயற்சியிலேயே விடை சிக்கியிருக்கிறது. பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் முதல் சொல் தரும் குறிப்புகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த முயற்சிகள் அமையும்.</div><div><br /></div><div>இந்த செயலியின் சிறப்பே குறிப்புகளை எடுத்துக்காட்டும் முறைதான். ஓரிரண்டு முறை வெற்றி கண்டு விட்டால் நம்மை உற்சாகம் தொற்றிக் கொண்டு விடும்.</div><div><br /></div><div>சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் மிகவும் பயன்படக் கூடிய ஒரு கல்வி முறையாகவும் இதை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.</div><div><br /></div><div>Smart Boards இணைய தொடர்புடைய திரைகளில் மாணவர்களை கூட்டாக முயற்சி செய்யச் சொல்லி அவர்களின் சிந்திக்கும் திறனையும் மொழி வளத்தையும் மேம்படுத்தலாம்.</div><div><br /></div><div>இப்பொழுதே விளையாடிப் பார்க்க வேண்டுமா ? இதோ இந்த இணைப்பை சொடுக்குங்கள். <a href="https://solladal.github.io/wordle-tamil/" target="_blank"><b> சொல்லாடல் -தமிழ் சொற்புதிர்</b></a></div><div><br /></div><div> வாசகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்<br /><p><br /></p></div>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-2587498620415409612021-09-21T23:07:00.001-07:002021-09-22T00:00:23.246-07:00சோலார் அனுபவங்கள்-7: தவறும் படிப்பினையும் <p> என்னுடைய சோலார் பயணத்தில் <a href="http://nirmal-kabir.blogspot.com/2020/01/6.html" target="_blank">ஜனவரி 2020 -ல் நான் செய்த சில மாற்றங்களை</a> சொல்லி பாட்டரிக்காகும் செலவை குறைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.</p><p>நான் நினைத்தபடி ஒரு வருட காலம் பாட்டரிகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் செப்டம்பர் மாதமே மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது. முன்பே சொன்னபடி 2KW இணைப்பு 1KW ஆக குறைக்கப்பட்டிருந்ததால் நான்கு பாட்டரிக்கு பதில் இரண்டிலேயே சமாளிக்க முடியும் என்பதை என் வீட்டு தினசரி கரெண்ட்- பகல் இரவு நேரங்களில்- எவ்வளவு என்பதை கணித்து தெரிந்து கொண்டேன்.</p><p>இரண்டு பாட்டரியானால் என்னுடைய இன்வெர்ட்டர்(PCU) 24 V-க்கு மாறவேண்டும். என்னிடமிருப்பதோ 48 Volt. கடைக்காரர் 40000 செலவில் 4 battery இணைப்பதை விட 20000 செலவில் இரண்டை இணைத்து மேலே 8000 செலவு செய்து 24V இன்வெர்ட்டர் வாங்கிப் போட்டால் கூட 12000 மிச்சமாகும் என்று கணக்கு சொன்னார் . நானும், சரி 48V இன்வெர்ட்டரை OLX -ல் போட்டு விற்றுவிடலாம் என்ற முடிவோடு தலையாட்டிவிட்டேன்.</p><p>அவர் என்னை யோசிக்க விடாமல் விசாரித்து வந்த இரண்டு மணி நேரத்திலேயே புது இன்வெர்ட்டருடன், இணைப்பு மாற்றங்களுக்கு வேண்டிய எல்லா உபகரணங்களுடன் வந்து இறங்கி விட்டார். <b>இனிமையான வியாபாரப்பேச்சு, முகஸ்துதி எல்லாம் என் அறிவை மழுங்கடித்தது </b>. வந்தவர் இரண்டு மணி நேரத்தில் எல்லாம் முடித்து பழைய பாட்டரிகளுடன் மேல் பணத்தையும் வாங்கி கொண்டு போய் விட்டார்.</p><p> <span style="color: #2b00fe;">தவறு இங்கேதான். மைக்ரோ டெக் (Microtek) மிகப் பிரபலமான பிராண்ட் ஆக இருப்பினும் அது தொழில் நுட்பத்தில் PWM (Pulse width modulation) என்கிற வகையை சேர்ந்தது. இது MPPT (Maximum Power Point Tracking) வகையை விட திறன் குறைந்தது. இதை அவரும் சொல்லவில்லை நானும் கவனிக்கவில்லை. இதனால் ஒரு நாளைக்கு 3.5 யூனிட்டிலிருந்து 4 யூனிட் உற்பத்தியாக வேண்டிய மின்சாரம் 1.5 முதல் 1.7 யூனிட்களே உற்பத்தியானது. </span></p><p> இதனால் என்னுடைய மாலை மற்றும் இரவு தேவைகளுக்கு பாட்டரியில் போதிய சேமிப்பு இன்றி சர்கார் சேவையையே நாடவேண்டியதாயிற்று.</p><p>என்னுடைய சராசரி பகல் (6 am -6pm )தேவை 1.8 லிருந்து 2 யூனிட்கள் , இரவு 1 யூனிட். வேடிக்கை என்னவென்றால் இரவு அது பாட்டரியையும் சார்ஜ் செய்ய துவங்கியது. இதனால் பகலில் சூரிய வெளிச்சம் உள்ள போது தகடுகளில் வரும் மின்சாரத்தை முழுவதுமாக உள் வாங்கிக் கொள்ள முடியாமல் போனது. ஏற்கனவே வயிறு நிறைந்தவனை எப்படி மேலும் மேலும் சாப்பிட செய்யமுடியும். </p><p>இன்வெர்ட்டர் வடிவமைப்பு சோலார் இல்லாதபோதெல்லாம் அது சர்க்கார் இணைப்பிலிருந்தே கரெண்ட் எடுப்பது போலவும் பாட்டரி குறைவாக இருக்கும் பட்சத்தில் அதையும் சார்ஜ் செய்யவும் செய்யப்பட்டிருந்தது. ஆராய்ந்து பார்த்ததில் பாட்டரி வெறும் (கரெண்ட்டை )தின்று தூங்கும் வேலைக்காரன் போல் ஆகிவிட்டது. </p><p> கூட்டிக் கழித்து பார்க்கையில் 20% கூட மிச்சம் ஆவதாக தெரியவில்லை. என்னுடைய லட்சியம் 3 யூனிட் மின்சார தேவைக்கு 4 யூனிட்டையும் முழுவதுமாக உற்பத்தி செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது குறைந்தபட்சம் 70 %-80% ஆவது சேமிக்க வேண்டும். நான் சில மாதங்களை பெங்களூரில் கழிக்க நேர்ந்ததால் மே மாதம் ஊருக்கு திரும்பியதும் இந்த இன்வெர்ட்டர் செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்தேன். </p><p> இதில் முக்கியமாக கண்டுபிடித்தது இன்வெர்ட்டர் மட்டுமே ஒரு நாளைக்கு 0.5 -0.7 யூனிட்களை பயன்படுத்திக் கொண்டது. அதாவது பகல் நேரத்தில் மிச்சப்படும் 1 யூனிட்-ல், 0.7 யூனிட்களை இன்வெர்ட்ட ரால் இழக்கிறேன். இது தான் மூலகாரணம். சோலார் உற்பத்தியை பெருக்கினால் ஒழிய இந்த தேவையை ஈடுகட்ட முடியாது என்பது நன்றாகவே புரிந்தது. </p><p> ஓரளவு யூட்யூப் தேடல், விவரம் தெரிந்தவர்களோடு கலந்து ஆலோசித்ததில் ஒரு MPPT Charge Controller வழியாக இன்வெர்ட்டரை இணைத்து அதை வெறும் UPS போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது புரிந்தது. </p><p>இதனிடையில் என்னுடைய பழைய 48V Charge Controller, OLX -ல் நான் எதிர்பார்த்தத்திற்கும் மிக குறைவாகவே விலை போயிற்று. ஒரு முதியோர் இல்லத்திற்கு என்பதால் கொடுத்து விட்டேன். அதில் சற்று பணம் தேறியதால் ஒரு பெங்களூர் கம்பெனியோடு பேசி ரூ. 8300 க்கு ஒரு 24V MPPT Controller வாங்கி இணைத்து விட்டேன்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-t8ruxkKCwg8/YUoU8sUBsFI/AAAAAAAAHtc/dhEf9WHcXdgT7ZGCT2hZfYAbl2MNRjAkQCLcBGAsYHQ/s659/1kwpanel_perf.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="399" data-original-width="659" height="243" src="https://1.bp.blogspot.com/-t8ruxkKCwg8/YUoU8sUBsFI/AAAAAAAAHtc/dhEf9WHcXdgT7ZGCT2hZfYAbl2MNRjAkQCLcBGAsYHQ/w400-h243/1kwpanel_perf.png" width="400" /></a></div><br /><p>மேலே காண்பது என் வீட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரைக்கான மின் ஆணையத்தின் மீட்டரில் பதிவான நுகர் அளவு. கண்காணிக்காமல் விட்டால் சோலார் வைத்தும் பிரயோசனமில்லை. ஏப்ரல்-க்கும் ஆகஸ்ட்-க்கும் எப்படி படிப்படியாக சேமிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம். </p><p>சுமார் 100 யூனிட்கள் வரக்கூடிய இடத்தில் இப்போது 40-க்கும் குறைவாகவே ஆணையத்திலிருந்து தேவைப்படுகிறது. மீதம் சோலார் பேனல் மற்றும் பாட்டரி வழியே பூர்த்தி செய்யப்படுகிறது. </p><p>அது என்ன கண்காணித்தல்? எப்படி செய்வது என்றெல்லாம் கேட்காதீர்கள். கதை நீளும், உங்களுக்கு போரடிக்கும். </p><p>கட்டுரையின் தலைப்பிற்கு வருவோம். </p><p><span style="color: red;">செய்த தவறு : அவசரப்பட்டு முகஸ்துதிக்கு மயங்கி முடிவெடுப்பது </span></p><p>படிப்பினை (வாசகர்களுக்கும்) : </p><p><span style="color: #2b00fe;">சற்று விலை அதிகமாயினும் MPPT தொழில் நுட்பத்தையே தேர்ந்தெடுக்கவும். அப்படி வாங்கும் போது 24V, 48V (multi option ports) இரண்டுக்கும் பொருந்தும் PCU யூனிட்டை வாங்கவும். பின்னால் அதிகரிக்க அல்லது குறைக்க இன்வெர்ட்டரை (PCU) மாற்ற வேண்டிய அவசியம் வராது</span>. </p><p><span style="color: #2b00fe;">புதிதாக நிறுவ விரும்புபவர்கள் LiFepo4 பாட்டரிகளை தேர்ந்தெடுங்கள். அவை lead -acid பாட்டரிகளை காட்டிலும் அதிக திறன் உடையவை . குறைந்தது மூன்று </span><span style="color: #2b00fe;"> முதல் ஐந்து வருடங்கள் அதிகம் உழைக்கக் கூடியவை.</span></p><p>அடுத்தவன் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்பவனே புத்திசாலி. கற்கை நன்றே வாசகர்கள் போல :)))</p><p><br /></p>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-74354412526132768392020-11-14T02:45:00.000-08:002020-11-14T02:45:47.236-08:00ப்ளாப்பியின் புது அவதாரம் -New avatar of Floppy disc<p> எல்லோருக்கும் "சத்தமில்லா தீபாவளி " நல்வாழ்த்துகள்.</p><p>முன் எப்போதையும் விட இப்போது சுற்றுப்புறத் தூய்மை பாதுகாப்பு அதிமுக்கியத்துவம் பெற்று வருகிறது. </p><p>ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் காற்றின் மாசு அதிகரிக்கிறது என்று சொல்லும் அரசாங்கம் பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் இறைந்து கிடப்பதை கண்டு கொள்வதே இல்லை. அதை பரிகரிக்கும் செயல்திட்டங்களை அமல்படுத்துவதிலும் மெத்தனத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. </p><p>இவற்றிற்கு மேலாக இப்பொழுதெல்லாம் ஈ-குப்பை (e-waste ) எனப்படும் உபயோகமற்ற எலக்ட்ரானிக், கணினி , அலைபேசிகள் மற்றும் அவை சம்பந்தமான எலக்ட்ரிக் உபகரணங்கள் யாவற்றையும் எப்படி கையாளுவதே என்று தெரியாமல் விழிக்கும் நிர்வாகங்கள் இன்னும் சுற்றுச் சூழல் பிரச்சனையை பெரிதாக்கிக் கொண்டே போகின்றன.</p><p>இதை கையாளவே <a href="http://ewasteindia.in/processes.html" target="_blank"> ஈ -பரிசரா </a>என்னும் நிறுவனம் பெங்களூரில் வணிக ரீதியாகவே செயல்பட்டு வருகிறது. அவர்கள் பல முக்கிய நகரங்களில் உங்கள் வாயிலுக்கே வந்து ஈ-குப்பையை பத்திரமாக அப்புறப்படுத்தி பின்னர் கண்ணாடி ,பிளாஸ்டிக் உலோகம் என்று வகைப்படுத்துகின்றனர். பின்னர் உயர்ந்த உலோகங்களான தங்கம் வெள்ளி போன்றவற்றை மின்னணு கலங்களைப் பயன்படுத்தி பிரித்தெடுத்து மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருகின்றனர். பெல்ஜியம் ஜெர்மனி போன்ற நாடுகளில் இதே துறையில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டுறவு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு பிரிண்டட் போர்ட் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றனர். </p><p>மொத்தத்தில் குப்பை என்பது கிடையாது, முறையாகக் கையாண்டால் எதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்பதை உறுதி செய்கின்றனர்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-UexTTxrGNuY/X6-k2ZIu1RI/AAAAAAAAHCs/stpPB65sQXksZjxgJ5SS58xsr5N4oFadACLcBGAsYHQ/s402/bonappetit-2.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="244" data-original-width="402" src="https://1.bp.blogspot.com/-UexTTxrGNuY/X6-k2ZIu1RI/AAAAAAAAHCs/stpPB65sQXksZjxgJ5SS58xsr5N4oFadACLcBGAsYHQ/s320/bonappetit-2.png" width="320" /></a></div><p>என்னிடம் பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட்ட பிளாப்பிகள் தற்போது உபயோகமில்லாமல் கிடக்கின்றன. இதற்காக ஈ-பரிசராவைத் தேடிக்கொண்டு போகமுடியுமா ? அல்லது அவர்களை வரச்சொல்வதும் நியாயமாகுமா? என்ன செய்வது என்று பல நாட்களாக யோசித்தேன்.</p><p>யூ டியூபிலும் உபயோகமான தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. </p><p>திடீரென்று ஒரு யோசனை ..ஏன் இதை உணவு மேஜையில் கோஸ்டர்ஸ் (Coasters) ஆக பயன்படுத்தக் கூடாது?</p><p>இப்போது பிளாப்பிகள் மறு அவதாரம் எடுத்திருப்பதை தான் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்'</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-Ppf6_7jOO8g/X6-oPa0etyI/AAAAAAAAHC4/9q1BO9Tb1BMZAST_drcscg0rvDtuRgQMACLcBGAsYHQ/s865/bonappetit-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="418" data-original-width="865" height="194" src="https://1.bp.blogspot.com/-Ppf6_7jOO8g/X6-oPa0etyI/AAAAAAAAHC4/9q1BO9Tb1BMZAST_drcscg0rvDtuRgQMACLcBGAsYHQ/w400-h194/bonappetit-1.png" width="400" /></a></div><br /><p>நான் செய்ததெல்லாம் வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக ஒரு டேப் ரோல் ஆர்டர் செய்தேன். மற்றும் ஒரு ஸ்டிக்கர் டிசைன் செய்து அதை வேறொரு நிறுவனம் மூலம் பிரிண்ட் செய்தேன். சென்ற வாரம் வந்து சேர்ந்தது. இரண்டும் வாட்டர் ஃப்ரூப். முப்பது உருப்படிகளுக்கு ஆகும் செலவு ரூ. நானூற்று ஐம்பது மட்டுமே.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-vslQCLcmQGQ/X6-y1D9EO8I/AAAAAAAAHDE/1pQC4HqG0Kc8j-5hjfJtd2SxYttEtD9XACLcBGAsYHQ/s397/bonappetat-3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="374" data-original-width="397" src="https://1.bp.blogspot.com/-vslQCLcmQGQ/X6-y1D9EO8I/AAAAAAAAHDE/1pQC4HqG0Kc8j-5hjfJtd2SxYttEtD9XACLcBGAsYHQ/s320/bonappetat-3.jpg" width="320" /></a></div><p> இன்று தீபாவளி ரிலீஸ்!! இனி பலருக்கும் இதை அன்பளிப்பாக கொடுத்து ஒரு புது யுக்தியை பரவலாக்கலாம்.</p><p><span style="color: #2b00fe;">கொசுறு : ஈ-பரிசராவை தொடங்கி, நடத்தி வருவது என் னுடன் படித்த கல்லூரித் தோழர் திரு Dr. பார்த்தசாரதி. அப்துல்கலாம் உட்பட பல ஜனாதிபதிகளிடம் அவருடைய சிறப்பான முயற்சிக்கு விருதுகள் பல வாங்கியவர். அவருடைய சாதனைகளுக்கு முன் என்னுடைய இந்த யோசனை தங்கத்தின் முன் பித்தளை இளித்தது போலத்தான். ஆனாலும் ஒரு சிலருக்கு பயன்படலாம் என்ற எண்ணத்தில் வலையேற்றுகிறேன்.</span></p>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-432359994875198412020-07-22T03:08:00.000-07:002020-07-22T03:08:04.566-07:00சுற்றி நில்லாதே போ பகையே ......<br /> தரக்கட்டுப்பாடு என்பது ஆதிகாலம் முதலே நாமறிந்ததுதான். <div><br /></div><div> ஏதேனும் காரணத்தால் வீட்டில் செய்யும் பண்டம் சரியாக வில்லை என்றால் முதல் காரணம் பெரும்பாலும் அதற்கான இடுபொருளை குறை சொல்வதாகத்தான் இருக்கும். “இந்த தடவை அரிசி புது அரிசி போல இருக்கு அது தான் சாதம் குழஞ்சு போச்சு “ என்பதாகவோ “எந்த கடையில காப்பிப் பொடி வாங்கின, காப்பி கசப்பா இருக்கே” என்றோ பலரீதியில் இருக்கும். “முதல்ல ஒரு சாம்பிள் வாங்கிப் பார்த்து சரியா இருந்தா மொத்தமா மாசத்துக்கு வேண்டியதா வாங்கிக்கலாம்” என்பது அதற்கு தீர்வாகவும் இருக்கும்.
இந்த சாம்பிள் அல்லது மாதிரி என்பது பூரணத்தின் தன்மையை சொல்லி விடுகிறது. ஒரு மூட்டை அரிசியின் தன்மையை அறிந்து கொள்ள கால்படி சாதம் வடிப்பதில் தெரிந்து விடும். </div><div><br /></div><div>அதே போல் பெரும் தரக்கட்டுப்பாடு உள்ள தொழிற்சாலைகளில் இந்த மாதிரியை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் (random sampling techniques ) வரையறுத்துள்ளார்கள். நூறு டன் சரக்கு, கப்பலில் வந்து இறங்கும் போது அதை முழுவதையும் பிரித்து அறிய முடியாது. ஆனால் ஒரு மாதிரியை வைத்து பரிசோதனை சாலையில் பல சோதனைகள் மூலம் அதன் தரத்தை நிர்ணயம் செய்து விடலாம். </div><div><br /></div><div> இந்த யுக்தியை டிவிஜி நம்முன் வைக்கின்றார். ஒரு பகுதியில் உள்ள கடல் நீரின் தன்மையை அறிவதற்கு ஒரு குடுவை நீரை கொண்டு வந்து பரிசோதித்தால் போதும். [<i> சில பகுதிகளில் உப்புத்தன்மை கூடி வருவதாகவும், வேறு சில பகுதிகளில் மாசுபடுதல் அதிகமானதாகவும் நமக்குத் தெரிவது இதனால்தான்.</i>] </div><div><br /></div><div> சூரிய ஒளியின் அன்றைய நிலவரம் அறிய சன்னலைத் திறந்து வைத்தாலே போதும். வானம் மேக மூட்டத்துடன் உள்ளதா வெயில் அதிகமாகக் காய்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். </div><div><br /></div><div> அதைப் போன்றே அந்த எல்லையற்ற பரம்பொருளை அறிந்து கொள்ள பக்தன் ஒருவனுக்கு இறைவன் என்று பாவிக்கும் ஒரு சிறு பிம்பமே போதும். அதன் மூலம் தன் உணர்வுகளை எல்லாம் கொட்டி பொழிந்து பக்தியை பெருக்கிக் கொள்கிறான். அதிலேயே பரம இன்பம் அடைகிறான். இது எப்படி இருக்கும் என்றால் பரம ஏழை ஒருவனை எல்லா செல்வங்களும் உள்ள அறையில் விட்டு வேண்டியதை எடுத்துக் கொள் என்று விட்டு விட்டால் எப்படி திக்குமுக்காடிப் போவானோ அப்படியான ஒரு நிலையை பக்தன் அடைகிறான் என்று உவமிக்கிறார் டிவிஜி. (DVG)</div><div><br /></div><div> ಅಂಬುಧಿಯ ಮಡಕೆಯಲಿ, ಹೊಂಬಿಸಿಲ ಕಿಟಿಕಿಯಲಿ| </div><div>ತುಂಬಿಕೊಳ್ಳುವ ಬಡವನೈಶ್ವರ್ಯದಂತೆ|| </div><div>ಬಿಂಬದೊಳಗಮಿತ ಸತ್ತ್ವವ ಪಿಡಿದಿಡುವ ಭಕ್ತಿ| </div><div>ಯಿಂಬು ಕಿಂಚಿನ್ಮತಿಗೆ - ಮಂಕುತಿಮ್ಮ|| ( 491) </div><div><font color="#2b00fe">பெருங்கடலும் குடுவையுள், பெருஞ்சுடரும் பலகணியில் </font></div><div><font color="#2b00fe">பெருஞ்சீரை அள்ளத் துடிக்கும் ஏழைபோல் </font></div><div><font color="#2b00fe">பெரும்பொருளை பக்தியும் பிடித்தது பிம்பத்தில் </font></div><div><font color="#2b00fe">சிறுமதிக்கு (இ)து (இ)ன்பமே -மக்குத் திம்மா (# 491) </font></div><div><br /></div><div>[<font size="2"><i>பெருஞ்சுடர்=சூரியன் ; பலகணி =சன்னல்; சீர்= செல்வம்</i></font>] </div><div><br /></div><div> கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு. ஆகையால் என்றுமே மனிதரின் அறிவு நிலை பேரறிவாளனாகிய இறைவன் முன் ‘சிறுமதியே ஆகும். </div><div><br /></div><div> <font color="#cc0000">இலட்சோப லட்ச மக்களின் பக்தி எப்படி கந்தனின் வேலில் அடங்கியது என்பதற்கு இந்தப் பாடல் நல்ல உதாரணம்.</font>
இயற்கையின் கட்டமைப்பில் -கடலுள் -ஒரு சிறு விரிசல் வந்ததால் பெரும் சுனாமி வந்தது.</div><div><br /></div><div> பக்தியின் கட்டமைப்பில் விரிசல் வந்தால் அதன் பரிணாமும் சுனாமி போன்றே இருக்கும் என்பதை இப்பாடலின் மூலம் தெளியலாம். </div><div><br /></div><div><font color="#cc0000"> சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல் -பாரதியார்.
</font></div><div><br /></div><div><br /></div>KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-68915796158005425242020-04-14T02:53:00.000-07:002020-05-13T07:04:01.933-07:00சீனர்தம் சீதனம் -தீருமோ துயரம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அனைத்து வாசகர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து<br />
<br />
காலையிலிருந்து ஒரு நச நசப்பு. "சீனர்தம் சீதனம்" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம் என்று முயலுகையில் இந்த சீனத்து சீதனத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்பதே இன்றைய கட்டத்தில் பொருத்தமாகும் என்று தோன்றியது.<br />
<br />
அதைத் தொடர்ந்து எழுந்ததுதான் இந்தக் கவிதை.<br />
<br />
பின்னர் இதை வாட்ஸ் அப், டிவிட்டர் யாவற்றிலும் பகிர்ந்து கொண்டாயிற்று. என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்காக இங்கும் வலையேற்றுகிறேன்.<br />
சார்வரி ஆண்டில் அனைத்து குழப்பங்களும் மறைந்து உலகம் மீண்டும் சகஜ நிலைக்கு வருவதாக.<br />
<br />
<b><span style="color: red;">சார்வரியில் தீருமோ துயரம்</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<span style="color: blue;">கலக்கத்தில் பிறக்குதே சார்வரி</span><br />
<span style="color: blue;">கலக்கத்தை போக்கிடு ஈஸ்வரி</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">சீனர்தம் சீதனம் என சீண்டும் உலகம்-தம்</span><br />
<span style="color: blue;">சீமைக்குள் வரவிடவும் காட்டுமே தயக்கம்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">‘சீமானே எட்டி நில்லு’ ஆச்சுதே மந்திரம்</span><br />
<span style="color: blue;">சீக்காளி ஆகாமல் தப்பிடவே தந்திரம்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மூடிய முகங்கள், மூடிய கோவில்கள்</span><br />
<span style="color: blue;">மூடாத ஒரே இனம் காட்சி ஊடகங்கள்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">ஊரடங்கி உயிரடங்கி கிடக்கையிலே</span><br />
<span style="color: blue;">ஊடகங்களில் செவி கிழியக் கூச்சலே</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">கொரோனா- கொரோனா- கொரோனா !!</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">அகந்தையிலே அழிவை தேடும் மனிதருக்கு</span><br />
<span style="color: blue;">புகட்டுவேன் பாடம் என வந்தாயோ ? </span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மமதையிலே மனம் போன போக்கில் சென்றவனை</span><br />
<span style="color: blue;">மண்ணுக்குள் உன் இடம் தூரமில்லை என்றாயோ ?</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">மனித நேயம் மலரவும் இது தருணம் </span><br />
<span style="color: blue;">மக்களின் பசி யாம் அறிந்திட நீ ஒரு காரணம்</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">உழவனுக்கு சந்தை இல்லை</span><br />
<span style="color: blue;">உழைப்பவனுக்கு வேலை இல்லை</span><br />
<span style="color: blue;">தினக்கூலி இல்லாமல்</span><br />
<span style="color: blue;">தின்பதற்கும் ஏதுமில்லை</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">கையில் காசிருந்தும் கடைகளில்லை- பாவம்</span><br />
<span style="color: blue;">வாங்கித் தின்ன உணவகம் திறப்பதில்லை</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">ஏழையின் பாடு பெரும் பாடு </span><br />
<span style="color: blue;">போக்கிடு நீயும் -</span><span style="color: blue;">சார்வரியே ! </span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">போதும் போதும் விகாரி தந்த பாடமே</span><br />
<span style="color: blue;">போதாது எம் சேமிப்பு, வீட்டில் முடங்கிடவே</span><br />
<span style="color: blue;"><br /></span>
<span style="color: blue;">தீர்வொன்றை தந்திடு, சுலபமாய் குணமாக்கிட</span><br />
<span style="color: blue;">மருந்தொன்றை அளித்திடு, மனக்கிலேசம் போக்கிட </span><br />
<span style="color: blue;">மாரியை பொழிந்திடு பாரெங்கும் செழித்திட </span><br />
<span style="color: blue;">வாழிய வையகம் வாழிய வாழியவே</span></div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-77875831964077422952020-03-25T10:39:00.001-07:002020-03-25T10:39:56.590-07:00இடர் அடி காக்க : Social distancing<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"> ஊரடங்கு உத்தரவு <span style="mso-spacerun: yes;"> </span>இருபத்தியொரு <span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>நாட்களுக்கு வந்தாச்சு. கண்ணிற்குப் புலப்படாத கொரானா
வைரஸ்<span style="mso-spacerun: yes;"> </span>வல்லரசுகளை மண்டியிட வைத்துள்ளது. <span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"> யாவரிடமும் எட்டி நின்று<span style="mso-spacerun: yes;"> </span>பழகும்படி அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. <span style="mso-spacerun: yes;"> </span>எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது கூடாது என்பது
பற்றி நூற்றுக்கணக்கான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>பல நாட்டு அதிபர்களும் ‘இந்திய’ முறை<span style="mso-spacerun: yes;"> </span>வணக்கத்தை வணக்கத்துடன் ஏற்றுக் கொள்வதே சிறந்தது
என்று பரிந்துரைக்கிறார்கள். <span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"> இதற்கு இன்றைய நவீனப் பெயர் பொது விலகல்
அல்லது <span style="mso-spacerun: yes;"> </span>சமூக விலகல் ( Social
distancing).<span style="mso-spacerun: yes;"> </span>“எட்டி-நில்”<span style="mso-spacerun: yes;"> </span>என்றும் வைத்துக் கொள்ளலாம். <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"> ஆனால் எப்படிப் பார்த்தாலும் இந்த சொற்றொடர்கள்
ஆங்கிலத்தில் உள்ள அந்த உணர்வை சரியாகப் படம் பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="color: red;">சமூக விலகல் : சமூகத்திலிருந்து விலகி நிற்க என்பதாகப்
பொருள் தொனிக்கிறது<o:p></o:p></span></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><span style="color: red;">எட்டி-நில் என்பதில் நீ வேண்டாதவன்
என்ற பொருள் தொக்கி நிற்கிறது</span><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;">அப்படியானால் சரியான உணர்வை பிரதிபலிக்க
வேண்டுமானால் சாலையில் வண்டியோட்டும் போது பயன்படுத்தப்படும் Defensive driving என்கிற
<span style="mso-spacerun: yes;"> </span>சொற்றொடரின் கோணத்திலிருந்து பார்க்கலாம்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;">தன்னைப் பாதுகாத்துக் கொள்வது முக்கிய
நோக்கம் ஆதலால் அதையொட்டி ஒரு பெயரை யோசிக்கலாம்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;">சில வருடங்களுக்கு முன் - சோப்பு விளம்பரமோ
அல்லது பற்பசை விளம்பரமோ நினைவில்லை- விளம்பரத்தில் அவர்கள் அடிக்கடி <span style="mso-spacerun: yes;"> </span>காட்டிய படம் ஒரு “பாதுகாப்பு வளையம்”. <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;">கொரானோ போன்ற தொத்து வைரஸ்களிலிருந்து
நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் ஒரு தற்காப்பு வளையத்தை நம்மைச் சுற்றி நாமே
வகுத்துக் கொள்ள வேண்டும். அதை<span style="mso-spacerun: yes;"> </span>ஆறடி தூரம்
என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். <span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif;">அதைவிடக் குறைவானால் அது தொத்து என்னும் இடர் தரும் தூரமாகும். எனவே "இடர் அடி காக்க" என்பதாக எச்சரிக்கைக் கொள்ளலாம். சுருக்கமாக இடரடி காப்போம்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;">இதை சுய வேலி என்றோ அல்லது
தனி அரண் என்றோ அழைக்கலாம்.<span style="mso-spacerun: yes;"> </span>அப்படி குறிப்பிடும்
போது வேறு எந்த வகையிலும் தவறாக புரிந்து கொள்ள முடியாது. <o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;">Maintain social distance = <span style="mso-spacerun: yes;"> இடரடி விலக்கு ; </span>சுய வேலிக்குள் இருங்கள்.<o:p></o:p></span></div>
</div>
<div class="MsoNormal">
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;">இப்போது கடைகளில் ஒருவரோடு ஒருவர் தொட்டுக்
கொள்ளாமல் இருக்கும் பொருட்டு<span style="mso-spacerun: yes;"> </span>முன்னெச்சரிக்கை
<span style="mso-spacerun: yes;"> </span>நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. </span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;">ஆனாலும்
நம் எச்சரிக்கையில் நாம் ஒரு சுயவேலி அமைத்துக் கொண்டால் அதற்குண்டான இடைவெளி விட்டு நடமாடினால் சிறந்த தற்காப்பு
ஓட்டுனராகலாம்.<o:p></o:p></span><br />
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-bYMi3625oZk/XnuUdkr4eNI/AAAAAAAAGa8/M4C7KUhpaTAhM6lOC_lB0UIb4lhung2AwCLcBGAsYHQ/s1600/social_distance.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="317" data-original-width="773" height="163" src="https://1.bp.blogspot.com/-bYMi3625oZk/XnuUdkr4eNI/AAAAAAAAGa8/M4C7KUhpaTAhM6lOC_lB0UIb4lhung2AwCLcBGAsYHQ/s400/social_distance.jpg" width="400" /></a></div>
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif; font-size: 12.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif;"> எவ்வகை இடர் வரினும் சம்பந்தர் பெருமான் அருளிய திரு நீற்றுப்பதிகம் அதைப் போக்கக் கூடியது. அது எல்லா வகை நோய்களினின்றும் காப்பாற்ற வல்லது என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. </span><br />
<span style="font-family: "nirmala ui" , sans-serif;"><br /></span>
<span style="font-family: "nirmala ui" , sans-serif;"> கூன்பாண்டியனின் தீராத வெப்பு நோய் சமணர்களால் தீர்க்க முடியாதிருந்தது. அப்போது இப்பதிகத்தை ஓதி சிவபெருமானை துதி செய்து அவனுக்கு திருநீறு வழங்கினார். மன்னனது நோயும் நீங்கி சம்பந்தப் பெருமானின் பாதங்களைத் தொழுதார்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif;"> கொரோனாவின் இடர் களைய, நம்பிக்கையுள்ளவர்கள், இப்பதிகத்தை சொல்லி திருநீற்றையணிந்தால் தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டவராவார்கள்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif;">முதற்பாடல் மட்டும்</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: "nirmala ui" , sans-serif;">மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: "nirmala ui" , sans-serif;">சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: "nirmala ui" , sans-serif;">தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு</span></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue; font-family: "nirmala ui" , sans-serif;">செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே</span></div>
<div style="text-align: justify;">
<br />
உலகம் ஒரு கடினமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. விரைவிலேயே அந்த இறைவன் அருளால் யாவரும் நல்ல வண்ணம் மீள, வாழப் பிரார்த்திப்போம்.<br />
<br />
திருச் சிற்றம்பலம்.</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "nirmala ui" , sans-serif;"><br /></span></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-21828691799561671432020-01-12T05:35:00.001-08:002020-01-12T05:36:43.216-08:00சோலர் பவரும் என் அனுபவங்களும்-6 அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்<br />
<br />
<a href="https://nirmal-kabir.blogspot.com/2017/04/5.html" target="_blank"> ஏப்ரல் 2017 </a>க்குப் பிறகு மீண்டும் இந்த தலைப்பில் ஏதோ சொல்ல வருகிறேனென்றால் என்னுடைய (<span style="font-size: x-small;">சோலார்</span>) தேர் இன்னும் நிலைக்கு வரவில்லை என்பதை ஊகித்துக் கொள்ளலாம். வேறுவிதமாக சொல்வதானால் இன்னும் கற்றுக் கொள்வது (Learning curve) இருக்கிறது. இங்கே கற்றுகொள்வது என்பது தொழில்நுட்பத்தை அல்ல.<br />
<br />
நம் நடைமுறை தேவைகளுக்கு முரணாகாமல், நம் முதலீடு விரையமாகாமல் எப்படி தொழில்நுட்பத்தைக் கையாளுவது என்பதில் தான் ’கற்பது’ அடங்கியுள்ளது. இதில் அனைவர் அனுபவமும் ஒன்றாக இருக்கமுடியாது. என் அணுகுமுறை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.<br />
<br />
2 KW தனி உபயோகத்திற்கென (OFF Grid) போடப்பட்டிருந்த என் சோலார் தகடுகள் திருப்திகரமாய் 2016 ஜூன் முதல் வேலை செய்து வந்தன. என்னுடைய (அரசாங்க) மின்சார பயன்பாடு 120 யூனிட்டிலிருந்து குறைந்து 30 யூனிட்டுக்குள் வந்துவிட்டது. மாதம் 200 யூனிட் உற்பத்தியானாலும் 85 முதல் 90 யூனிட் அளவே பயன் கிடைத்தது. 60 சதம் இழப்பு அதிகம் எனத் தோன்றியது. இதை <a href="https://nirmal-kabir.blogspot.com/2017/04/5.html" target="_blank">சென்ற பதிவிலேயே</a> குறிப்பிட்டிருந்தேன்.<br />
<br />
மேலும் 4 பேட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியம் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வரும் போது சுமார் ரூ. 40000க்கு செலவு வரும் என்ற யோசனை பிடித்தாட்டியது. இதைக் குறைப்பதற்கான ஒரே வழி மின்சார உற்பத்தியைக் கூட்டி சர்காருக்கு விற்பதுதான் எனத் தோன்றியது. என் சுற்று வட்டாரத்திலும் இதை ஆமோதிக்கவே அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கினேன். ஏற்கனவே இருந்த 2 KW உடன் மேலும் 2KW சேர்த்து 4 KW ஆக்கினேன். இதில் 3KW சர்காருக்கு விற்பதெனவும் 1 KW எனக்குத் தனியாக (OFF Grid) வைத்துக் கொள்வதெனவும் தீர்மானித்தேன். என் அதிருஷ்டத்திற்கு இதை செய்துத் தர ஒரு கம்பெனியும் முன் வந்தது. பொதுவாக ஒரு கம்பெனியின் விஷயத்தில் இன்னொரு கம்பெனி கைவைக்க முன்வராது. இரண்டு வருட கியாரண்டி தாண்டியிருந்ததால் இதில் பிரச்சனை எதுவும் வராது என்று புரிய வைத்து ஒத்துக் கொள்ள வைத்தேன். ஆறு வாரத்தில் முடித்துக் கொடுப்போம் என்று சொல்லி ஆறு மாதங்கள் ஆக்கி விட்டனர் என்பது வேறு விஷயம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-iVWxgh2eZp4/XhsJGiIKDGI/AAAAAAAAF80/0qe7020SXHEpAbOXnC_3gU8Jg42GZrn_QCLcBGAsYHQ/s1600/3kw_solar.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="600" height="400" src="https://1.bp.blogspot.com/-iVWxgh2eZp4/XhsJGiIKDGI/AAAAAAAAF80/0qe7020SXHEpAbOXnC_3gU8Jg42GZrn_QCLcBGAsYHQ/s400/3kw_solar.jpg" width="300" /></a></div>
<br />
எப்படியோ செப்டம்பர் 2018 ஆரம்பித்து மார்ச் 2019 க்கு செயல்படுத்தி விட்டனர். அன்றிலிருந்து டிசம்பர் 31 வரை அரசாங்கத்துக்கு ஏற்றுமதி செய்த மின் அளவு 3450 யூனிட்டுகள். அதே சமயம் என்னுடைய தனி இணைப்பு 1 KW ஆக குறைந்து விட்டதால் என்னுடைய பயன்பாடு 30 யூனிட்டிலிருந்து 80 யூனிட்டாக அதிகரித்து விட்டது. இன்னமும் 40 யூனிட் அளவிற்கு தனி இணைப்பினால் மிச்சம் பிடிக்க முடிகிறது.<br />
<br />
சரி, இதன் வரவு செலவு என்ன என்கிறீர்களா?<br />
<br />
இந்த மாற்றத்தை மேற்கொள்ள செய்த செலவு ரூ 185000/ ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கர்நாடக அரசாங்கம் கொடுப்பது ரூ 4.15/ அதன் படி மின்சாரத்தின் மதிப்பு 14317/ இது 9 மாதங்களுக்கானது. அதே விகிதத்தில் 12 மாதங்களில் ரூ.19089 ஆகும். மேலும் 1 KW Off-grid லும் மாதம் சுமார் ரூ 230க் கான சேமிப்பு தெரிகிறது. அதன்படி இன்னொரு ரூ 2760/ வருடத்திற்கு மிச்சமாகிறது. இதன் மூலம் மொத்தம் 4 KW க்கு 21850/ மதிப்பு வருகிறது.<br />
<br />
இதில் 1 KW-ல் ஏற்பட்ட 60 % இழப்பு நேர் செய்யப்பட்டது என்பது ஒரு திருப்தி. அதாவது 2+1 -ன் முழு உற்பத்தியும் Grid க்கு அனுப்பப் படுவதால் இழப்பு எதுவும் இல்லை. பேட்டரிகளை மாற்றுகின்ற நேரம் வரும் போது இரண்டு பேட்டரிகளிலேயே சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.<br />
<br />
என்னுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பேட்டரிகள் தாக்குப் பிடித்தால் புதிய பாட்டரி செலவை இதன் மூலமாகவே ஈடுகட்ட முடியுமே என்பது தான். முதலீட்டிற்கு வட்டிக் கணக்கு பார்த்தாலும் 11.8 % வருகிறது. நட்டமில்லை.<br />
<br />
ஒரு பிரச்சனை என்னவென்றால் அரசாங்கத்திடமிருந்து உடனுக்குடன் பணம் வராது. எப்போதும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வரும். என் வங்கிக் கணக்குக்கு நேரடியாக கிரயம் எவ்வெப்பொழுதோ செய்யப்படும். எதற்கும் விவரம் இருக்காது. மாதாந்திர பில் என்பது கிடையவே கிடையாது. அரசாங்கங்களின் திறன் மேம்பட இன்னும் பல வருடங்கள் ஆகும் போலிருக்கிறது.<br />
<br />
<br />
<br />
<br />KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-36792161905955716202019-10-30T10:19:00.000-07:002019-10-30T20:17:26.971-07:00பங்குச் சந்தை என்னும் கவர்ச்சி உலகம்-3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சென்ற இதழில், பங்குச் சந்தையில் கவனமாக முதலீடு செய்வதால் வங்கிகளிடமிருந்து பெறும் வட்டி விகிதத்தை விட அதிகமாகவே வருமானம் பெற வாய்ப்புள்ளது என்பதை கண்டோம். இதில் சூதாட்ட மனப்போக்கை விலக்கி முதலுக்கு மோசமில்லாமல் வருவாயை அதிகப்படி பெருக்கிக் கொள்ள என்ன வழி என்பதே நமது முயற்சி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பாக இதில் ஆன்லைன் DEMAT கணக்கு வைத்திருப்பவர்கள் சுலபமாகவே பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதை எளிமையாக்குவதற்கு பெரும்பாலான பெரும் வங்கிகள் பங்கு விற்பனை பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். தேவைப்படுவோர்க்கு அவர்களின் சேவைப்பிரிவு முதலீடுகள் பற்றி தம்முடைய அறிவுரைகளையும் வழங்குகிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் தரும் பெரும்பாலான அறிவுரை தம்முடைய வங்கியின் பரஸ்பரநிதி (Mutual Fund) அல்லது அதனோடு இணைக்கப்பட்ட ஆயுள் பாதுகாப்பு சேமிப்பு முதலியவற்றில் முதலீடு செய்தால் பயன் அதிகம் என்பர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரஸ்பரநிதி என்பது நம்மைப் போல் நேரமும் பொறுமையையும் இல்லாத சிறு முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஒன்று திரட்டி வங்கிகளே நேரடியாக பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் பல நிபுணர்களின் அனுபவமும் முன்னோக்கும் அந்தந்த நிதியில் பயன்பட்டு லாபம் ஈட்ட ஏதுவாகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமீபத்திய மிக லாபகரமான பரஸ்பர நிதிகளின் செயல்பாடும் கடந்த 3 அல்லது 5 வருடங்களில் அவைகள் கொடுத்திருக்கும் வருமானமும் கீழ்கண்ட புள்ளிவிவரத்தின் மூலம் அறியலாம். (30/10/2019)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://1.bp.blogspot.com/-hXnMPAwOgYI/Xbm4Td2tzCI/AAAAAAAAFe4/8R64mYrGQ0I1ZlHB9doVB065A5AFqA8wgCLcBGAsYHQ/s1600/mutualfund.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="759" data-original-width="621" height="400" src="https://1.bp.blogspot.com/-hXnMPAwOgYI/Xbm4Td2tzCI/AAAAAAAAFe4/8R64mYrGQ0I1ZlHB9doVB065A5AFqA8wgCLcBGAsYHQ/s400/mutualfund.png" width="326" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<i><span style="color: blue; font-size: x-small;"> ( படத்தை சொடுக்கி பெரிதாக்கவும்) </span></i></div>
<div style="text-align: justify;">
<i><span style="color: blue; font-size: x-small;"><br /></span></i></div>
<div style="text-align: justify;">
Best Returns என்று குறிப்பிடப்பட்டுள்ள எந்த பரஸ்பர நிதியும் 10% விட அதிகம் காட்டவில்லை. ஆனால் அதே 3 வருட காலத்தில் பங்கு சந்தையின் வளர்ச்சி 50% என்பதை சென்ற கட்டுரையில் கண்டோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படியானால் முதலீட்டாளர்களின் லாபமெல்லாம் எங்கே போகிறது? நாம் செய்த முதலீடு நிபுணர்களின் பார்வையில் பங்கு சந்தையில் கொஞ்சமுமாக வைப்பு நிதியங்களில் (Debt funds) கொஞ்சமாக வைக்கப்பட்டிருந்தாலும் 25% அல்லது 30% ஆவது விருத்தி அடைந்திருக்க வேண்டாமா? இது இன்று நேற்றல்ல பலவருடங்களாக என் மனதை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னொரு வேடிக்கையையும் நீங்கள் அந்த அட்டவணையில் காணலாம். அதாவது முதல் வருடத்தில் 12%லிருந்து 18 % வரை லாபம் காட்டிய அதே நிதி 3 வது வருடம் 7%க்கும் 8 % இறங்கி விடுவதுதான். இது எப்படி? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில வங்கி தொடர்பாளர்களுடன் பேச்சு வாக்கில் நான் அறிந்து கொண்டது தங்களுடைய நிறுவன செலவுகள் ( Administrative &Marketing expenses) போக இருக்கும் லாபத்தையே பங்கு போட முன் வருகின்றனர் என்பதாகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது நிறுவனச் செலவு எவ்வளவு % இருக்க வேண்டும் என்பதில் Reserve Bank, SEBI போன்ற நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை என்ற நிலைதான் இன்று நிலவுகிறது. எல்லா பரஸ்பரநிதி நிர்வாக நிறுவனங்களும் பொடி எழுத்துகளில் Investment risk is subject to market conditions என்று எழுதி தம்மை பாதுகாத்துக் கொள்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: blue;">அதாவது செலவு கணக்கைக் கூட்டி லாபத்தை குறைப்பது ஒரு வியாபார தந்திரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.</span> நம்மூர் வழக்கு மொழியில் சொல்வதானால் இது ஒரு கூட்டுக் களவாணித் திட்டம்.<br />
<br />
<i>”உண்மையில் எவ்வளவு லாபம் ஈட்டினேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் நஷ்டம் வந்தால் அது உன் தலையெழுத்து” </i></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
தேவையான கட்டுப்பாட்டு செயல்முறை என்னவென்றால் பங்கு சந்தை குறியீட்டிற்கு ( BSE NSE Index) 60 % முதல் 70% க்கு குறையாமல் டிவிடெண்ட் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்ட ரீதியாக வலியுறுத்தப்படவேண்டும். அப்படி இல்லாமல் போனால் நட்டக்கணக்கு எழுதும் கூட்டம் பெருகிவிடும்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
முதன் முதலாக Unit Trust of India இந்த பரஸ்பர நிதியை 1986 ஆம் வருட வாக்கில் Master Share என்ற பெயரில் அறிமுகப்படுத்திய போது 10 ரூபாய் யூனிட்கள் 45 ரூபாய் வரை மூன்றாண்டு காலத்தில் வளர்ச்சி அடைந்ததை (350%) கண்டவன் என்ற முறையில் இப்போது நடத்தப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் வெறும் கண்துடைப்பு நாடகம் நடப்பதாகவே நினைக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த காரணங்களால் எனக்கு Mutual Fund -ல் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லை.<br />
<br />
<a href="https://nirmal-kabir.blogspot.com/2019/09/2.html" target="_blank">முந்தைய பதிவைக் காண</a> அடுத்த பதிவிற்கு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-29209443131951882992019-09-21T23:14:00.001-07:002019-10-30T19:37:43.411-07:00பங்கு சந்தை என்னும் கவர்ச்சி உலகம்-2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்றப் பதிவில் பங்கு சந்தையைப் பற்றிய என் கட்டுரையைப் பார்த்து முதலில் என்னிடம் கேட்கப்பட்டக் கேள்வி “நீ யாருக்காக இதை எழுதுகிறாய்?” <br />
<br />
பயணக்கட்டுரைகளை பலர் எழுத நாம் படிக்கிறோம். இதில் அவர்களுடைய அனுபவங்களை புரிந்து கொள்ளவும், போகின்ற இடத்தில் சந்திக்கக் கூடிய எதிர்பாராத பிரச்சனைகளையும், அங்கே இன்னது கிடைக்கும் அல்லது கிடைக்காது என்கிற விவரங்களை தெரிந்து கொள்ளவும் முடிகிறது. அதனால் ஓரளவு நம் மனநிலையை தயார் படுத்திக் கொள்ளலாம். சில சமயம் சொல்பவருடைய அனுபவம் நன்றாக இருந்தால் நாமும் ஒரு தடவை போய்விட்டு வரலாமே என்று தோன்றும். மோசமாக இருப்பின் ‘ஐயோ வேண்டாம்’ என்று தோன்றும். ஆர்வமுள்ளவர்கள் பலருடைய அனுபவங்களைக் கேட்டுத் <span style="color: blue;">தானாக</span> ஒரு முடிவுக்கு வருவார்கள்.<br />
<br />
என்னுடைய அனுபவத்தையும் புரிதலையும் <span style="color: blue;">அப்படிப்பட்ட ஆர்வமுடைய</span>வர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இதுவும் ஒரு அனுபவம். முடிவல்ல. இங்கே சொல்லப்படும் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகள் நிச்சயம் இருக்கும். சரி தவறு என்று ஏதும் கிடையாது. மேலும் தவறுகளை சரி செய்து கொள்ள வாய்ப்புகள் எப்போதும் உண்டு.<br />
<br />
இந்த பதிவுகளில் பங்குச் சந்தையை நான் எப்படி அணுகுகிறேன் என்பதை மையமாக வைத்து உங்கள் கருத்துகளுடன் ஒப்பிட்டுக் கொள்ளவும்.<br />
<br />
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். நம்மிடம் ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்ய சேமிப்பு இருப்பதாக வைத்துக் கொள்வோம்.<br />
<br />
என்னைப்போல் சாமானியன் முதலில் பார்ப்பது பாதுகாப்பான வங்கி வைப்புநிதி ( Fixed Deposit). இதில் வருடத்திற்கு 7 முதல் 7.6 சதம் வட்டி கிடைக்கும். அதாவது ஒரு லட்சம் என்பது ஒரு வருட இறுதியில் ரூ 7600 வரை ஈட்டும். அஞ்சல் சேமிப்பிலும் ஏறக்குறைய அதே அளவு தான் இருக்கும். ஏனெனில் இவை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுபவை.<br />
<br />
இந்நிலையில், நம் பொருளாதாரத்தின் பணவீக்கம் 5% என்று வைத்துக் கொண்டால் நம்முடைய நிகர வருமானம் ரூ 2600/ மட்டுமே. அதாவது சென்ற வருடம் ரூ 1 லட்சத்திற்கு வாங்கிய பொருளின் இன்றைய விலை ரூ 1லட்சத்து ஐந்தாயிரம். என்னுடைய வாங்கும் திறன் குறைந்து விட்டது. அதற்கு அடுத்த வருடம் அது 1 லட்சத்து ஐயாயிரத்து இருநூற்று ஐம்பதாகும். அப்போது நிகர வருமானம் 2350 ஆகக் குறையும். கவலைக்குரிய விஷயம் இது தான்.<br />
<br />
நான் ஒரு வங்கியின் அறிவுரைப்படி தொடர் வட்டியில் (Compound interest) வைத்தால் அதன் மதிப்பு ரூ.125518 ஆக மூன்று வருடங்களில் வளர்ச்சியுறும்.<br />
<br />
இதையே பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால்? இதை எப்படி அறிவது?<br />
<br />
இதற்கு சென்செக்ஸ் என்ற குறியீட்டை பயன்படுத்துகின்றனர். இது 50 அல்லது 100 மிக அதிகமாக விற்பனை பரிவர்த்தனையில் கைமாறிய பங்குகளின் ஏற்ற இறக்கத்தைக் கொண்டு கணிக்கப்படுகிறது. மும்பை சந்தையில் 2019 மார்ச் மாதத்தில் இந்த குறியீடு <span style="color: red;">38762</span> ஆக உள்ளது. இதுவே மூன்று வருடங்களுக்கு முன்பு ( 2015-16)-ல் <span style="color: red;">25341</span> ஆக இருந்தது. இதை எளிமைப்படுத்திச் சொன்னால் <span style="color: red;">52.9%</span> சதவீத வளர்ச்சி.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-AxcG6A9W5hU/XYXgh_riokI/AAAAAAAAFS4/b4cta5DnBWsY1hWSWWpZJwyHf2-1NoreACLcBGAsYHQ/s1600/bseindex.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="697" data-original-width="779" height="357" src="https://1.bp.blogspot.com/-AxcG6A9W5hU/XYXgh_riokI/AAAAAAAAFS4/b4cta5DnBWsY1hWSWWpZJwyHf2-1NoreACLcBGAsYHQ/s400/bseindex.png" width="400" /></a></div>
<br />
<br />
இதன்படி நம்முடைய முதலீடான ஒரு லட்சம் ரூபாய் 152900 ஆக வளர்ந்திருக்கும். வளர்ச்சி வேகம் வருடத்திற்கு 17.6 % ஆகிறது. இது வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட 10% அதிகம். <br />
<br />
<i> [மும்பை பங்குச் சந்தை குறியீடு போலவே தேசிய பங்கு சந்தை குறியீடு என்றும் ஒன்றுள்ளது. இது ஒரு தனி அமைப்பு. இவர்கள் குறியீடு ஏப்ரல் 2016 -ல் 7713 ஆக இருந்து 2017 மார்ச் மாதத்தின் இறுதியில் 8592 ஆக முடிந்தது. அதுவே 11570 ஆக 2019 மார்ச் இறுதியில் வளர்ந்தது. இதன்படி மூன்று வருடங்களில் 50 % வளர்ச்சியாகும் நம்முடைய முதலீடு ரூ.150000 ஆகியிருக்கும்.]</i> <br />
<br />
ஆனால் இது தனிப்பட்ட சிறு முதலீட்டார்களுக்கு அப்படியே பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் அல்லது குறைந்தும் போகலாம். அது அவர்கள் வைத்திருக்கும் கம்பெனிகளின் தனிப்பட்ட அன்றைய சந்தை மதிப்பைப் பொறுத்தது.<br />
<br />
அப்படியானால் நல்ல கம்பெனிகளை தேர்வு செய்வது எப்படி?<br />
<br />
நம் போன்ற சாமானியர்களுக்கு எளிதாகும் வகையில் எல்லா பெரிய வங்கிகளிலும் முதலீடு செய்வதற்கு <span style="color: blue;">பல வகைகளில்</span> உதவுகின்றனர்.<br />
<br />
இதில் மியுட்சுவல் ஃபண்ட், காப்பீட்டுடன் கூடிய முதலீடு என்பவையும் அடக்கம். இவற்றைப் பற்றி என் பார்வையை அடுத்த பதிவில் காண்போம்.<br />
<i><span style="font-size: x-small;"><br /></span></i>
<i><span style="font-size: x-small;"><span style="font-size: small;"><a href="https://nirmal-kabir.blogspot.com/2019/09/blog-post.html" target="_blank">முந்தைய பதிவை படிக்க</a></span> <span style="font-size: small;"><a href="https://nirmal-kabir.blogspot.com/2019/10/3.html" target="_blank">அடுத்த பதிவை படிக்க</a></span></span></i><br />
<br />
<br /></div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-49761511061978055872019-09-20T03:39:00.000-07:002019-09-22T22:29:58.877-07:00பங்கு சந்தை என்னும் கவர்ச்சி உலகம் பங்கு சந்தை வீழ்ச்சி, ஒரே நாளில் 1200 கோடி நட்டம் என்றெல்லாம் படிக்கிறோம், தொ(ல்)லைக் காட்சிகளில் விவாதங்களைக் கேட்கிறோம். இவை ஏதோ அரசாங்கத்தின் தடுமாற்றம் போலவோ அல்லது சர்வதேச வாணிக ஏற்ற இறக்கத்தாலோ ஏற்படுவன போல் காரணங்களைத் தேடுவார்கள்.<br />
<br />
இதில் செலவிடப்படும் மனிதநேரம் (Man hours) சினிமாவிலும் அரசியல் விவாதங்களுக்கும் செலவிடப்படுவதில் சற்றும் சளைத்தது அல்ல.<br />
<br />
சற்று உற்று கவனித்தால் இது ’உழைக்காமல், விரைவாக சம்பாதிக்க நினைக்கும் கூட்டத்தின் உரத்த குரல் தானே தவிர வேறொன்றும் பெரிதாக இல்லை. சூதாட்டத்தில் பணத்தை கட்டி விட்டு தவிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.<br />
<br />
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது போல மத்தியதர வர்க்கத்தினரும் எளிய வர்க்கத்தினரும் இந்த வலையில் விழுவது தான். உண்மையில் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள்தான். அவர்கள் பெயரைச் சொல்லி முதலைக் கண்ணீர் வடிக்கும் கும்பலின் ஓலம்தான் நாம் தொலைக் காட்சியில் காண்பது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://tradebrains.in/wp-content/uploads/2018/07/stock-market-meme-28.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="582" height="274" src="https://tradebrains.in/wp-content/uploads/2018/07/stock-market-meme-28.png" width="320" /></a></div>
<br />
<div style="text-align: center;">
(<span style="color: blue;"> picture coutesy : https://tradebrains.in/stock-market-memes/)</span></div>
மேற்கண்டவை என் கருத்து மட்டுமல்ல பல விவரம் தெரிந்த நிபுணர்கள், தொழிலதிபர்கள், தலைவர்கள் கருத்தும் கூட.<br />
<br />
இது நாணயத்தின் ஒரு பக்கம். மறுபக்கம் என்ன?<br />
<br />
உழைப்பினால் சேமித்த பணத்தை சும்மா வைத்திருக்கூடாது. காலம் செல்லச் செல்ல அதன் மதிப்பு குறைந்து கொண்டே போகும். இதையே பணவீக்கம் என்கின்றனர். இந்த பண வீக்கத்திலிருந்து காத்துக் கொள்ள காலங் காலமாக நம் முன்னோர்கள் கண்ட வழி தங்கமாக மாற்றி வைத்துக் கொள்வது.<br />
<br />
தொழிற்சாலை உற்பத்தியும் வர்த்தகமும் பெருகப் பெருக அதன் வளர்ச்சியும் பங்கு விலையும் ஏற்றம் காண்கின்றன. ஆகையால் இது ஒரு விதத்தில் நல்ல முதலீடே. நம்முடைய சேமிப்பை பணவீக்கத்திலிருந்து காப்பதுடன் தங்கத்தைப் போல் கட்டிக் காக்க வேண்டியசங்கடங்கள் இல்லை என்பது இன்னொரு சாரார்.<br />
<br />
இது உண்மையில்லாவிட்டால் பங்குச் சந்தை என்பது இத்தனை வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்ற நிஜத்தையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். ஓரளவு நம்முடைய தேவைகள் ( உணவு, உடை, வீடு, இதர பொறுப்புகள் ) பூர்த்தியான பின் உபரி சேமிப்பை எங்கே முதலீடு செய்வது என்பதிலே தான் ஓய்வு பெற்றவர்களின் கவனம் எல்லாம். அவர்களை முதலில் ஈர்ப்பது இந்த பங்கு சந்தையே.<br />
<br />
ஏனெனில் இவர்கள்தான் உண்மையிலே சேமிப்பை இழக்காமல் கவனமாக பாதுகாத்து செலவழிக்க வேண்டியவர்கள்.<br />
<div style="text-align: center;">
</div>
இப்படித்தான் முப்பது வருடங்களுக்கு முன் என் மாமனார் ஓய்வு பெற்ற பின் கிடைத்த ஒரு பகுதி சேமிப்பை நண்பர்கள் பலருடைய சிபாரிசின்படி ஏகப்பட்ட கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். அப்போது Demat, Online trading, என்பனவெல்லாம் கிடையாது. அங்கங்கே பங்கு தரகர்களின் சிறிய சிறிய அறைகளில் அமர்ந்து சந்தையின் ஏற்ற இறக்கங்களை சிலாகித்து சில முதலீட்டு கம்பெனிகளின் திட்டங்கள் பற்றிய செய்திகளையும் விவாதித்து விற்பனை அல்லது கொள்முதல் முடிவு செய்யப்படும். இது டீக்கடை பெஞ்சு சமாச்சாரம் தான். பெரும்பாலும் கற்பனை உலகம். அவரவர்களும் கண் வைத்து காது வைத்து தமக்குத் தோன்றுவதை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.<br />
<br />
அப்போது அவருடைய சில முதலீடுகள் நல்ல நிலையில் இருந்ததால் எனக்கும் சிபாரிசு செய்தார். நல்ல வேளை, என்னிடம் சேமிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. மேலும் பெரியவர்கள் பேச்சிற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.பத்தாயிரம் அவருக்கு அனுப்பி அவருடைய மகள் பெயரில் (என் மனைவி) அவர் உசிதம் என்று நினைக்கும் கம்பெனிகளில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். இதில் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.<br />
<br />
ஒரு சில ஆண்டுகள் கழிந்தன. ஹர்ஷத் மேத்தா, கேதன் ஃபரீக் போன்றவர்களின் சூறவளி சூதாட்டம் பங்கு சந்தையில் வந்து போனது. அவர்கள் கொடுத்த படிப்பினையின் பேரில் SEBI கண்காணிக்கும் முறை வந்தது. அதைத் தொடர்ந்து கணினியுகம் வந்து பங்கு சந்தையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் சந்தையில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதெல்லாம் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.<br />
<br />
அதற்குள் என் மாமனார் கணிசமான தொகையிழந்து தம்முடைய பங்குகளையெல்லாம் விற்று இனி பங்கு சந்தை பக்கம் படுக்க மாட்டேன் என்ற முடிவுக்கு வந்திருந்தார். இதில் தன் மகள் பெயரில் இருந்த என்னுடைய முதலீடுகள் பலவற்றையும் விற்று விட்டார். சிலவற்றை விற்க முடியாமல் விட்டு விட்டார்.<br />
<br />
விற்க முடியாமல் நின்று போன பங்குகளுக்காக SEBI -ன் கட்டாயத்தினால் என் மனைவி பெயரில் ஒரு DEMAT கணக்கு துவக்கினேன். ஆன்லைன் வசதிகள் காரணமாக அவ்வப்போது அவற்றின் சந்தை விலையை கவனிக்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! கைவிட்டுப் போனவை என்று கருதப்பட்ட அந்த பங்குகளின் விலை இன்றைக்கு லட்ச ரூபாய்க்கும் மேலே. எனக்கு பிற பங்குகள் மூலம் வந்த லாப நட்டக் கணக்குப் பிடிபடவில்லை. ஆனால் இந்த சில பங்குகள் மூலமே அன்றைய முதலீடு நேராக்கப்பட்டு விட்டது என்றே நினைக்கிறேன்.<br />
<br />
வங்கி அல்லது அஞ்சல்துறை வைப்புநிதியானால் ரூ. 10000 இருபதாயிரம் ஆவதற்கு குறைந்தது 8 முதல் 10 வருடம் வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்த முப்பது வருடங்களில் ரூ. 50000 ஐ தாண்டமுடியாது. ஆகவே ரூ. ஒரு லட்சம் என்பது நிஜமாகவே கணிசமான வளர்ச்சிதான். அந்த குறிப்பிட்ட கம்பெனிகளும் பல ஏற்ற இறக்கங்களுக்கு இடையே தொழில் வளர்ச்சி கண்டிருந்தன.<br />
<br />
ஒரு உண்மை உறைக்கத் துவங்கியது. பங்கு சந்தையில் நல்ல வளர்ச்சி காண வேண்டுமானால் அவசரப்படக்கூடாது. குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினர் இதை ஒரு நெடுங்கால முதலீடாகக் கருத வேண்டுமே அன்றி குறுகிய காலத்தில் அதிக லாபம் என்று இறங்கக் கூடாது.<br />
<br />
அதே சமயத்தில் சற்று கவனுத்துடன் செயல்பட்டால் வங்கிகளின் வைப்பு நிதி விகிதத்தை விட சற்று அதிகமாகவே ஈட்ட முடியும் என்று தோன்றியது. அடுத்த பதிவில் இதைப் பற்றி பலரின் அணுகு முறை என்ன என்பதைக் காண்போம். இதில் என் அனுபவத்தைக் காட்டிலும் பிற அன்பர்களின் பரிந்துரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். என்னுடைய ஒப்பீடுகளும் இடம் பெறும். <br />
<br />
ஏனெனில் என்னுடைய அனுபவத்தை பதிவு செய்ய மேலும் சில வருடங்கள் தேவைப்படுமே !!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.tflguide.com/wp-content/uploads/2010/11/Gold-Vs-Equity1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="313" data-original-width="772" height="162" src="https://www.tflguide.com/wp-content/uploads/2010/11/Gold-Vs-Equity1.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
( cartoon courtesy tf india.in )<br />
<br />
<a href="https://nirmal-kabir.blogspot.com/2019/09/2.html" target="_blank">அடுத்த பகுதி</a></div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-39908341976764554162019-08-27T09:43:00.001-07:002019-08-27T09:43:47.755-07:00ஜோடி சோபா Fevicol கதையும் என் கதையும்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: large;">Great minds think alike !</span><br />
<br />
ஒரு <a href="https://nirmal-kabir.blogspot.com/2008/04/blog-post_26.html" target="_blank">ஜோடி நாற்காலியின் கதை</a> என்று நான் எழுதிய கதை ஒன்றை வருத்தப் படாத வாலிபர் சங்கம் இரண்டாம் ஆண்டு வலைப்பூ போட்டிக்கு அனுப்பி வைத்தேன். போட்டியின் முக்கியமான கண்டிப்பு ‘ஜோடி’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப் படவேண்டும். அது எந்த ஜோடியாக வேண்டுமானாலும் இருக்கலாம்...காதல்ஜோடி, செருப்பு ஜோடி இத்யாதி.<br />
<br />
பரிசு எதுவும் கிடைக்கவில்லை. போகட்டும், அதை பரிசுக்காக நான் எழுதவும் இல்லை. வெறும் என் கற்பனைத் திறனுக்கு ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டேன்.<br />
<br />
இது நடந்தது 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். பதினொரு ஆண்டுகளுக்குப்பின்......<br />
<br />
நேற்று ஒரு தொலைக்காட்சி சானல் ஒன்றில் Pidilite-Fevicol நிறுவனத்தின் புதிய விளம்பர படம் ஒன்றைப் பார்த்த போது ஆச்சரியம் மேலிட்டது.<br />
<br />
ஏனெனில் அவர்கள் எடுத்துக் கொண்ட கருவும் ஜோடி சோபா-தான். பல தலைமுறைகளுக்கு உழைக்கும் வகையில் ’பிடிலைட்’ சோபாவை உறுதியாக வைத்திருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.<br />
<br />
அவர்கள் படத்தில் காட்டுவது போல் என் கதையிலும் குழந்தைகள் சோபாவில் ஏறி விளையாடுவதைச் சொல்லியிருந்தேன்.<br />
<br />
ஏன் அவர்கள் ஜோடி சோபாவை தேர்ந்தெடுக்க வேண்டும்? அதை அவர்கள் திருமண சீதனமாகக் காட்டியிருக்கிறார்கள்.<br />
<br />
என் கதையிலும் அது திருமண வரவேற்புகளில் அதிகம் பயன்பட்டதாகச் சொல்லியிருந்தேன்.<br />
<br />
என் மனதில் அந்த விளம்பரத்தைப் பார்த்த போது சந்தோஷம் கலந்த ஆர்வம். அருமையான படபிடிப்பு, பாடல் இசையமைப்பு. யூட்யூபில் நான்கு நாட்களிலேயே 66000க்கும் அதிகமான பார்வையாளர்கள் 113 க்கும் அதிகமான பாராட்டுகள். நீங்களும் கண்டு மகிழுங்கள்.<br />
<br />
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="276" src="https://www.youtube.com/embed/9W87c1Jfr7M" width="490"></iframe>
</div>
<br />
இதிலிருந்து ஒன்று புரிகிறது. நமது எண்ண அலைகள் என்றும் மடிவதில்லை. நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு எண்ணமும் அதற்கேற்ற ஒரு கருவியை கண்டால் வெளிப்படுகிறது. எனக்குத் தோன்றிய கதைக் கருவும் யாரால் எப்போது எங்கே வெளிப்பட்டதோ தெரியாது.<br />
<br />
ஆனால் நான் என் கற்பனையில் எழுதியதாக நினைத்தேன். அதே போல் இந்த படம் எடுத்தவர்களும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.<br />
<br />
இதைத் தான் சுவாமி விவேகானந்தர் “பெரும் தவசிகள் யாரும் காணாத குகைகளில் அமர்ந்து கொண்டு சமுதாயத்திற்குத் தேவையான ஆழமான சிந்தனைகளை தமக்கேற்ற கருவிகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்” என்று சொல்கிறாரோ என்னமோ ! இதற்கிடையில் மனிதர்கள் வெளிப்படுத்தும் நல்ல தீய எண்ணங்களும் அவைகளுக்கேற்ற திறனுக்கேற்ப பலன்களை விளைவித்துக் கொண்டிருக்கும்.<br />
<br />
எண்ணங்களின் வலிமை அபாரம். நல்லனவற்றையே சிந்திப்போம், வெளிப்படுத்துவோம்.</div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-81968635473749157722019-02-20T00:05:00.000-08:002019-02-20T02:26:31.874-08:00டிவிட்டர் என்னும் பறவையுலகம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பெரிய மரங்களின் அடியில் அந்தி சாயும் வேளைகளில் அமர்ந்திருக்கும் போது பறவைகளின் கீச் கீச் என்ற சத்தம் அந்த பகுதியையே உயிரோட்டமுள்ளதாக மாற்றும். நல்ல வேளை அவைகளின் மொழி நமக்கு புரிவதில்லை. தெரிந்தால் இப்போதுள்ள டிவிட்டர் உலகம் போலத் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.<br />
<br />
சமூகத் தளங்கள் எனப்படும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் போல டிவிட்டரும் ஒரு சமூகத் தளம். யார் யாருடன் வேண்டுமானாலும் கருத்து பகிரலாம் இருவரும் டிவிட்டர் கணக்கு வைத்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.<br />
<br />
எனக்கு 2009 லிருந்தே டிவிட்டர் கணக்கு இருப்பினும் அதை வெறும் என் பதிவுகளை பிறருக்கு தெரிவிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தேன். எனக்கு குறைவான அரசியல் ஆர்வக் காரணமும் அங்கே எழும் அர்த்தமற்ற விவாதங்களும் என்னை விலக்கியே வைத்தன.<br />
<br />
சமீபத்தில் நண்பரொருவர் ( எதிர்வீட்டுக்காரர்- 10000 அதிகமான Followers) தூண்டி விட்டதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று டிவிட்டர் தளத்திற்கு அடிக்கடி வந்து புரட்ட ஆரம்பித்தேன். பலருடைய கீச்சுகளை (tweets) படித்த பின் அவ்வப்போது எனக்குள் எழும் எண்ணங்களை அவர்களுக்கு பின்னூட்டமாக இட ஆரம்பித்தேன். இதில் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பது புரிந்தது.<br />
<br />
மழையும் சகதியும் நிறைந்த குறுகிய பாதையில் கண் மண் தெரியாமல் வண்டி ஓட்டுபவர்கள் பாதசாரிகள் மேல் தெரிக்கின்ற சேற்றைப் பற்றி கவலைப் படாமல் போவது போலத்தான் இந்த சமூகத்தளம். யார் யாரைப் பற்றியும் எப்படியும் கருத்து சொல்லலாம். அதிலுள்ள நியாயத்தையோ அநியாயத்தையோ சுட்டிக் காட்டப்போனால் தூள் பறக்கும். பலர் முகமூடிகளுடன் திரிவதால் நாகரீகமற்ற சொற்களையும் பயன்படுத்தத் தயங்குவதில்லை. இதை trolling என்று சொல்கிறார்கள். அதனால் நீங்கள் எப்பொழுதுமே தெரிந்தவர்களுடனேயே இருப்பது நல்லது. சுதந்திரப் பறவை என்று நினைத்து சுற்றிவரப் போனாலோ எங்கிருந்து எப்போது கல் பறக்கும் என்று தெரியாது.<br />
<br />
உதாரணத்திற்கு ஒரு அம்மையார் யாரையோ பற்றி ஆங்கிலத்தில் விமரிசிக்கும் போது “மூதேவி!” என்று ஆரம்பித்து தன் கருத்தை சொல்லி இருந்தார். பெரும்பான்மையான தமிழரல்லாத வாசகர்களுக்கு அதன் பொருள் என்னவென்று விளங்காததால் அப்படி என்றால் என்ன? என்று கேட்டிருந்தனர். அவர் எவருக்கும் பொருள் சொல்லாத காரணத்தால் நான் வட இந்திய அன்பருக்கு உதவட்டுமே என்று <i>”தமிழில்,<b> கோபத்தின் போது </b>சொல்லப்படும் ஒரு வசவுச் சொல். துரதிரிஷ்டம் தரும் பெண் என்ற பொருளில் மந்தபுத்தி உடைய மகளையோ வேலைக்காரியையோ அல்லது அண்டை வீட்டுப் பெண்மணியையோ ஏச்சும் சொல்”</i> என்று குறிப்பிட்டிருந்தேன்.<br />
<br />
ராக்கெட் வேகத்தில் அந்த அம்மையாரிடமிருந்து பதில் வந்தது. <i>”என்னவொரு அபத்தமான விளக்கம்! யாராவது வேலைக்காரியை மூதேவி என்பார்களா? Rubbish racist ! ..... </i>என்று ஆரம்பித்து<i> மூதேவி பாற்கடலில் ஆலாஹல விஷத்துடன் தோன்றியவள் என்று விளக்கம் கொடுத்து she is ”embodiment of laziness and misfortune"</i> என்று முடித்திருந்தார்.<br />
<br />
இவருடைய பதில் எவ்விதத்தில் நான் குறிப்பிட்ட பேச்சு வழக்கை தவறு என்று காட்டியது என்று புரியவில்லை. என்னுடைய கிராம வாழ்க்கையில் பலர் பல சந்தர்பங்களில் மூதேவி, சனியனே, சண்டாளா, கட்டையல போறவனே ....(இன்னும் பலவுண்டு) சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவர் கேட்காத பட்சத்தில் நான் Racist ஆகி விட்டேன் ! அப்படியானால் இதை அவர் டிவிட்டரில் எந்த பொருளில் பயன்படுத்தினார்? வேலைக்காரி அல்லாத எவரையும் மூதேவி என்று திட்டலாமா?? எனக்கு முன்பு, தானே அந்த விளக்கத்தை கேட்பவருக்குக் கொடுத்திருக்கலாமே, ஏன் கொடுக்கவில்லை?<br />
<br />
எதற்கு சொல்ல வந்தேன் என்றால் இப்படி தம்மை தாமே மிக உயர்வாக நினைத்துக் கொண்டு கீச்சுபவர்கள் ஏராளம். சேறு நம் மேல்தான் வீசும்.<br />
<br />
இன்னொரு வகை உண்டு. அடுத்தவர்களின் கீச்சுகளை அப்படியே நகலெடுத்து தம்முடையது போல் காட்டிக் கொள்பவர்கள். இவர்கள் அதை மொழிமாற்றமோ அல்லது மீள் கீச்சோ (Retweet) செய்யாமல் தன் சொந்த எண்ணத்தை பதிவிடுவதாகக் காட்டிக் கொள்வார்கள். கீழே ஒரு உதாரணம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-xFEU6gL2Nx8/XG0DE-r2TOI/AAAAAAAADsg/zlKX4mgOStojyBZ7zO1LGcHrz7czWEtDACLcBGAs/s1600/copy%2526paste.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="768" data-original-width="1366" height="223" src="https://3.bp.blogspot.com/-xFEU6gL2Nx8/XG0DE-r2TOI/AAAAAAAADsg/zlKX4mgOStojyBZ7zO1LGcHrz7czWEtDACLcBGAs/s400/copy%2526paste.png" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;">(படத்தை சுட்டினால் முழுவதும் படிக்கலாம்)</span></div>
<br />
இப்படி போலிமுகங்கள் மிக அதிகம் டிவிட்டர் உலகில். அதனால் தான் நான் அதிகம் யாரையும் பின் தொடர்வதில்லை. என்னைத் தொடர்பவரின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலையும் இல்லை. இப்பொழுதெல்லாம் மிக தேர்ந்தெடுத்த சில கேள்விகளுக்கு ( அது யாரிடமிருந்து எழுகிறது என்பதைப் பார்த்து) என்னுடைய மனதில் நியாயம் எனப்பட்டதை பதிவு செய்கிறேன்.<br />
<br />
<span style="color: blue;">அப்படி பதிவு செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என்ற கேள்வி எழலாம். ஒவ்வொரு கருத்தும் ஒரு விதை போல. அது பழத்தை தின்ற பறவையின் எச்சத்தில் விழும் விதை எந்த மண்ணில் எப்போது முளைக்குமோ தெரியாது. நல்ல கருத்துகளை தெரியப்படுத்த சமூக வலைத்தளம் ஒரு நல்ல சாதனம்.</span><br />
<br />
அது போலவே இன்றைய ஊடகங்கள் செய்யும் தவறான பிரச்சாரங்களையும் அரைவேக்காட்டு உண்மைகளையும் மிக மிக விரைவாக தோலுரித்து காட்டிவிடுகின்றனர். உதாரணம் ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்த ரஃபேல் விவகாரத்தில் கத்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ராணுவ ஆவணம் எப்படி தவறானது என்றும் பொய் பிரச்சாரத்தில் அது ஈடுபட்டுள்ளது என்பதையும் டிவிட்டர் மக்கள் வெளிக்குக் கொண்டு வந்தனர். ஆகவே இன்று பத்திரிக்கைகளையும் தொலைக் காட்சிகளையும் நம்புவதை விட நாமே சமூக வலைத் தளங்களுக்கு சென்று உண்மையை கண்டறிய வேண்டும். ஆனால் அதற்கு நம்பத் தகுந்தவர்களை மட்டுமே பின் தொடர வேண்டும்.<br />
<br />
டிவிட்டர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. தவறான வதந்திகளை மிக வேகமாக பரப்புகிறது என்பவற்றை பற்றி சட்ட ஒழுங்கு பிரச்சனை கண்ணோட்டத்துடன் கவலை எழுந்திருக்கிறது. இதைப் பற்றி <a href="http://adworldaroundus.blogspot.com/2019/02/twitter-and-whatsapp-social-media.html" target="_blank">ஆங்கிலத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறேன்</a>.<br />
<br />
டிவிட்டர் உலகில் பிழைக்க வேண்டுமானால் பாதசாரியாக நடந்து செல்லக் கூடாது. பறவை போல பறக்கத் தெரிய வேண்டும். நீங்கள் பருந்தாகவோ ஆந்தையாகவோ இருந்தால் பரவாயில்லை. தனிக் குருவிக்கு கஷ்டந்தான். </div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-10199343096414609592018-10-02T05:32:00.000-07:002018-10-02T07:32:43.207-07:00நம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி.<br />
<br />
அவர் வருவதைத் தெரிந்து கொண்டு எல்லா புகை வண்டி நிலையங்களிலும் அவருடைய தரிசனத்திற்காக கட்டுப்பாடு செய்யவே கடினமானதான மக்கள் கூட்டம் கூடி விடும். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் ஒரு சிறிய புகைவண்டி நிலைய அதிகாரிக்கு காந்திஜி தன்னைஅழைப்பதாகக் கேட்டதுமே தலைகால் புரியாத சந்தோஷம்.<br />
<br />
அவரைக் கண்டதுமே காந்திஜி தன் உதவியாளர் வி.கல்யாணத்தைக் காட்டி “ இவருக்கு ஒரு பயணச்சீட்டுக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை வழங்கவும். என் பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர் உடன் வருவதை அறியார்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்த அதிகாரியோ “உலகமே கொண்டாடும் உங்களிடம் பயணச்சீட்டுக் கேட்க முடியாது “என்று மறுத்தார். அதற்கு காந்திஜி “ நீங்கள் உங்கள் கடமையிலிருந்து தவறுகிறீர்கள். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் புகார் கொடுக்க நேரிடும்” என்று பயமுறுத்தியதும் திரு கலியாணத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டது.<br />
<br />
<a href="https://2.bp.blogspot.com/-xoQRnD7HgHI/W7NbzMpGKBI/AAAAAAAACxY/L-ttTYpmpUceoV819lwZQc1NIJpbNdSjgCLcBGAs/s1600/V_kalyanam.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="247" src="https://2.bp.blogspot.com/-xoQRnD7HgHI/W7NbzMpGKBI/AAAAAAAACxY/L-ttTYpmpUceoV819lwZQc1NIJpbNdSjgCLcBGAs/s1600/V_kalyanam.png" /></a>இன்று 96 வயதாகும் திரு V கல்யாணம் காந்திஜியின் கடைசி நான்கு வருடங்கள் அவருடைய தனி உதவியாளராக இருந்தவர். 1944 -ல் ஆங்கில அரசாங்கத்தில் ரூ.250 மாத சம்பள வேலையை உதறிவிட்டு காந்திஜியிடம் உதவியாளராக சேர்ந்தார். “என்னால் அறுபது ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும்” என்று காந்திஜி சொன்னதற்கு “ ஆசிரமத்தில் எனக்கு உணவும் உடையும் மட்டும் போதும். நான் சேவையாகவே இதை செய்கிறேன்” என்று வார்தா வில் உள்ள சேவாக்கிராமத்தில் சேர்ந்து கொண்டார்.<br />
<br />
“ அவருக்கு வரும் கடிதங்களை பிரித்து அடுக்கி வைப்பது, பின்னர் அவர் <br />
சொல்லும் பதில்களை குறிப்பெடுத்து தட்டச்சு செய்வதே எனக்கிடப்பட்ட கடமையாக இருந்தது. நான் எத்தனையோ முறை தவறுகள் செய்த போதிலும் அவர் ஒரு போதும் என் மீது கோபம் கொண்டது இல்லை. பொறுமையாகத் திருத்துவார். பிறர் மனம் நோகப் பேசுவதையே அஹிம்சைக்கு எதிரானது என்பதை உறுதியாக எண்ணிய மகான் அவர். நாட்கள் கூடக் கூட அவர் மேலான மதிப்பு கூடிக் கொண்டே போனது” என்கிறார் சென்னையில் வசிக்கும் திரு கல்யாணம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-dRJAr-2RgEU/W7NhOVmmU0I/AAAAAAAACxk/1fwf1Pgma0IcEM3hDOOCs4fGy8d-bN67ACLcBGAs/s1600/V_kalyanam2.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="343" data-original-width="449" height="244" src="https://3.bp.blogspot.com/-dRJAr-2RgEU/W7NhOVmmU0I/AAAAAAAACxk/1fwf1Pgma0IcEM3hDOOCs4fGy8d-bN67ACLcBGAs/s320/V_kalyanam2.png" width="320" /></a></div>
இன்றும் தனது 96 ஆவது வயதில் சுறுசுறுப்பாக தனது தேவைகளை தானே கவனித்துக் கொண்டு துணி துவைப்பது, சமையல் செய்வது, காய்கறிகளை விளைவிப்பது மட்டுமன்றி சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அவர் காட்டும் அக்கறை அவருடைய ஆசிரமப் பணியின் தொடர்ச்சிதான்.<br />
<br />
’ஒருவன் தனது தேவைக்கு மீறி சேமிப்பது தேவையற்றது அதை பங்கிட்டு உண்ண வேண்டும்’ என்ற கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் அவர் தனது மாதாந்திர ஓய்வு தொகையான ரூ.பத்தாயிரத்தில் ஒன்பதாயிரத்தை அனாதை இல்லங்களுக்கும் பிற சேவா காரியங்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்து விடுகிறார்.<br />
<br />
எல்லோரும் திரு கல்யாணத்தை போல் வாழ்ந்து விட்டால் ஒரு பொற்காலமே மலர்ந்து விடும்.<br />
<br />
இது ரேடியோ சாயி-ல் இன்று வெளியான ஒரு கட்டுரையின் சிறு பகுதியே. முழுக் கட்டுரையையும் படிக்க “ <a href="http://media.radiosai.org/journals/vol_16/01OCT18/Story-of-Gandhijis-Secretary-Bishu-Prusty.htm" target="_blank">Story of Gandhiji;s Secretary -Mr V Kalyanam</a>...."<br />
<span style="font-size: x-small;"><i>[Pics : Thanks to Radiosai] </i></span><br />
<span style="font-size: x-small;"><i><br /></i></span>
<span style="font-size: x-small;"><i>-------------------------------------------------------------------</i></span><br />
<span style="font-size: x-small;"><i>இன்று காந்தி ஜெயந்தி . இந்திய வரலாற்றை மாற்றியமைத்த அந்த மகானுக்கு அர்ப்பணம்</i></span>
<span style="font-size: x-small;"><i><br /></i></span></div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-64113862656167942412018-07-29T05:01:00.001-07:002018-07-29T10:46:22.920-07:00ஹைட்ரோபானிக்ஸ்-ஸில் என் பரிசோதனைகள்-1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும் பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை யூட்யூப் வீடியோக்களில் பார்த்த வண்ணம் இருந்தேன்.<br />
<br />
என்னைக் கவர்ந்தது <span style="color: blue;">நீரியல் வளர்ப்பு என்றழைக்கப் பெறும் ஹைட்ரோபானிக்ஸ்</span> முறையில் செடிகளை வளர்க்கும் முறைதான்.<br />
<br />
இம்முறையில் நீரின் தேவை மிகக் குறைவு. அதாவது 10% மட்டுமே !!!<br />
<br />
மேலும் இது மண்ணில்லா வளர்ப்பு முறை. செடியின் வேர்கள் நேரடியாக நீருக்குள் சென்று வளர்ச்சியை கொடுக்கிறது.<br />
<br />
ஆனால் என் தேடலில் இதை வெற்றிகரமாக தமிழகத்தில் செய்து வருபவர்கள் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதைத் தொழில் ரீதியாகத் தான் செய்யவேண்டுமே ஒழிய பொழுது போக்காக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலீடு செய்து கட்டுபடியாகாது.<br />
<br />
எனவே இதனை எளிமைப்படுத்த வேண்டியது என் முதல் முயற்சியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இனி படிப்பதற்கு சுலபமாக கேள்வி-பதில் பாணியில் தருகிறேன்.<br />
<br />
<span style="color: red;">1) எளிமை படுத்த முடிந்ததா?</span><br />
<br />
பரிசோதனையின் முதல் படியிலேயே வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. யூடியூபில் தேடியதில் சிலர் Kratky முறையில் சிறிய தொட்டிகளில் அல்லது பாட்டில்களில் ஊட்டக் கரைசலை விட்டு கீரை, காய்கறிகள் போன்றவற்றில் அதிக விளைச்சலை காண முடிவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இவை அத்தனையும் செயற்கை இரசாயன உரமாகக் காணப்பட்டது. என்னுடைய குறிக்கோள் இயற்கை உரங்களால் வளர்க்கப் படவேண்டும் என்பதாக இருந்தது. இது பரிசோதனைக்கு இரண்டாம் கட்டமாயிற்று.<br />
<br />
<span style="color: red;">2) முதல் கட்டத்தை தாண்டினீர்களா?</span><br />
<br />
ஓரளவு ஆம் என்றே சொல்லலாம். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். எப்படி உபயோகமற்றது என்று தூக்கிப் போடும் தண்ணீர் பாட்டில்களை செடி வளர்ப்புக்காக பயன்படுத்தப் படுகிறது என்பதைக் காணலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-hBigx5kE6x4/W1wdS52mEMI/AAAAAAAACgs/NC7dmkIJ9JEBETn4A2L1R8BEK22h357LACLcBGAs/s1600/kratky_system2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="763" data-original-width="1278" height="238" src="https://1.bp.blogspot.com/-hBigx5kE6x4/W1wdS52mEMI/AAAAAAAACgs/NC7dmkIJ9JEBETn4A2L1R8BEK22h357LACLcBGAs/s400/kratky_system2.png" width="400" /></a></div>
<br />
<br />
நீரியல் முறையில் வளர்ப்பதற்காக வலை போன்ற சிறிய கிண்ணங்கள் விற்கப்படுகின்றன. மூன்று அங்குலம் உள்ள கிண்ணம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு பொருத்தமாக இருக்கிறது. விதைகள் இளம் செடிகளாக இந்த வலைக்கிண்ணத்தில் வேர் விட்டதும் அவற்றை நீருள்ள பாட்டிலுக்கு மேலே அமர்த்தி விடலாம். எல்லா உயிர்கட்கும் இறைவன் கொடுத்திருக்கும் அதிசய ஆற்றல் காரணமாக வேர்கள் கீழறங்கி நீரை எட்டி விடுகின்றன. இதன் பின்னர் நாம் பாட்டிலில் நீரின் அளவை கவனித்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். வாரம் ஒரு முறை பார்த்துக் கொண்டால் போதும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-ju-tFdBmTYU/W1wS43omPwI/AAAAAAAACgg/sXX8NzDQeboh57ZRb3DLj-Ih-WHM0nvlACLcBGAs/s1600/hydroponics.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="494" data-original-width="665" height="297" src="https://2.bp.blogspot.com/-ju-tFdBmTYU/W1wS43omPwI/AAAAAAAACgg/sXX8NzDQeboh57ZRb3DLj-Ih-WHM0nvlACLcBGAs/s400/hydroponics.png" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;"><i>( படத்தை சொடுக்கி பெரிதாக்கி படிக்கலாம்)</i></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;"><i><br /></i></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: blue; font-size: x-small;"><i><br /></i></span></div>
3) <span style="color: red;">ஆம் வேர் அடர்த்தியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் எல்லாம் கீரை வகைகளாகவே உள்ளனவே?</span><br />
<br />
கீரைகள் வேகமாக வளரும் என்பதால் முதலில் அவற்றை முயற்சித்தேன். இவை எனது நம்பிக்கையை பலப்படுத்த பெருமளவு உதவி செய்தன. ஒரு வகையில் உற்சாகம் ஊட்டுவதாகவும் இருந்தது. அதனால் தக்காளிச் செடியையும் “கிராட்கி” முறையில் வளர்த்துப் பார்த்தேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-AihIwv51nDs/W1w6XIV08II/AAAAAAAACg4/OV2VYsPSHPsYH9yR1ULrIUcaUiUXMkkrgCLcBGAs/s1600/kratky3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="468" data-original-width="624" height="300" src="https://3.bp.blogspot.com/-AihIwv51nDs/W1w6XIV08II/AAAAAAAACg4/OV2VYsPSHPsYH9yR1ULrIUcaUiUXMkkrgCLcBGAs/s400/kratky3.png" width="400" /></a></div>
<br />
<br />
சில நாட்களிலேயே இரண்டிற்கும் வித்தியாசம் புலப்படத் தொடங்கியது. தொட்டி மற்றும் பைகளில் வளர்ச்சி வேகம் அதிகமாகவும் நீரியல்-கிராட்கி முறையில் குறைவாகவும் காணப்பட்டது. ஊட்டச் சத்துக் குறைவாகிக் கூடாதென்று தினமும் கம்போஸ்ட் டீ எனப்படும் இயற்கை உரத்தை காலையிலும் மாலையிலும் நீரியல் பாட்டில்களுக்குக் கொடுத்தாலும் அதிக முன்னேற்றம் காணப்படவில்லை.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-vUazuqfsLSA/W12J3spG4jI/AAAAAAAAChc/XrE9ENLSnfQzpS0lIuz4M7ql0K84ZUrjACLcBGAs/s1600/hydroponics_tomato.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="619" data-original-width="993" height="248" src="https://2.bp.blogspot.com/-vUazuqfsLSA/W12J3spG4jI/AAAAAAAAChc/XrE9ENLSnfQzpS0lIuz4M7ql0K84ZUrjACLcBGAs/s400/hydroponics_tomato.png" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="color: red;">4) இதற்கான காரணம் என்ன ?</span> </div>
<br />
எனக்குத் தோன்றுவது செடியின் வேர் இயற்கையாக வளர வேண்டிய விட்டம் 8 அல்லது 10 அங்குலமாக இருந்து அதை மூன்று அங்குல அளவிலே குறுக்குவது ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது. இது ஒரு பெரிய மரத்தை போன்சாய் தொட்டிக்குள் வளர்ப்பது போல எனலாம். ஆனால் செயற்கை இராசயன கரைசல்களில் இந்த பிரச்சனை இருப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை. ஆகையால் அதிக அளவு (இயற்கை) ஊட்டச்சத்து பெரிய பைகளில் கிடைப்பதாலும் இருக்கலாம் என்றும் தோன்றியது.<br />
<br />
<span style="color: red;">5) அப்படியானால் கிராட்கி முறை எதிர்பார்த்த பலனை தரவில்லை எனச் சொல்லலாமா ?</span><br />
<br />
இப்போதே அதை முடிவு கட்டமுடியாது. அடுத்ததாக, வலைக்கிண்ணத்தின் விட்டத்தை தொட்டியின் அளவுக்கு (8 அங்குல அளவிற்கு) பெரிதாக்கி முயற்சிக்க இருக்கிறேன்.<br />
<br />
<span style="color: red;">6) அதனால் என்ன பயன்? கிண்ணம் பெரிதானால் அதில் நிரப்ப வேண்டிய தேங்காய் நார்கழிவும் அதிகம் தேவைப்படுமே ?</span><br />
<br />
அதிகம் தேவைப்படினும் ஒரு தொட்டியில் இடப்படும் மண் (அல்லது நார்கழிவை) ஐந்தாறு பெரிய கிண்ணங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அடிப்படை நோக்கம் என்னவென்றால் பராமரிப்புத் தேவையை குறைத்துக் கொள்வதே. வேர்கள் நேராக நீரின் தொடர்பில் இருக்கும் போது நமக்கு நீர் மேலாண்மை சுலபமாகிறது.<br />
<br />
<span style="color: red;">7) இந்த குறைபாடு தக்காளிக்கு மட்டுமா ? கீரைகளில் வளர்ச்சி வித்தியாசப்படவில்லையா ?</span><br />
<br />
கீரைகளிலும் வித்தியாசம் அதிகமாகவே இருந்தது. உதாரணமாக தொட்டியில் பசலைக் கீரை (spinach) காட்டிய வளர்ச்சி வேகம் நீரியல் முறையை விட அதிகமாகவே இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-iUoJolMbKvs/W1xWnu74iLI/AAAAAAAAChQ/EUZxSQ4Vkj8O_KcnoVoZsU43RSnIiQoMwCLcBGAs/s1600/hydroponics2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="363" data-original-width="519" height="278" src="https://3.bp.blogspot.com/-iUoJolMbKvs/W1xWnu74iLI/AAAAAAAAChQ/EUZxSQ4Vkj8O_KcnoVoZsU43RSnIiQoMwCLcBGAs/s400/hydroponics2.png" width="400" /></a></div>
<span style="color: red;">8) இதில் நீர் மேலாண்மை நிலவரம் எப்படியிருந்தது ?</span><br />
<br />
கண்டிப்பாக நீர் மிச்சப்படுகிறது. தெர்மோகோல் பெட்டியுள் நீர் 3 லிருந்து 4 அங்குல உயரம் எப்போதும் இருப்பதால் அதில் தினமும் நீர் ஊற்றத் தேவை இல்லை. ஆனால் தொட்டி வளர்ப்பில் மிக வேகமாக நீர் ஆவியாகி உலர்ந்து போவதால் காலையும் மாலையும் குறைந்தது அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை ஊற்ற வேண்டி இருந்தது. அந்த வகையில் நீரியல் வளர்ப்பில் கண்டிப்பாக சேமிப்பு இருக்கிறது.<br />
<br />
<span style="color: red;">9) வேறு ஏதாவது பயன் காணப்பட்டதா?</span><br />
<br />
வளர்ச்சி சற்றுக் குறைவாக காணப்பட்டாலும் இலைகள் மிக ஆரோக்கியமாக வளர்கின்றன. எதிலும் பூச்சித் தாக்குதலோ வேறெந்த வகையான நோய் அறிகுறியோ தென்படவில்லை. வெயில் கடுமையாக இருந்தால் எடுத்து நிழலில் வைப்பது அல்லது மழை நேரத்தில் இடம் மாற்றுவது என்பது சுலபமாக இருந்தது.<br />
<br />
<span style="color: red;">10) நீரியல் வளர்ப்பு முறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன ?</span><br />
<br />
வலைக்கிண்ணத்தில் உள்ள நார்கழிவுக்கு - மண்ணைப் போலல்லாமல் -திடத்தன்மை குறைவாக இருப்பதால் வேர்களுக்கு பிடிமானம் ஆரம்பநிலையில் போதுமானதாக இருப்பதில்லை. அதிகக் காற்று செடியின் நாற்றுகளை நிலைகுலையச் செய்கின்றன. அடுத்ததாக இதில் தரப்படும் ஊட்டச் சத்தின் அளவை நிர்ணயிக்க கடினமானதாக இருக்கிறது. நீரிலேயே இயற்கை உரங்களை கரைத்து கொடுக்கும் முயற்சியும் நம்பிக்கைத் தரவில்லை. அந்த கலங்கிய நீரில் பிராணவாயு குறைந்து செடிகள் வேர் அழுகல் நோயினால் தாக்கபட்டன. இதனால் எப்போதும் சுத்தமான நீரையே வேர்களுக்கு கொடுக்க வேண்டியதாகிறது. அப்போது தினசரி ஊட்டக் கரைசல் சொட்டு சொட்டாக கொடுக்கும் அவசியம் ஏற்படுகிறது. சற்று பெரிய அளவில் செய்யும் போது இதை சொட்டு நீர் முறைக்கு மாற்றி நார்கழிவில் உறிஞ்சப்பட்டு செடிகளுக்கு சேரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-nYCT1O5i1IM/W12o76M5HHI/AAAAAAAACho/ATLwXZsurJQ_wiwZutIRp717VS9gIPmWwCLcBGAs/s1600/kratky2png.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="624" data-original-width="468" height="320" src="https://4.bp.blogspot.com/-nYCT1O5i1IM/W12o76M5HHI/AAAAAAAACho/ATLwXZsurJQ_wiwZutIRp717VS9gIPmWwCLcBGAs/s320/kratky2png.png" width="239" /></a></div>
<br />
<br />
வாசகர்களுக்கு நீரியலில் அனுபவங்கள் இருப்பின் அவசியம் பகிரவும். இது பலருக்கும் பயன்படும். அடுத்தக்கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் இதன் அடுத்த பகுதி வெளியாகும்.</div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-76814368085170446342018-05-26T20:35:00.001-07:002018-05-27T06:18:40.616-07:00கைவிடப்பட்ட செல்வங்களை மீட்பவர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள்ளிகளை மூடிவிடலாமா என்று ஆலோசனை செய்கிறதாம் !!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-l6a6Z2BPjls/Wwqvvu-cqPI/AAAAAAAACJY/iynNpH4ry-Mq9S5t8pQLxDUL8leTGsC1QCLcBGAs/s1600/TN_school.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="1280" height="320" src="https://4.bp.blogspot.com/-l6a6Z2BPjls/Wwqvvu-cqPI/AAAAAAAACJY/iynNpH4ry-Mq9S5t8pQLxDUL8leTGsC1QCLcBGAs/s320/TN_school.jpg" width="320" /></a></div>
<div style="text-align: center;">
<span style="color: blue; font-size: x-small;"> ( வாட்ஸ்-ஆப் அன்பருக்கு நன்றி)</span></div>
<br />
இதற்கு காரணம் யார்? குழந்தைககள் பள்ளிக்கூடத்தை வெறுப்பதற்குக் காரணம் அவர்கள் இருக்கும் சூழ்நிலையே. ஒன்று குடும்ப சூழ்நிலை அல்லது பள்ளி ஆசிரியர்களின் இறுக்கமான அல்லது பொறுப்பற்ற போக்கு.<br />
<br />
அச்சிறார்களுக்கு அன்பு என்கிற ஊட்டம் கிடைக்காமல், பயம் என்கிற பிசாசு பிடித்துக் கொள்கிறது. அப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி பிடிக்காத சூழ்நிலையிலிருந்து ஓடிப் போவதுதான்.<br />
<br />
நமது நாட்டில் சுமார் 4 கோடி சிறுவர் சிறுமியர் மேல்நிலைப் பள்ளி எட்டும் முன்பே விலகிப் போகின்றனர் என்கிறது புள்ளி விவரம். இதில் உள்ள அபாயம் என்னவென்றால் இவர்கள் திசை திருப்பப்பட்டு சமூக எதிரிகளாக -போராளிகள் என்ற பெயரிலோ அல்லது சில சில்லறை காசுகள் வேண்டி வன்முறை கும்பல்களுக்கு அடிவருடிகளாகவோ- மாறிப் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.<br />
<br />
இந்த சறுக்கலை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதே கேள்வி.<br />
<br />
இதற்கு அடிப்படைக் கேள்வியான ’கல்வி என்பதன் நோக்கம் என்ன ?’ என்பதற்கு பதில் காண வேண்டும்<br />
<br />
<span style="color: blue;">"Character is end of education" </span><br />
<span style="color: blue;"><br /></span>
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்<br />
உயிரினும் ஓம்பப்படும்.<br />
<br />
சுருக்கமாகச் சொல்வதானால் எழுத்தறிவு பெற்ற நல்ல குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். தாங்களும் நேர்மையில் நின்று தன்னை சார்ந்த சமுதாயத்தையும் அன்புடன் பேணுபவரே நல்ல குடிகள். பணம் சம்பாதிப்பதற்காக படிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. இந்த எண்ணத்தை இளம் வயதிலேயே ஆழமாகப் பதிக்க வேண்டிய முறையே சரியான கல்வி முறை.<br />
<br />
அதன் முதல் படி அன்பும் அரவணைப்பும் உடைய ஆதரவான சூழ்நிலை. இரண்டாவது -அவர்களை பள்ளி பாடதிட்டத்தின்படி விஷயங்களை நிரப்பிக்கொள்ளும் எந்திரங்களாக பாவிக்காது -அவர்களுக்கு இயல்பாக ஏற்புடைய துறைகளில் ஊக்கம் கொடுத்து அதனோடு ஊடே எழுத்தறிவையும் சமூக, சுற்றுச்சூழல் பேணுதலையும் போதிக்க வேண்டும். கற்பது என்பது ஆர்வத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டுமே அன்றி வேண்டாத பளுவாகி விடக்கூடாது.<br />
<br />
இவையெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்று சந்தேகப் படுபவர்களுக்கு ‘சாத்தியமே’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் திரு அனந்தகுமார். ( http://www.divyadeepatrust.org/)<br />
<br />
மைசூர் அருகில் இவர் சுமார் இருபது வருட காலமாக நடத்திவரும் ‘கலியுவ மனே’ ( Home for Learning) என்னும் மரபுசாரா பள்ளி, பின் தங்கிய மாணவ மாணவியருக்காவே நடத்தப்படுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-ptAH3CsjRwg/WwmP8i3pHyI/AAAAAAAACJM/g6QWu2_OnXMXKs-Wgd2SBX0on3idD3epgCLcBGAs/s1600/divyadeepa2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="432" data-original-width="587" height="293" src="https://4.bp.blogspot.com/-ptAH3CsjRwg/WwmP8i3pHyI/AAAAAAAACJM/g6QWu2_OnXMXKs-Wgd2SBX0on3idD3epgCLcBGAs/s400/divyadeepa2.png" width="400" /></a></div>
<br />
<br />
பள்ளியை வெறுத்த அல்லது படிப்பு ஏறவில்லை என்று ஒதுக்கப்பட்ட அனைத்து சிறுவர்களும் இங்கு வருடத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சேரலாம். அவர்களை உணர்வு பூர்வமாக அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான வகையில் பாடங்கள் சொல்லித் தரப்படுகிறது.<br />
<br />
IQ அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஏற்றவகையில் பாடதிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ஒரு குழுவில் எட்டு வயது சிறுமியும் பன்னிரண்டு வயது பாலகனும் ஏன் பதினைந்து வயது எட்டிய சிறுவனோ சிறுமியோ கூட ஒன்றாகப் படித்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரின் வளர்ச்சி வேகமும் வேறு வேறாக இருக்கும். அதன்படி குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டு சரியான முறையில் அவர்களின் அறிவு வளர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.<br />
<br />
அவர்களுக்கு பரீட்சை பயமோ அடுத்த வகுப்புக்கு செல்வோமோ இல்லையோ என்ற பயங்கள் இல்லாத வண்ணம் அவர்களுடைய முன்னேற்றம் கண்டறியப்படுகிறது.<br />
<br />
ஒரு சிறுவனோ சிறுமியோ குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நிலையை கடக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.<br />
<br />
பத்தாம் வகுப்பு தகுதியை அவர்கள் எட்டும் போது அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு மாநில தேர்வில் தன்னிசை (private candidate)யாகத் தேர்வு எழுதி தகுதி பெற வழி செய்கின்றனர். அதன் பின்னர் அவர்களின் தேர்ச்சியைப் பொறுத்து மேற்படிப்புக்கு வழி செய்வதோ தொழிற்கல்வி பயில்வதற்கோ பரிந்துரைக்கப்படுகின்றனர்.<br />
<br />
இனி அனந்தகுமாரே அவருடைய பயணத்தை சொல்லட்டும்.<br />
<br />
<iframe allow="autoplay; encrypted-media" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/KLFQqaXRVi4" width="460"></iframe>
<br />
சமீபத்தில் அவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது இந்த மரபுசாரா கல்வி முறைக்கு இன்னும் கல்வித்துறையிலிருந்து தக்க அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்லினார். இவருடைய கல்வி முறைப் பற்றி மத்திய அரசு நடத்திவரும் ஆசிரிய பணிக்கான பயிற்சிகூடமான Regional college of Education Mysore மாணவி ஒருவர் ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்து அதன் சிறப்பு அம்சங்களை வெளியிட்டிருக்கிறார்.<br />
<br />
ஆர்வம் உள்ளவர்களுக்கு இவர் நாடெங்கிலும் இப்படிப்பட்ட பள்ளிகளை நடத்த விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்பதையும் தெரிவித்தார்.<br />
<br />
<span style="color: blue;"> எனக்கென்னமோ இந்த முறையை ஒரு கூடுதல் பிரிவாக ஒவ்வொரு பள்ளியிலுமே இயக்கலாம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இன்றைய வசதியுடைய நகர்புற குழந்தைகளிடையேயும் இத்தகைய பிரச்சனைகள் உண்டு. தனியாக இதற்கெனப் பள்ளி என்னும் போது அவர்கள் தனிமை படுத்தப்படுகின்றனர். மேலும், </span><span style="color: blue;">பின் தங்கிய மாணவர்களின் பெற்றோர்கள் “ உங்கள் பிள்ளையை வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்” என்கிற பேச்சை கேட்க வேண்டியிருக்காது.</span><br />
<br />
RTE ( right to education) சட்டத்தில் மாணவர்களை தகுதி இருப்பினும் இல்லாவிடினும் அடுத்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும். இதனால்தான் தரம் தாழ்ந்து விடுகிறது. ஆகையால் ’வகுப்பு முறை இல்லாத’ தகுதி மற்றும் வயது அடிப்படையில் மட்டும் இறுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படும் பொழுது வெற்றிக்கான வாய்ப்பும் மாணவர்களின் தகுதியும் மேம்படுகிறது.<br />
<br />
<i><span style="color: red;"> பள்ளி மற்றும் ஆசிரியருடைய வேலை ஒரு தோட்டக்காரனைப் போன்றது. செடிக்கு உரமிட்டு, நீர் ஊற்றி, களையெடுத்து, பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை. விதையின் வீர்யத்திற்குத் தக்கவாறு வளர்ச்சி இருக்கும். அதில் குற்றம் காண வேண்டிய அவசியமில்லை.</span></i><br />
<br />
திரு அனந்தகுமார் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் தற்காலத்தில் குருகுல முறை என்பதை நடைமுறைபடுத்த வேண்டுமானால் அதற்கு ஒரு மாதிரி பள்ளியை தன் உழைப்பினால் உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது. ஏனெனில் அந்த கால குருவும் மாணவனின் தகுதியையும் குணநலன்களையும் மனதில் கொண்டே அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் வகையில் பாடங்களை சொல்லிக் கொடுத்தனர் என்று படித்திருக்கிறோம்.<br />
<br />
இவரை "Redeemer of the forgotten" என்றால் மிகையாகாது.<br />
<br />
<br /></div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-50414218880691933232018-04-21T01:52:00.001-07:002018-04-21T01:52:21.605-07:00புதிய படைவீரர் திரள்கின்றனர் ! பராக் பராக்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force.<br />
<br />
இப்போது நீங்கள் பொதுவாக கேள்விப் படாத BSF பற்றி சொல்லப்போகிறேன். இது Black Soldier Fly.<br />
<br />
முன்னது தேசம் காப்பது, பின்னது சுற்றுச் சூழல் காப்பது.<br />
<br />
தமிழ் விக்கி பீடியா இதை ”<a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" target="_blank">படைவீரன் ஈக்கள்</a>” என்று குறிப்பு தருகிறது.<br />
<br />
இது குப்பை கழிவுகளில் ஈக்கள் பெருகாமல்-அதன் மூலம் நோய் பரவலை -தடுக்கிறது. இதனால் இதனை நன்மை பயக்கும் பூச்சி இனமாகக் கருதுகின்றனர். இதைப் பற்றி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்பதை சொல்கிறேன்.<br />
<br />
சிறிது காலமாக, மாடித்தோட்டம் போட வேண்டும் என்ற ஆவல் உந்த பல யூ-ட்யூப் சலனப் படங்களைப் பார்த்து சிறிது சிறிதாக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அப்போது கண்டது தான் வீட்டில் சமயலறைக் கழிவுகளைக் கொண்டு ‘கம்போஸ்ட்’ செய்வதன் மூலம் நாமே இயற்கை உரம் தயாரிக்கலாம் என்பது அரிச்சுவடி பாடமானது. “சமயலறையில் அதற்கு இடம் கிடையாது அதோட அழுகிப் போகிற நாத்தத்தையெல்லாம் இங்கே கொண்டு வரக்கூடாது” என்ற ஆணைக்குப் பணிந்து அதை காற்றோட்டமான கூடைகளில் சேமிக்கத் தொடங்கி மொட்டை மாடியின் ஒரு மூலையில் வைத்தேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-OAkXuaqZe4w/WtrZFYaN7tI/AAAAAAAAB30/NyuIHV5r4goHKdbt08ywek6gVH53P4UjwCLcBGAs/s1600/compost-basket.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="375" src="https://4.bp.blogspot.com/-OAkXuaqZe4w/WtrZFYaN7tI/AAAAAAAAB30/NyuIHV5r4goHKdbt08ywek6gVH53P4UjwCLcBGAs/s1600/compost-basket.png" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
சுமார் ஒரு மாதத்தில் கூடை நிறைந்து அடுத்த கூடையை ஆரம்பித்தாயிற்று. பொதுவான பரிந்துரைகளின்படி பழைய கூடையை அவ்வப்போது கிளரி, தண்ணீர் தெளித்து கீழே அதன் கறுப்பான டிகாக்ஷனைப் பிடித்து பத்திரப் படுத்திக் கொண்டேன். இன்னமும் சீரியஸாக தோட்டம் எதுவும் ஆரம்பிக்கவில்லை. இருக்கின்ற இரண்டு மூன்று -துளசி, செம்பரத்தை, காசித்தும்பை -தொட்டிகளுக்கு அதை கரைத்து ஊற்றினேன். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இப்போது தான் ஒரு விசித்திரமான காட்சி தெரிய ஆரம்பித்தது. திடீர் திடீரென்று இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை எங்கு பார்த்தாலும் கருப்பு வர்ண புழுக்கள் ஊர்ந்து போவதை மாடி முழுவதும் அங்கங்கே காணமுடிந்தது. முதலில் அருகிலிருக்கும் பூவரசம் மரங்களிலிருந்து வருவதாக நினைத்தேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
“ஆமா ! இத்தனை வருஷமா இல்லாதது இந்த வருஷந்தான் புதுசா வருதாக்கும் !! எல்லாம் <b>உங்க</b> கம்போஸ்ட்தான்” என்கிற விசாரணை கமிஷன் முடிவுக்குப் பின்னர் இதை பற்றிய விவரத்தை கூகிளாரிடம் கேட்டேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-XTC7noSXD9o/WtrfIJEqI7I/AAAAAAAAB4Q/0nMIAVgoMvAEs-bMi2cOdaYOlwa_od0wwCLcBGAs/s1600/H_illucens.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="250" data-original-width="630" height="157" src="https://3.bp.blogspot.com/-XTC7noSXD9o/WtrfIJEqI7I/AAAAAAAAB4Q/0nMIAVgoMvAEs-bMi2cOdaYOlwa_od0wwCLcBGAs/s400/H_illucens.png" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
”ஓ இதுவா ! இது Black Soldier Fly -ன் கூட்டுப்புழு நிலைக்கு முந்தய நிலை. ” என்று பதில் சொல்லியது. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
அதன் பின்னர் தீவிரமாகத்தேடியதில் தான் தெரிந்தது இது பெரிய அளவில் ஆராயப்பட்டுவரும் ஒரு ஈ வகை பூச்சி, <i>Hermetia illucens</i>. அதை ஓரளவு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இது ஈ வகையைச் சேர்ந்தாலும் ஈக்களைப் போல நோயைப் பரப்புவன அல்ல. ஏனெனில் எதையும் உண்பதற்கு வாயமைப்பு கிடையாது. அவைகளின் ஆயுட்காலமே 5 முதல் 8 நாட்கள் மட்டுமே. இந்த காலத்தில் அவற்றின் ஒரே தொழில் இனப் பெருக்கம் மட்டுமே.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
கழிவு சார்ந்த ஈரப்பதம் மிக்க இடங்களில் இந்த ஈ முட்டையிடும் ( 600 முதல் 800 வரை) . இவைகளுக்கு பறக்கும் நிலை வந்தவுடன் ஆகாரம் எதுவும் தேவைப்படாது. ஏனெனில் புழு நிலையிலேயே அவற்றை கொழுப்பாகவும் புரதமாகவும் மாற்றி சேமித்துக் கொள்ளும். முட்டைப் பொரிந்து புழுக்கள் வெளியே வந்ததும் பெருந்தீனி தின்பவைகளாகி விடுகின்றன. இவைகளின் எடை 9000 மடங்கு 12 நாட்களில் கூடிவிடும் என்கின்றனர். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம் இந்த புழு வளர்ப்பையே தொழில் ரீதியாகத் தொடங்கியுள்ளது. 432 மணி நேரத்தில் ஒரு கிராம் (45000) முட்டைகள் சுமார் 2.5 கிலோ புரதம் கொடுக்கும் என்று விஞ்ஞான ரீதியாக கண்டறிந்து தமது நிறுவனத்தின் பெயரையே<a href="https://newatlas.com/farm-432-fly-larva-food/28509/" target="_blank"> ' Farm 432'</a> என்று பெயரிட்டுள்ளனர். இதை விட வேகமாக கழிவுகளிலிருந்து புரதம் தயாரிக்க முடியுமா என்பது சந்தேகமே. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இதனால் இதைக் கொண்டு மீன் கழிவினால் கிடைக்கும் புரத ஆகாரத்திற்கு ( Fish Protein) மாற்றாக பயன்படுத்தமுடியுமா என்கிற ஆராய்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
BSFL ( Black Soldier Fly Larve) என்றழைக்கப்படும் இந்த புழுக்கள் வர்த்தக ரீதியாக எதிர்காலத்தில் மண்புழுவைக் காட்டிலும் அதிகப் பயனைத் தரலாம். ஏனெனில் மண்புழுக்கள் <b>ஓரளவு மக்கிய</b> இலை, தழை, சாணக் கரைசல்களையே பெரிதும் விரும்பும். பழத் தோல் மற்றும் புளிப்பு உடைய உணவுப் பொருட்களின் அமிலத் தன்மையால் அவைகளை ஜீரணிக்க முடிவதில்லை. அவை அந்த நிலைகளில் உயிர் வாழ்வதும் அரிது. ஆனால் BSFL- படை வீரர்களைப் போலவே - எந்த விதக் கழிவையும் ஜீரணித்து மண்ணிற்கு ஏற்றதாக மாற்றி விடுகிறது. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
நான் கம்போஸ்ட் செய்ய ஆரம்பித்த போது சில மண்புழுக்களை அதனுள் விட்டுப்பார்த்தேன். அடுத்த நாளே அவை வெளியே வந்து, வெயில் சூடு தாங்க முடியாமல் இறந்து போயின. இருட்டை விழையும் புழுக்கள் எதற்காக வெளியே வந்தன என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு வேளை பாக்டீரியாக்களினால் அமிலத்தன்மை காரணமாக இருக்கலாம் என்று ஊகித்தேன். BSFL பற்றி தெரிந்து கொண்ட பின்னர் அது உறுதியாயிற்று. </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
இன்னொன்றும் புரிந்தது. நான் காற்றோட்டமாக இருக்கட்டும் என்று வலைக் கூடையை பயன்படுத்துவதும் BSFL பெருகுவதற்குக் காரணமாக இருக்கலாம். இதையே காற்றுப் புகாத குழிகளிலோ டிரம்களிலோ கம்போஸ்ட் செய்தால் இவை வளருமா என்பது கேள்விக்குரியது</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
புதுமையான தொழில் ஏதேனும் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுவோர்க்கு பட்டாளத்து வீரன் போல கண்டிப்பாக BSFL தீவன தயாரிப்பில் பெரிதும் உதவக்கூடும். </div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
</div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-23598087315434675602018-03-03T04:26:00.000-08:002018-03-03T04:26:04.818-08:00உலகுக்கு ஆன்மாவின் கடன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் மூன்று வீரர்களில் அவரும் ஒருவர். அவர் புரிந்த வீரச் செயல் ‘கார்கில்’ போரில் மிகவும் அடிபட்டு ரத்தம் ஒழுகிய போதும் மூன்று எதிரிகளை ஓட ஓட விரட்டி அவர்களை கொன்று தம்முடைய போர் நிலையை காப்பாற்றினார்.<br />
<br />
உயிரைப் பயணம் வைத்து நாட்டுக்காகப் போராடும் வீரர்களுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய விருது அது. அவருடைய வீரத்திற்கும் தியாகத்திற்கும் தலை வணங்குவோம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-owvyAyy-W84/Wpp-fArL__I/AAAAAAAAB1w/YU9LRny4m6QXYhvyuezbMAzs9ewSLXZcwCLcBGAs/s1600/flagsofhonour.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="523" data-original-width="735" height="283" src="https://4.bp.blogspot.com/-owvyAyy-W84/Wpp-fArL__I/AAAAAAAAB1w/YU9LRny4m6QXYhvyuezbMAzs9ewSLXZcwCLcBGAs/s400/flagsofhonour.jpg" width="400" /></a></div>
<br />
<br />
டிவிட்டரில் இப்படிப்பட்ட தியாகிகளின் <a href="https://twitter.com/FlagsOfHonour/status/969815165737816065" target="_blank">Remember and Never Forget</a> @FlagsofHonour என்ற முகவரியில் பெறலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-231uG-MitOE/Wpp-fMcX99I/AAAAAAAAB10/Tz8f3huqHuczmK-UFMOniVgPyztEh_rVgCLcBGAs/s1600/FoH-1jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="840" data-original-width="1200" height="280" src="https://4.bp.blogspot.com/-231uG-MitOE/Wpp-fMcX99I/AAAAAAAAB10/Tz8f3huqHuczmK-UFMOniVgPyztEh_rVgCLcBGAs/s400/FoH-1jpg.jpg" width="400" /></a></div>
<br />
இப்படி தம் உயிரைப் பணயம் வைத்துப் போரிடும் தியாகிகளின் மனநிலைப் பற்றி டி.வி.ஜி. என்ன சொல்கிறார் பார்ப்போம்.<br />
<br />
<span lang="KN" style="background: white; color: #333333; font-family: "Tunga",sans-serif; font-size: 14.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: KN; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ಹತ್ಯೆಯೋ ಹನ್ಯತೆಯೊ ವಿಜಯವೋ ಪರಿಭವವೊ ।</span><span style="color: #333333; font-family: "Arial",sans-serif; font-size: 14.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"><br />
</span><span lang="KN" style="background: white; color: #333333; font-family: "Tunga",sans-serif; font-size: 14.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: KN; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ಕ್ಷತ್ರಿಯಂ ಸ್ವಾರ್ಥಮಂ
ಗಣಿಸುವನೆ ರಣದೊಳ್ ।।</span><span style="color: #333333; font-family: "Arial",sans-serif; font-size: 14.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"><br />
</span><span lang="KN" style="background: white; color: #333333; font-family: "Tunga",sans-serif; font-size: 14.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: KN; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ಕೃತ್ಯನಿರ್ಣಯ
ಬಾಹ್ಯಲಾಭನಷ್ಟದಿನಲ್ಲ ।</span><span style="color: #333333; font-family: "Arial",sans-serif; font-size: 14.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"><br />
</span><span lang="KN" style="background: white; color: #333333; font-family: "Tunga",sans-serif; font-size: 14.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: KN; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ಆತ್ಮಋಣವದು ಜಗಕೆ ಮಂಕುತಿಮ್ಮ
।।</span><br />
<span lang="KN" style="background: white; color: #333333; font-family: "Tunga",sans-serif; font-size: 14.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-IN; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: KN; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span>
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: #38761d; font-size: x-small;">(ஹத்யெயோ ஹன்யத்யெயோ விஜயவோ பரிபவவோ</span></span><br />
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: #38761d; font-size: x-small;">க்ஷத்ரியம் ஸ்வாதர்மம் கணிசுவனே ரணதொள்||</span></span><br />
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: #38761d; font-size: x-small;">கிருத்ய நிர்ணய பாஹ்ய லாபனஷ்டதினல்ல|</span></span><br />
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: #38761d; font-size: x-small;">ஆத்மருணவது ஜககே மன்குதிம்மா|| )</span></span><br />
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: blue; font-size: x-small;"><br /></span></span>
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: blue;">கொல்வதோ கொல்லப்படலோ, வெற்றியோ தோல்வியோ |</span></span><br />
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: blue;">வீரனும் சுயநலத்தைக் கணிப்பதில்லை போரிலே ||</span></span><br />
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: blue;">கர்ம நிர்ணயம் புற லாப நட்டத்திலில்லை |</span></span><br />
<span lang="KN" style="background: white; font-family: Tunga, sans-serif; line-height: 115%;"><span style="color: blue;">ஆன்மாவின் கடனது உலகுக்கு -மக்குத் திம்மா||</span></span><br />
<br />
தான் வாழும் சமூகத்திற்காக தன்னையே மறக்கிறான் வீரன். போராடும் நேரத்தில் லாப நஷ்ட கணக்கில்லை. வெற்றி பெறுவோமோ இல்லையோ எனக்கிடப்பட்ட கட்டளையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் ஒன்றே முன் நிற்கிறது<br />
<br />
ஆன்மா என்ற சொல்லை டி.வி. ஜி. ஏன் கையாண்டார் என்கிற கேள்வி மனதில் எழுந்தது. ஆன்மீகத்தில் சொல்லப்படுவது, மனது ஆன்மாவில் லயக்கும் பொழுது தூல உடலை மறக்கும் நிலையை எய்துகிறது. அனைத்து உயிருள்ளும் ஒளிரும் ஆன்மா ஒன்றே என்பது அத்வைத சித்தாந்தம். அதனால் எல்லா ஆன்மாக்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று கடன்பட்டவையே.<br />
<br />
அதனால்தானோ என்னவோ திருவள்ளுவரும், <i>“அஞ்சாது போராடும் செயல் பேராற்றலே ஆயினும் பகைவர்களுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் அவருக்கு உதவிசெய்தல் அதைக்காட்டிலும் கூர்மையுடையது ”(773)</i> என்பதாக ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துவது போல் சொல்லியிருக்கிறார்.<br />
<br />
<span style="color: #cc0000;">பேராண்மை என்பதறுகண், ஒன்றுற்றக்கால் </span><br />
<span style="color: #cc0000;">ஊராண்மை மற்றதன் எஃகு</span><br />
<br />
அட்ரினல் சுரப்பி அதிகமாக அட்ரினல் ஹார்மோனை சுரப்பதால் அந்த கண நேர வீரத்தை உடல் தோற்றுவிக்கிறது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கூற்று. ஆனால் மனதிற்கு உடல் மேல் உள்ள ஆதிக்கத்தையே இதுவும் குறிக்கிறது.<br />
<br />
ஒரு சமுதாயக் கூட்டமாக மக்கள் வாழத் தொடங்கும் போதே ஒருவரை சார்ந்து மற்றவர் இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இந்த ‘ருண பந்தம்’ ஆரம்பிக்கிறது. அதையே உலகிற்கு நாம் படும் கடனாக கொள்ளலாம்.<br />
<br />
போர் முனைக்கு செல்லாத குடிமக்கள், இந்தக் கடனை பிறருக்கு சேவை செய்வதன் மூலம் தீர்க்கலாம். பசி பிணி போக்குவது, கல்வி அளிப்பது என்று எவ்வளவோ வாய்ப்புகள் உண்டு. <br />
<br />
அது சரி, பகல் கொள்ளையாக வங்கிகளை ஏமாற்றி கோடிக் கணக்கில் கடன் பெற்றவர் எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா !<br />
<br />
“தன் வினை தன்னைச் சுடும்” என்பதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள். நாம் நம் தியாகிகளைப் போற்றக் கற்றுக் கொடுத்தால் வரும் தலைமுறைகளாவது நல்ல முறையில் வர வாய்ப்புண்டு.</div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-63979017122599994962017-06-20T19:23:00.000-07:002017-06-20T19:41:47.608-07:00பூனைகளும் எறும்புகளும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அது குட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றும் வரை காத்திருப்போம் என்று விட்டு விட்டோம். குட்டிகளும் சற்று பெரியவையாகி விளையாட ஆரம்பித்து விட்டன. விளையாட்டை ரசிப்பவர்களுக்கு அவைகளின் ஒரு சலனப்படம் கீழே. <br />
<a name='more'></a> குறிப்பாக தாய் பூனை எப்படி மேலே ஏறிப் போய் எப்படி கீழே இறங்குவது என்பதை செய்து காட்டுகிறது என்பதை கவனிக்கவும். படம் அலைபேசியில் சுட்டது.<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/mkGMOkLPIFc" width="520"></iframe><br />
சரி, அடுத்து இன்னொரு முறை குட்டி போட இடம் கொடுக்க வேண்டாம் என்று நேற்று காலை அதையெல்லாம் அப்புறப்படுத்த ஆரம்பித்தோம்.<br />
<br />
அட! பெட்டிகளின் உள்ளே பூனை ராஜ்ஜியமோ இல்லையோ தெரியாது. அவற்றின் அடியில் ஒரு பெரிய எறும்புகளின் ராஜ்ஜியமே நடந்து கொண்டிருக்கிறது. நூற்றுக் கணக்கான எறும்புகளுக்கும் அவற்றின் முட்டைகளுக்கும் அந்த இடம் பெரும் பாதுகாப்பாக இருந்திருக்கிறது போலும். துடப்பத்தை எடுத்து எல்லாவற்றையும் சுத்தம் செய்து விடலாம் என்று சொல்லிக் கொண்டே தன் பலமான ஆயுதத்தை கொண்டு வரப் போனாள் என் மனைவி.<br />
<br />
இரண்டு நாள் முன்னர்தான் தொலைக் காட்சியில் பாவமன்னிப்பு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். தொழிற்சாலை கட்டுவதாகச் சொல்லிக் குப்பத்து மக்களை இடம் காலி செய்யச் சொல்லி விரட்டுவார் MR ராதா. அவர்கள் அவரிடம் தங்களுக்கு போக்கிடம் வேறு இல்லை எனவும் தொழிற்சாலையை வேறு இடத்தில் கட்டிக் கொள்ளும்படியும் கெஞ்சுவார்கள்.
இந்த எறும்புகளுக்கு வாயிருந்தால் அப்படித்தான் கெஞ்சியிருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. உடனேயே, சீ சீ மனிதர்களை விட அவை புத்திசாலிகள். இயற்கை அவைகளுக்கு ஏகப்பட்ட புத்திசாலிதனத்தை வழங்கியிருக்கிறது. அவற்றின் மூளையில் இரண்டு லட்சத்துக்கும் மேலான செல்கள் இருக்கின்றனவாம் !<br />
<br />
இப்போதெல்லாம் Ant Logic என்பதே ஒரு பாடமாக ஆராய்ச்சிப் பொருளாக ஆகியிருக்கிறது. மென்பொருள் வல்லுனர்கள் அவற்றின் முடிவெடுக்கும் திறனை அனுசரித்து problem solving software தயாரிக்க முற்படுகிறார்கள்.<br />
<br />
மனிதர்கள் மட்டும் அவைகளுடைய போக்கில் குறுக்கே வராமலிருந்தால், பிரச்சனை வரும் போது அவை எப்படி முடிவுகளை மேற்கொள்கின்றன என்பதை கண்ணாரக் காணலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள், இப்போது எனக்கு ஒரு சந்தர்பம் வாய்த்தது.
துடப்பத்துடன் வந்த என் மனைவியைத் தடுத்தேன். ”அவைகள் வேறு இடம் பார்த்து குடி பெயரும் வரை பொறு. மதியத்திற்கு மேல் சுத்தம் செய்து கொண்டால் ஆயிற்று” என்று சொல்லி படம் பிடிக்க என் செல்போனை கொண்டு வரப் போனேன். “ஆரம்பிச்சாச்சா உங்க ரிஸர்ச்சை ?” என்று அலுத்துக் கொண்டே வேறு வேலையை பார்க்கப் போனாள்.<br />
<br />
என் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. பார்ப்பதற்கு அந்த எறும்புகள் தாறுமாறாக குழம்பிப் போன ஒரு கூட்டத்தைப் போல இங்குமங்கும் ஓடினாலும் அவைகளின் நடுவே ஏதோவொரு முறையில் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு சில நிமிடங்களிலேயே அவைகள் அருகே இருந்த கேபிள் டிவிக்காரர்களின் கேபிள் மேல் வரிசையாக முட்டைகளை சுமந்து செல்வதை காணமுடிந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் முட்டைகளையெல்லாம் பத்திரமாக புதிய இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டன.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-CFmJOVksFjo/WUnTKXWOJRI/AAAAAAAABp0/fI57W9Wt5GMitsszqsjG7-iF2MiCjRY4ACLcBGAs/s1600/ant_shifting.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="768" data-original-width="1366" height="223" src="https://1.bp.blogspot.com/-CFmJOVksFjo/WUnTKXWOJRI/AAAAAAAABp0/fI57W9Wt5GMitsszqsjG7-iF2MiCjRY4ACLcBGAs/s400/ant_shifting.png" width="400" /></a></div>
<span style="color: #cc0000;"> <i><span style="font-size: x-small;">(படத்தை சுட்டினால் பெரியதாக்கிக் காணலாம்)</span></i></span><br />
<br />
படத்தில் காண்பது ஒரு சிறிய பகுதியே. அந்த எறும்புகளை மிதித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் வெளிப்பக்கமாக இருந்த ஒரு பகுதியை மட்டும் படம் எடுத்தேன்.<br />
<br />
இதில் என்னை சிந்திக்க வைத்தது ஒன்றுதான். அது எப்படி அவ்வளவு வேகமான தீர்மானத்திற்கு புது இடத்தைப் பற்றி வர முடிந்தது. அது ஏற்கனவே இம்மாதிரியான ஒரு நெருக்கடி நிலவரத்தை எதிர்பார்த்து தயாராக இருந்திருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் Exigency Plans என்பார்கள்.<br />
<br />
அங்கே தலைவி அல்லது தலைவன் அல்லது வழிகாட்டிகள் என்று குறிப்பிட்டு சொல்லும்படியான எறும்புகளை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு சில ஒரு குறிப்பிட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்தன. உதாரணத்திற்கு என் ஆடை மேல் ஏறிய சில எறும்புகளை தட்டி விட்டதில் ஒன்று குற்றுயிராய் போய் விழுந்தது. அதைக் கண்டதும் என் அஜாக்ரதையான செயலை நினைத்து வருத்தப் பட்டேன். பல சமயங்களில் அவைகளை சக தொழிலாளர்கள் வந்து உடனடி நிவாரணம் தரக்கூடும் என்று படித்திருந்ததால் அதைக் கவனிக்க ஆரம்பித்தேன்.<br />
<br />
ஒரு சில எறும்புகள் அருகே வந்து அதை முகர்ந்து பார்த்து வேறு பக்கம் போய் விட்டன. அப்படி போனவைகளில் ஏதோ ஒன்று செய்தி கொடுத்திருக்க வேண்டும். இன்னொரு எறும்பு வந்தது. தன் சகாவை சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பல முயற்சிகள் செய்து நிமிர வைத்து நடக்க வைக்க முயன்று கொண்டிருந்தது. அதன் பின்னர் அதனால் முடியாமல் போகவே வேறொரு ஸ்பெஷிலிஸ்ட்டை தேடிக்கொண்டு போனதோ என்னமோ என் கவனம் திசை திரும்பி விட்டது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-hg8hgFo-zIw/WUnUomdjC4I/AAAAAAAABqA/VJQLBxXyRdcI-AcMDen-z7_1X8K2y7vbwCLcBGAs/s1600/ant_effort%2Bto%2Bsave.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="597" data-original-width="1071" height="222" src="https://2.bp.blogspot.com/-hg8hgFo-zIw/WUnUomdjC4I/AAAAAAAABqA/VJQLBxXyRdcI-AcMDen-z7_1X8K2y7vbwCLcBGAs/s400/ant_effort%2Bto%2Bsave.png" width="400" /></a></div>
<br />
அந்த குறிப்பிட்ட எறும்பு மருத்துவ உதவிக் குழுவை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் வேறு பக்கம் கவனம் செலுத்தாது தன் கடமையாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சேவகனை காப்பாற்ற முயன்று கொண்டிருந்தது.<br />
<br />
அன்பு என்னும் அடிப்படை உணர்வை எல்லா உயிரினங்களிடமும் நிறைத்து அனுப்பியிருக்கிறான் இறைவன். சில whatsapp vedio க்களைப் பார்க்கும் போது பறவைகளாகட்டும், யானைகளாகட்டும், காட்டெருமைகளாகட்டும் சிங்கம் புலி போன்ற மாமிச பட்சிணிகளும் கூட எப்படியெல்லாம் ஒற்றுமையை கூட்டுறவை, தாய்பாசத்தை, அன்பை வெளிப்படுத்துகின்றன என்பதைக் காணும் போது பிரமிப்பு ஏற்படுகிறது.<br />
<br />
உண்மையில், கடவுளின் முன், மனிதர்களாகிய நாம் சுயநலத்தால் அன்பை மறந்ததால், தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாகிறோம்
</div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-89497174988039694162017-04-18T20:39:00.001-07:002017-04-18T21:56:59.681-07:00சோலார் பவரும் என் அனுபவங்களும்-5<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சென்ற செப்டம்பர் பதிவை நிறைவு செய்யும் போது குரங்கு -பூனைகள்- ரொட்டி கதை சொன்னேன் நினைவிருக்கிறதா? :) <a href="http://nirmal-kabir.blogspot.in/2016/09/4.html" target="_blank">கதைக்கு இங்கே</a><br />
<br />
அதாவது என்னுடைய சூரிய சக்தி தகடுகள் 8 யூனிட்களுக்கு பதிலாக ஏழுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கின்றனவே இதை கூட்டுவது எப்படி- அதாவது அதன் முழு பலனையும் அடைவது எப்படி என்ற சிந்தனை எப்போதும் ஓடிக் கொண்டே இருந்தது.<br />
அப்போது தான் நாங்கள் ஒரு மாதம் ஊரை விட்டே போகக் கூடிய சூழ்நிலை வந்தது, இது என்னடா! முழு உற்பத்தி திறனும் வீணாகப் போய்விடுமே என்ற எண்ணம் தோன்றிய போது கூடவே ஒரு வழியும் கண்டேன்.<br />
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.<br />
<a name='more'></a><br />
என் சூரிய சக்தி இணைப்பை கீழே குடித்தனக்காரருக்கு கொடுத்து ( அதற்காக தனியாக செலவழித்து) அவர்களை முழுவதுமாகப் பயன் படுத்திக் கொள்ள சொல்லிக் கொடுத்தேன். அதன் மூலம் அவர்களுக்கும் கணிசமான மின்சாரக் கட்டணம் - மூன்றில் இரண்டு பங்கு- குறைந்தது. எனக்கு ஏக திருப்தி.<br />
<br />
ஊரிலிருந்து வந்த பின்னும் அவர்களை பகல் போது மட்டும் (காலை 8 முதல் மாலை 5 வரை ) சூரிய சக்தியை பயன்படுத்திக் கொள்ளச் சொன்னேன். அதற்கான மாற்று விசையை ( change over switch) ஏற்கனவே பொருத்தி இருந்தேன். அதிசயம் ஆனால் உண்மை. இப்போது சூரிய தகடுகளின் உற்பத்தி சராசரியாக எட்டு யூனிட்டுகளுக்கும் மேலேயே பெருகியது. அதற்காக மின்கலத்தில் பற்றாக்குறையும் ஏற்படவில்லை. அப்பாடா !இப்போது முழு திறனும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.<br />
<br />
கீழே உள்ள அட்டவணையை பாருங்கள்:<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-2FAO7ce5rII/WPbTXrT6A2I/AAAAAAAABnk/jqJhT3HE78kvIHMlOAsMuR0iU28qy0-ywCLcB/s1600/mppt_perfm.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://2.bp.blogspot.com/-2FAO7ce5rII/WPbTXrT6A2I/AAAAAAAABnk/jqJhT3HE78kvIHMlOAsMuR0iU28qy0-ywCLcB/s400/mppt_perfm.png" width="390" /></a></div>
<br />
Solar Gen (kwh) என்பது தகடுகளிலிருந்து உற்பத்தியாகும் மின் சக்தியும் அது அத்தனையும் பயன் படுகிறதா ( எப்படி செலவாகிறது ) என்பதும் அட்டவணையில் பதியப்பட்டு இருக்கிறது.<br />
<br />
இதில் மேலும் திடுக்கிடும் உண்மைகள் புரிய ஆரம்பித்தன. அதாவது உற்பத்தியாகும் சக்தியில் பாதியளவே நமக்கு பயன்படுகிறது. சுமார் 25% சக்தியை இன்வெர்டர் DC to AC to DC to AC மாற்றுவதிலேயே சாப்பிட்டு விடுகிறது. சூரிய சக்தி( DC)- இன்வெர்டர் (AC) - மின்கலன் (அ)பாட்டரி(DC)- நம் தேவை (AC) இப்படி மாற்றி மாற்றி கொடுப்பதால் ஏற்படும் இழப்பே அது.<br />
<br />
இது எப்படி என்றால் ரூபாயை அமெரிக்க டாலருக்கு மாற்றி திரும்பவும் ரூபாய்க்கு மாற்றும் போது வங்கிகள் எடுத்துக் கொள்ளும் கட்டணம் போன்றது.<br />
<br />
பயன் படுத்தப்படும் சக்தியில் இது 41% ஆகும் அதையே சிவப்பு வர்ணம் குறிக்கிறது. MPPT என்னும் கட்டுப்பாட்டு மையமே இதற்கு காரணம்.<br />
<br />
இதைத் தவிர்க்க பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். நம் இயந்திரங்களை நேரடியாக DC சக்தியில் இயக்குவதன் மூலம் இந்த இழப்பை பெருமளவு தவிர்க்கலாம். ரயில்வே மின்விசிறிகள் விளக்குகள் எல்லாம் DC சக்தியில் இயங்குபவையே. ஆனால் இதை பரவலாக்க நம் தயாரிப்பாளர்களும் அரசாங்கமும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.<br />
<br />
சில வருடங்களில் இதற்கு தீர்வு வரலாம். அது வரை இந்த இழப்பை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்.<br />
<br />
<br /></div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4370811225785923601.post-83542356099430935742017-01-08T19:30:00.000-08:002017-04-18T20:41:09.472-07:00பீம் பாயும் ரொக்கமில்லா வர்த்தகமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நேற்று தொலைக்காட்சி பொதிகையில் ஒரு புதிய சொற்றொடரை கற்றுக்கொண்டேன். “ரொக்கமில்லா வர்த்தகம்” என்பது cashless transaction என்பதற்கு தமிழாக்கமாக பயன்படுத்தப்பட்டது. ‘காசற்ற வாணிபம்” என்று சென்ற பதிவில் நான் பயன்படுத்திய சொற்றொடரைக் காட்டிலும் நன்றாக இருக்கிறது. அதையே வைத்துக் கொள்வோம்.<br />
<br />
மைக்கேல் மதன காமராஜ் திரைப்படத்தில் கமலஹாசன் <b>பீம் பாய் பீம் பாய்</b> என்று அடிக்கொருதரம் தன்னுடைய உதவியாளரை கூப்பிடுவார். அப்படிப்பட்ட உதவியாளர்தான் இந்த புதிய BHIM APP என்று நினைத்தேன்<br />
<br />
<a name='more'></a><br /><br />
இந்திய பிரதமர் BHIM APP மூலமாக ரொக்கமில்லா வர்த்தக பயன்பாட்டை விஸ்தரிக்க ஆதரவு தரும் அதே நேரத்தில் இன்று credit Debit அட்டைகளில் வங்கிகள் தமது கமிஷனை அதிகரிப்பதால் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பெட்ரோல் வங்கிகளின் சங்கம் அறிவித்துள்ளது.<br />
<br />
நான் என்னுடைய அலைபேசியில் <b>பீம்</b> பயன் முறையை தரவிறக்கம் செய்து கொண்டு மூன்று முறை தோல்வியுற்று நான்காம் முறை வெற்றி பெற்றேன்,<br />
<br />
முதன் முறை என்னுடைய அலைபேசியையே பழையமாடல் (Samsung GT-S5630) என்று சொல்லி தள்ளி விட்டது. என்னுடைய sim cardஐ Lenovo Tablet க்கு மாற்றி முயற்சி செய்ததில் அது என் வங்கிக் கணக்கை சரியாக பிடித்து எனக்கென ஒருவரி விலாசத்தையும் கொடுத்தது. ஆனால் அதன் மூலம் வர்த்தகம் செய்ய 6 இலக்கம் கொண்ட UPI PIN பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றது. அதைச் செய்ய Debit card-ல் கடைசி 6 இலக்கங்களையும் அதன் expiry date உம் பதிய சொல்லியது. இது எதற்காக என்றால் ரகசிய UPI கடவு சொல்லைத் தேர்ந்தடுக்க வேண்டி. பின்னர் அதிக பாதுகாப்பு கருதி அதை அலைப்பேசிக்கு வரும் OTP யுடன் இணைத்து விட்டிருக்கிறார்கள். எனக்கு வரும் OTP குறித்த நேரத்தில் வராமல் காலம் கடந்து மூன்று OTP கள் ஒட்டு மொத்தமாக வந்தது. கடைசியாக வந்ததை உள்ளீடு செய்தால் Error in generation" என்று வந்தது. சரி என்னுடைய அலைபேசியில் தான் முடியவில்லை, மனைவியின் அலைபேசியிலாவது அவளது வங்கிக் கணக்கை இணைக்க முடியுமா ( அது MOTO-G latest model) என்று முயற்சி செய்த போது அந்த அலைபேசி எண் வங்கியில் பதிவு செய்த எண்ணுடன் ஒத்து வரவில்லை என்று நிராகரித்தது. அப்பொழுது தான் புரிந்தது சென்ற முறை சிம் கார்டை மாற்றியபோது வங்கி பதிவுகளில் மாற்றம் செய்யவில்லை.<br />
<br />
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மாதிரி அவருடன் வங்கிக்கு சென்று புதிய அலைபேசி எண்ணை பதிவு செய்து வந்தேன், அவர்கள் 24 மணிநேரத்திற்கு பின் அது செயல்படும் என்று தெரிவித்தனர்.<br />
இரண்டு நாள் கழித்து மீண்டும் பீம் வழி முயற்சியில் இறங்கினேன்.<br />
எல்லாம் சுலபமாக நிறைவேறியது. அவருடைய வங்கி கணக்குக்கும் ஒரு-வரி விலாசம் வந்தது.<br />
<br />
<span style="color: blue;">ஆனால் இவருக்கு UPI PIN நான்கே இலக்கங்கள் தான். ஆனால் என்னிடம் கேட்கப்பட்டதோ 6 இலக்கம் ! </span><br />
<span style="color: blue;">இது எதனால். வேறு வேறு வங்கிகள் என்பதால் எழுந்த வித்தியாசமா அல்லது அலைபேசிகளிக்கிடையே உள்ள வித்தியாசமா?</span><br />
<br />
எப்படியோ அவருடைய வங்கி ஒரு-வரி விலாசத்திலிருந்து என்னுடைய ஒரு-வரி விலாசத்திற்கு ரூ 100/ வெற்றிகரமாக அனுப்பி சோதனை ஓட்டம் செய்தேன். இப்போது என்னுடைய விலாசத்திலிருந்து அனுப்புவதற்கு நான் ஒரு புதிய அலைபேசிதான் வாங்க வேண்டும் போலிருக்கிறது. <br />
<br />
நானா வாங்குவேன். பணம் அனுப்ப இயலாததற்கு அதுவே நல்ல காரணம். என்னுடைய மொபைல் BHIM incompatible என்று சொல்லி தப்பித்துக் கொள்வேன்.<br />
<br />
இந்த அனுபவங்களிலிருந்து எனக்கு தோன்றுவது என்னவெனில் சாமானியருக்கு இந்த தொழில் நுட்பம் மிக புதியது எளிதில் பிடிபடாது. இதை வெற்றிகரமாக பயன்படுத்த உங்களிடம் நவீன அலைபேசி இருக்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்குடன் அலைபேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் டெபிட் கார்ட் இருக்கவேண்டும் அதனுடைய இலக்கங்கள் கைவசம் இருக்க வேண்டும். சிலர் தங்களது டெபிட் கார்டில் expiry date இல்லை அதனால் UPI PIN பதிவு செய்ய இயலவில்லை என்று புகார் செய்து உள்ளார்கள். நீங்கள் உங்கள் அலைபேசி எண்ணை மாற்றினால் கொஞ்சம் சங்கடம் தான். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் வர்த்தகர் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்.<br />
<br />
விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் தம் வங்கி கணக்குகளில் தாய் தந்தையரிடமிருந்து உடனுக்குடன் பணம் பெற முடியும். அதனால் நச்சரிப்பு கூடும் :)) அதிலிருந்து தப்பித்துக் கொள்ள என்னுடைய வழியை கடைபிடிக்கவும். பழைய மாடல் அலைபேசியையே உபயோகிக்கவும் !<br />
<br />
இல்லாவிட்டால் <a href="http://nirmal-kabir.blogspot.in/2016/12/blog-post.html" target="_blank">prepaid card முறையை</a> அறிமுகப்படுத்த வேண்டும்.</div>
KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.com0