அது செய்யும் நலத்திற்(கு) அளவுண்டோ
தந்தவர் இழந்த தேதுமில்லை
பெற்றவர் மகிழ்ச்சிக் கேதெல்லை!
கணநேரத்தில் தோன்றி மறையுது
அதன் மாயம் நினைவிலே நிற்குது

இந்நகை இன்றி வாழ்வரோ
சீமானும் கோமானும் அவனியில்
நகையினால் சுகம் காணாத
தீனனும் உண்டோ தரணியில்
நகையினால் இல்லம் ஒளிருது
வாணிபம் பெருகி வளருது
சோர்ந்த உள்ளங்கள் ஆறுது
வாடிய மனங்கள் துளிருது
இயற்கையின் இன்மருந்து நகையே
இருந்த போதும்
இரவலோ,இரத்தலோ,இயலுமோ ?
வாங்கவோ,திருடவோ முடியுமோ ?
ஆயினும்
தராமல் போனால் அறிவரோ
எவரும் அதற்கான மதிப்பு ?
சோர்வில் துவண்ட நெஞ்சம்
நகைக்க இயலாதது கண்டீர்
தருவீர் ஒன்றை அவருக்கும்
காண்பீர் அது செய்யும் மாயம்
மலருதே அங்கும் ஒரு நகை
( ஒரு ஆங்கில கவிதையின் தழுவல்-ஆசிரியர் தெரியவில்லை)
No comments:
Post a Comment