Showing posts with label சிங் சோவ். Show all posts
Showing posts with label சிங் சோவ். Show all posts

Sunday, February 28, 2010

நல்லாப் பாடுறே ! கொஞ்சம் உச்சரிப்பு....

வண்ண மயமான விளக்குகள் ஒளியூட்டிய மேடையிலே உயிரைக் கொடுத்து “உயிரே உயிரே” என்று அந்த சிறுமி பாடி கொண்டிருக்கிறாள். பல லட்சம் ரூபாய் பெறுமான பரிசு என்றால் சும்மாவா!

“கேக்க சகிக்கில. சேனலை மாத்து” அப்படின்னு தம்பி. அவனுக்கு ஜேக்கி-சான் படம் பார்க்கணும்

ரிமோட்டை கையில பிடித்துக் கொண்டிருக்கும் அக்காவோ “போடா ஒனக்கு பாட்டு வராது, புரியாது....”

ஆமாமா, நீ மட்டும் பெரிசா பாடிக் கிளிச்சியாம். அந்த பாட்டு டீச்சர், ’சுருதியே சேரல உங்கப் பொண்ணுக்கு’அப்படீன்னு அம்மாகிட்ட மூஞ்சில் அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சாங்களே. எங்களுக்குத் தெரியாத உங்க பாட்டு லட்சணம்..

இது ஓயாத சண்டை. சண்டை நடுவில பாட்டை விட்டாச்சு, ஜட்ஜஸ் ரவுண்ட் வந்தாச்சு.

ஜட்ஜ் கள் அந்த சிறுமியை பார்த்து, ஒப்புக்காக

”நல்லா பாடினே, கொஞ்சம் மாடுலேஷன்ல கவனம் வேண்டும்”

”உன் காஸ்ட்யூம் சூபர், யூ ஹேவ் வொண்டர்புல் ப்ரஸன்ஸ். கொஞ்சம்..கொஞ்சம் உச்சரிப்பை சரியா பார்த்துகணும். வல்லினம் மெல்லினம் எல்லாம் தெளிவா இருக்கணும்.”

இத்யாதி இத்யாதி..

”தேங்க்யூ மேடம்.... ஓகே ஸர்... என்று சொல்லிக் கொண்டு வந்த டென்ஷன் சிறுமிக்கு தான் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றதுமே அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவளை விட அவள் தாயாருக்கு கோபம் அதிகமாயிற்று. அங்கேயே விவாதம் சூடு பரக்க ஆரம்பித்தது. சஸ்பென்ஸை தொடர்வதற்காக சேனல் தயாரிப்பாளர் பிரேக் கொடுத்தாரோ நாம பிழச்சோமோ :)))

இந்த மாதிரி நேரத்துலதான் நினைவுக்கு வருவார் சினா-சோனா.


IT IS DIFFICULT TO
ESTEEM A MAN
AS HIGHLY AS
HE WOULD
WISH

யாவருமே அவரவர் நினைப்பில் பெரிய ஆர்டிஸ்ட்தான், படிப்பாளிதான். ஆனால் பிறர் அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்களா என்ன ?

அதற்கான தகுதி, உழைப்பு, பொறுமை இவற்றை வளர்த்துக் கொள்ளாமல் அங்கீகாரத்திற்காக அவசரப்படும் போது பிறருடைய நகைப்பு ஆளாகி விடுகிறார்கள்.

இதைதான் ஆங்கிலத்தில் “sitting in his own ivory tower" என்கின்றனரோ! அப்போது வளர்ச்சி நின்று போகிறது.

Thursday, February 7, 2008

சிரித்து வாழ வேண்டும் பிறர்...சினா-சோனா-4

என்னமோ தெரியல, இப்போ எல்லாம் பதிவுக்கு தலைப்பு வைக்கணும்-னா உடனே சினிமா பாட்டுதான் ஞாபகம் வருது.அந்த அளவுக்கு இந்த பாட்டெல்லாம் நம்மோட பின்னி பிணஞ்சு போச்சுங்க. இந்த பாட்டுக்கும் சினா சோனா சொல்ல வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?

