Thursday, January 29, 2009

வலைப் பதிவு அன்பர்களுக்கு நற்செய்தி

எழுதிய இடுகைகளை எழுதியவரே படிக்க வேண்டிய நிலையா

இடுகைகள் படிக்கப்படும் முன்பே திரட்டிகளில் புதைந்து போய்விடுகின்றதா

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் அப்போ இப்போ என்று ஓரிருவர் எட்டிப்பார்க்கின்றனரா

பின்னூட்டங்கள் பெரும்பாலும் ஒற்றை படை இலக்கத்தை தாண்டுவதே கடினமா

மொக்கைக்கான ஐடியாவெல்லாம் கூட தீர்ந்து போச்சுதா

புதுசா எழுதாவிட்டால் யாரும் எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்ற நிலைமையா


என்னங்க இது! இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே

ஆமாங்க , ஆனா ஒரு நல்ல நியூஸ்!

மேலே உள்ள எல்லாவற்றிற்கும் உங்கள் பதில் ஆமாம் என்றால் இன்னும் படியுங்கள்.

வந்துவிட்டது தேன் சிட்டு



இது திரட்டியா -இல்லை

அவார்டு பம்மாத்தா -இல்லை

அன்பர்களே தமிழ் வலையுலகிலேயே முதல் முறையாக ஒரு வலைப்பூந்தோட்டம். (தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க)

தேன்சிட்டு-வளையத்தில் உறுப்பினராகுங்கள்.

தேன்சிட்டு வாசகர்களை உங்கள் வலைக்கு அழைத்து வரும்
.

அதாவது வெறும் கூகிளாரையும் திரட்டிகளையும் நம்பாம இன்னொரு வழியிலேயும் வாசகர்களை உங்கள் வலைப்பக்கம் வரவழைக்க இது ஒரு வழி.

உதாரணத்திற்கு ஆன்மீகத்தேனில் இணைந்த ஒரு வலைப்பக்கம் போய் பாருங்க.

பலவகை வளையத்தில் இணைவதற்கு இங்கே செல்லவும்.

மிச்சத்தை அங்கேயே போய் படிச்சுங்குங்க ! மறக்காம என்ன தோணுதுன்னு (அங்கேயோ இங்கேயோ) சொல்லிட்டு போங்க. நன்றி

No comments: