மும்பய் வன்முறைகளைப் பற்றிய, ராமலக்ஷ்மி அவர்களின், மனக்குமறல் முத்துச்சரம் வலைப்பூவில் மனதைத் தொடும் ஒரு கவிதையாக மலர்ந்திருக்கிறது. கலங்கி நிற்கும் எவர்க்குள்ளும் எழும் நியாயமான உணர்வுகள் அவை. ஆனால் கலங்கி நிற்பது மன உறுதியை குலைத்திடும். காலனையும் காலால் மிதிக்கத் துணியும் பாரதியின் வீர உணர்ச்சி இருந்தால் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும். ஆகவே இன்னொரு கவிதையை பாரதியின் கோணத்தில் படைத்திருக்கிறேன்.
இதற்கு வித்திட்ட ராமலக்ஷ்மி அவர்களுக்கு நன்றி.
என்னதான் செய்வீர்,செய்திடீர்
எதுவரை செல்வீர்,சென்றிடீர்
குள்ள நரிகளின் கூட்டம்
எததனை தினங்கள் ஆட்டம்
கட்டிக்கொடுத்த சோறு காணுமோ
குறியற்ற பயணத்தில்,மூர்க்கரே
வெட்டி முறிப்போம் உம் கால்களை
வன்முறை கொள்ளும் கைகளையுமே
குழம்பிய குட்டையில் மீனோ
கனவு காணும் மூடர்களே
பாரத தேசம் சிறு குட்டையோ
குழப்பிடின் எதிர்வரும் சுறாக்களே
மனிதத்தை மறப்பது புனிதமோ
மாற்றலரை அழிப்பது பாவமோ
மந்தபுத்தி யர்தம் கையோங்குமோ
மருண்டு மடிவதும் விவேகமோ
இறப்பதற்கு அஞ்சோம் உலகிலே
பிறந்த எவரும் சாவது உறுதி
கதறிப் பணியோம் வன்முறைக்கே
கலங்க அடிப்போம் இது உறுதி
மகன் போனால் மகன்கள் உண்டு
தமயன் போனால் தமயனா ருண்டு
எமக்கு உண்டு அன்பின் மொழி
உமக்கு சொல்வோம் தெண்டின் மொழி
(மாற்றலர்= எதிரிகள்; தெண்டு= கோல்,தடி)