Sunday, August 31, 2008

தேயீயீயீ....இன்னும் தேய்- : சினா சோனா(6)

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறஞ்சிருக்கு” அப்படீன்னு ஒரு பாட்டு திருவருட் செல்வர் படத்துல வரும். பாட்டு நடுவில வார்த்தைகளோட அழகை கவனிங்க.


மனசு போல வெளுத்து வைச்சு
உறவு போல அடுக்கிவைச்சு
வரவு போல மூட்டைகட்டி- வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும் நாணயம் தான்
வெள்ளையப்பா


“ மனசு, துணிய விட சுத்தமா இருக்கு”.

எளிமையான மக்களுக்கு அப்படிதாங்க. கவிஞர் வார்த்தையிலேயே படம் புடிச்சிட்டாரு. அப்படி ஒரு சுத்தம் வரணுமின்னா என்ன செய்யணும். சினா சோனா சொல்றாரு பாருங்க
(படம் பெரிதாகத் தெரிய அதன் மேல் சுட்டவும்)


"It wisely put, better to rub it out, than to rub it in "

மனைவிக்கு பயந்த கணவனாக இருக்கும் சினா-சோனா வுக்கு துணி துவைக்கும் வேலை வந்து சேருது. அவங்க ஊர்ல துணிய தேய்க்கிறப் பலகை, தொட்டிக்கு செங்குத்தாகத்தான் இருக்கும் போலிருக்கு. அது மேல அழுக்கு துணிய தேய்க்கும் போது முதலில் அவருக்கு தன்னுடைய நிலைமைய நினைச்சு மனம் கஷ்டப் படுது. ( அதை படத்துல அவரு மூஞ்சியப் பார்த்து புரிஞ்சிக்கணும்). சுய பச்சாதாபம்.

அதன் பிறகு அழுக்கைப் போக்கத் தேய்த்துக் கொண்டிருக்கும் (rub it out ) செய்கையாலே ஞானோதயம் வருது. கோபத்தையோ கஷ்டத்தையோ மனசிலேயே போட்டு உழப்பிக் கிட்டு (rub it in ) இருக்கிறத விட 'அழுக்கை வெளிய தள்ளுற மாதிரி, எதிர்மறை எண்ணங்களை தள்ளிடணும்' ன்னு சொல்றார்.

குள்ளச்சாமியை பார்த்து பாரதியார் ‘ஏனய்யா அழுக்கு மூட்டை சுமக்கிறீர்' ன்னு கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு?

“புறத்தே நான் சுமக்கின்றேன், அகத்தினுள்ளே
இன்னொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ ”

அப்படீன்னு பதில் வந்திச்சு. சினா சோனா சொல்ற "rub it in " ங்கறது பழங்குப்பை சேர்ப்பதற்கான வழி. மனசுக்கு எது உற்சாகம் கொடுக்குமோ அந்த விஷயங்களை மாத்திரம் நெனச்சு பார்க்கணும். அப்போ தானாகவே வேண்டாத எண்ணங்களெல்லாம் தூர ஓடிப்போயிடும்.

ரொம்ப சிம்பிளா கவிஞர் rub-it out வழியும் சொல்லிட்டாரு பாருங்க.
கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா - உன்
சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

சினா சோனா, சொன்னா சரிதான் !

No comments: