Wednesday, January 9, 2008

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.....(சினா-சோனா-3)

ஒவ்வொருவர் உள்ளும் ஒரு தனித்திறமை இருக்கும், அதை முறையாக வெளிக்கொணர்ந்தால் அவரது ஆற்றல் எல்லோருக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்ற சொல்லக் கேட்கிறோம். பிரச்சனையே எப்படி "முறையாக" வெளிக் கொண்டுவருவது என்பதிலே தான்.

பிறர் சொல்வதையெல்லாம் நம்புபவர்கள், தலையாட்டி பொம்மை போல ஆமாம் சாமி போடுகிறவர்கள் தலைவர்களாக முடியாது. தான் ஈடுபட்டுள்ளத் துறையிலே தன் அறிவை வளர்த்துக் கொள்ளாதவன் நிபுணனாக முடியாது. ஒருவனின் திறமை வெளிவர வேண்டுமானால் அவன் சுய சிந்தனை உடையவனாக இருக்க வேண்டும். பிறரை நம்பி இருக்காமல் தன் திறமையிலே நம்பிக்கை கொள்பவனுக்குத்தான் தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை உள்ள இடத்தில் ஆற்றல் வளரும்.

இதோ பாருங்கள் சினா-சோனா வும் சொல்ல வருவதும் அதைத்தான்.

He who follows the crowd will never be followed by a crowd (Oct 11)

The wise man says to fill your job fill your mind (Oct 12)



Oct 11-ல் பிரசுரிக்கப்பட்ட Think it over... உண்மையிலே யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
"However brilliant an action may be it should not be accounted great when it is not the result of a great purpose"

உலகத்திலேயே மிக நீளமான தலைமுடி வைத்திருப்பவர், நகம் வளர்த்திருப்பவர், பின்பக்கமாகவே நடந்து உலகை சுற்றி வருபவர்கள் என்று பல சாதனைகள் உள்ளன. இவற்றால் உண்மையிலே ஆனது அல்லது ஆவது என்ன என பலமுறை நினைப்பதுண்டு. அதை நினவு படுத்தியது மேலே கண்ட வாசகம்.

No comments: