Saturday, February 10, 2007

பிணித் தீர்த்த சாதுவின் அனுபவம்

சுவாமி ராமா எழுதிய Living with the Himalayan Masters (Published by Himalayan Institute Press , Honesdale, Pennsylvania ) என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு நிகழ்சி.

Page 340 , My Master Sends me to heal some one"

இனி சுவாமி ராமா:

எனது குருவுடன் ஒரு நாள் காலைப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று நீ உடனே ஒரு பஸ் பிடித்து செல் என்றார். பஸ் பிடி என்றால் ஹரித்வாரத்திற்கு போகவேண்டும் என்று பொருள். பஸ் வரும் சாலை எங்கள் குகையிலிருந்து ஏழு மைல் தொலைவில் இருந்தது. எனக்கு இது புதிது அல்ல. அவர் அடிக்கடி இப்படி சொல்வதுண்டு. ஹரித்வார் போய் என்ன செய்ய வேண்டும் என்று வினவினேன் நான். "அங்கிருந்து ஒரு ரயிலைப் பிடித்து கான்பூரிலுள்ள என் பக்தன் Dr. மித்ரா வின் வீட்டுக்குச் சென்று அவனை குணப்படுத்தி வா. அவனுக்கு மூளை நரம்பு வெடித்து மூக்கிலிருந்து ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. அவன் சதா என் நினைவாகவே இருக்கிறான் ." என்றார். எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் நான் எப்படி அவரை குணப்படுத்த முடியும் என்று கேட்டேன். " நீ செய்கிறாய் என்று நினைத்து செய்யாதே. அவரை சந்திக்கும் பொழுது அவருடைய வலது கன்னத்தை லேசாக ஒரு முறைத்தட்டு. போ. அவனருகில் நானிருக்கிறேன் என்று தெரிந்து கொள்ளட்டும்" என்று கட்டளையிட்டார்.

அவ்வளவு தூரப் பிரயாணத்திற்கு மனம் இடம் கொடுக்கவில்லையென்றாலும் Dr மித்ராவை நானும் ஒரளவு அறிந்து வைத்திருந்ததாலும் குருவின் ஆணையை நிறைவேற்றும் கடமையிருந்ததாலும் உடனே கிளம்பினேன். பொதுவாக ஹரித்வார் ரிஷிகேஷ் பகுதியில் சாதுக்களுக்காக எல்லா ஓட்டுனர்களும் எங்கு வேண்டுமானலும் நிறுத்தி ஏற்றி செல்லுவர். ஆகையால் ஹரித்வாரை அடைவதில் சிரமம் ஏதுமிருக்கவில்லை. கான்பூர் ரயில் கிளம்ப இன்னும் அரைமணிநேரம் இருந்தது. ஆனால் என்னிடம் பயணச் சீட்டு வாங்க பணம் இருக்கவில்லை. ஒரு பெரியவரை அணுகி என்னுடைய கைகடிகாரத்திற்கு உரிய பணம் கொடுப்பதானால் நான் பயணச் சீட்டு வாங்க இயலும் என்று தெரிவித்தேன். அவர் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்து தன்னுடன் பயணம் செய்ய வேண்டிய மகன் வர இயலாமையால் நானே அச்சீட்டில் பயணம் செய்யலாமென்று கூறி பணம் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

இரவு பயணத்தின் போது உடன் பயணம் செய்த ஒரு அம்மையார் உணவளித்து என் உணவின் தேவையை பூர்த்தி செய்தார். அவர் Dr. மித்ராவின் உறவினர். அவர் மூலமாக என் குருவைப் பற்றியும் என்னைப் பற்றியும் ஏற்கனவே அறிதிருதார். காலையில் கான்பூர் அடைந்ததும் என் வெகு நாளைய நண்பனை ரயில் நிலையத்தில் கண்டேன். அவனுக்கு வெகுவான மகிழ்சி. அவன் தேடிவந்த நபர் வரவே இல்லை. அவன் காரில் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் குறியாக இருப்பினும் நான் Dr. மித்ராவின் வீட்டிற்கு போக வேண்டிய அவசரத்தைப் புரிய வைத்து Dr. மித்ராவின் வீட்டை அடைந்தேன்.

என்னைக் கண்டதுமே Dr. மித்ராவின் மனைவியார், இந்தியர்களுக்கே உரித்தான குருட்டு நம்பிக்கையோடு "அப்பாடா இனி என் கவலை தீர்ந்தது. இனி அவர் உடல் நலம் உங்கள் கையில்" என்று சொல்லி வரவேற்றார். அந்நேரம் மூன்று மருத்துவர்கள் அருகே நின்று அவரை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். நான் வைத்தியன் அல்லவென்றும் வெறும் மித்ராவின் உடல் நலம் விசாரிக்க வந்தேனென்றும் கூறி Dr மித்ராவை அணுகினேன். என் குரு எப்படி இருக்கிறார் என்று அவர் விசாரிக்கையிலே என் குரு சொல்லியபடி அவருடைய வலது கன்னத்தை லேசாகத் தட்டினேன்.

என்ன ஆச்சரியம். சில நிமிடங்களிலேயே மூக்கின் ரத்தப் போக்கு நின்று விட்டது. ஒரு மருத்துவர் கூறினார் நான் தட்டிய வகையில் உடை பட்ட நாளம் அடைந்து போய் விட்டிருக்கும் என்று. வெகு சீக்கிரமாகவே விஷயம் பரவி அவர்கள் வீட்டின் முன் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அன்று மாலையே கிளம்பி நான் குருவின் இருப்பிடத்தை மறுநாள் சென்றடைந்தேன்.

"உங்கள் சிகிச்சையின் ரகசியம் எனக்குத் தெரியுமே" என்று அவரை கிண்டல் செய்தேன். அவரும் சிரித்துக் கொண்டே "மருத்துவர்கள் அஞ்ஞானிகள். எல்லாவற்றிலும் சிரமமான பிணி அஞ்ஞானத்தை குணப் படுத்துவதே ஆகும்" என்றார்.


இந்நிகழ்ச்சியின் மூலம் நம்பிக்கை உடையவர்கள் அறிய வேண்டியவை

1. ஞானிகளின் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே எல்லாம் அறிய வல்லவர்கள். நம்பிக்கையுடயவரின் உதவிக்கு விரைபவர்கள்.
2. அத்தகைய குரு சங்கல்பம் செய்யும் போது காலம், பொருள் எதுவும் பிரச்சனைகள் ஆவதில்லை. உதவிகள் கேட்காமலே வந்து சேரும்.
3. காரியத்தில் இறங்குபவன் தன்னை ஒரு கருவியாக உணர வேண்டும்.
4. எல்லா காலங்களிலும் இத்தகைய ஞானிகள் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள்.

No comments: