Friday, December 9, 2016

அலைபேசியில்லா காசற்ற வாணிகம்

’காசில்லா வியாபாரம்’ என்றால் பண்ட மாற்று முறை என்பதை பழைய சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறோம்.

இப்போது வேண்டுமானால் அதை “காசற்ற வாணிபம்” என்று மாற்றிக் கொள்ளலாம். Cashless transactions.
இதை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் புதுப் புது சலுகைகளை அறிவித்துள்ளது.  இதில் எதுவும் எளிய மக்களுக்கு சுலபமாகப் படக்கூடியதாகக் காணப்படவில்லை. கடைக்காரர்கள் QRC  வைத்திருக்க வேண்டும். அதன் பின் அதை நம் அலைப்பேசியில் படம் பிடித்து அதன் சொந்தக்காரரை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். எல்லா இடத்திலும் எப்போதும் எல்லாரிடத்தும் ஆண்ட்ராய்ட் அலைபேசிகள் இருக்க முடியுமா என்பது கேள்வி.