Saturday, May 17, 2008

சர்வர் சுந்தரமும் சினா-சோனா வும்

ஓடியோடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

அப்படிங்கற சினிமா பாட்டு கேக்கறதுக்கு ரொம்ப நல்லாத்தான் இருக்கு. முதல் வரி சரிதான். எல்லோரும் ஆலா பறந்து நாலு காசு சேர்க்கறதுக்கு ரொம்பதான் கஷ்டப் படுறோம்.

ஆனால் அடுத்த வரி... அதுதாங்க அந்தகாலத்துலேந்து இடிக்குது.
சரி சம்பாதிச்சா சந்தோஷமா செலவாவது பண்ணத் தெரியுதா? அதுவும் கிடையாது.

பணத்தை சம்பாதிக்கிறதுக்கும் அதுக்கப்புறம் உள்ள கஷ்டத்தையும் இந்த பழைய தமிழ் பாட்டுல சொல்றத பாருங்க :

ஈட்டலும் துன்பம், ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும் ஆங்கே கடும் துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம், கெடில் துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள். (நாலடியார் -280)

செல்வத்தைச் சம்பாதித்தல் ஒருவகை துன்பம்.
தேடிச் சேர்த்த அப்பொருளை காப்பாற்றுவதும் துன்பம்.
காத்த அச்செல்வம் குறைந்தால் துன்பம்
காணாமல் போய்விட்டாலோ துன்பமே
இப்படி எல்லாவிதத்திலும் துன்பத்துக்கே உறைவிடம் ஆகும் (நாம் ஈட்டும்) செல்வம்


இதையே சினா-சோனாவும் நச்சுன்னு சொல்லியிருக்காரு பாருங்க.



"Riches are Gotten with Pain, Kept with Care and lost with Grief"

சர்வர் சுந்தரம் படத்துல நாகேஷ் நல்லா சாப்பாட்டுட்டு, காசில்லாம ஓட்டல் முதலாளி சுந்தரராஜன் முன்னாடி நின்னு சர்ட் பாக்கெட்-ல இருக்கிற ஓட்டையில விரல விட்டு ஆட்டி காட்டுவாறே !! அந்த சீன் ஞாபகத்துக்கு வருது இல்ல !

படத்துக்கு மேலே இருக்கிற “சிந்திக்க ஒரு நொடி” சமாச்சாரத்துல, ஹென்றி டெய்லர், ஒரு நெஜத்தை எவ்வளவு நக்கலா சொல்யிருக்காரு பாருங்க :))

2 comments:

சென்ஷி said...

:))

நல்லாயிருக்குங்க ....

KABEER ANBAN said...

சென்ஷி, வாங்க.
பாராட்டுதலுக்கு நன்றி.