ரொம்ப இருக்குங்க.முதல் படம், பாட்டுல முதல் வரிக்கு பொருந்தும். இரண்டாவது வரி இரண்டாவது படத்துக்கு பொருந்தும். என்ன ரொம்ப ப்ளான் பண்ணி சினா-சோனா சொன்ன மாதிரி இருக்குல்ல!

அக்டோபர் 5 : "One cannot think ill of anyone, while one is singing "


ஜாலியா பாடிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு பிறத்தியாரப் பத்தி தப்பா நெனைக்க தோணாதாம். இதை முதல் முதல்ல படிச்ச போது பெரிசா ஒண்ணும் தோணலை. பின்னால என்னோட 'Boss ' ஒரு நாள் என்னப் பாத்து ஒண்ணு சொன்னதும் திரும்ப இது நெனப்புக்கு வந்துச்சு.

அப்போ (1981)வேலைக்கு சேர்ந்த புதுசு. சின்மயா நகரிலிருந்து தரமணிக்கு ஒரே பஸ் 5D. அதனோட டையத்துக்குத்தான் நாம போயாகணும். இப்படியா எட்டு மணி ஆபீசுக்கு ஏழேகாலுக்கே போய் விடுவேன். அதை விட்டா எட்டரைக்குத்தான் போகமுடியும்.

பொதுவா நான் தான் போயி கடையத் தொறக்கணும். ஒரோரு சமயம் யாராவது தொறந்து ஆபீசக் கூட்டிக்கிட்டு இருப்பாங்க. அன்னிக்கு யாராவது ஸ்பெஷல் கெஸ்ட் வர்ற நாளா இருக்கும்.

ஒருநாளைக்கு, நான் தொறந்து கெடந்த ஆபீஸுக்குள்ள ஜாலியா (கல்யாணம் ஆகவில்லை!!) பாடிக்கிட்டே உள்ளே போனேனா, எம்பேரச் சொல்லி எங்க டைரக்டர் கணீர்ன்னு கூப்புடறது கேட்டது. அவரு அப்படித்தான் வெங்கல கடையில புகுந்த யானை மாதிரி. எங்க அப்பாவோட வயசு அவருக்கு. இந்த மனுஷன் எட்டுமணிக்குத்தான வருவாரு. இப்போ எப்படிங்கற கேள்வியோட நாடியெல்லாம் ஒடுங்கி போய் அவரு ரூமுக்குள்ள எட்டிப்பாத்து 'குட்மார்னிங் சார்' அப்படீன்னேன்.

ஹிண்டு பேப்பர பிரிச்சு பாத்துக்கிட்டு இருந்தவரு தலைய வெளிய எடுக்காமெயே 'என்ன சீக்கிரம் வந்துட்டீங்களா?'ன்னு கேட்டார். அத கேக்கிறதிலேயும் ஏதோ தப்பு பண்ணியவன விசாரிக்கிற மாதிரி ஒரு தோரணை.

“ எஸ் ஸார். இதுதான் என் பஸ் டைம். அடுத்த பஸ்ஸுன்னா லேட் ஆயிடும்” அப்படீன்னு ஏதோ முணு முணுத்தேன்.

'குட். நல்லா பாடுவீங்களா ?' கிண்டலா குத்தலா புரியல. 'எதுக்கு குட். சீக்கிரமா வந்ததுக்கா' அப்படீன்னு மனசுல ஒரு போராட்டம்.

”ஸாரி சார். நீங்க இருக்கீங்கன்னு தெரியல”

உடனேயே ஒண்ணும் சொல்லாம, பேப்பர மடிச்சு டேபிள் மேல தொப்புன்னு போட்டு, நாற்காலிய வேகமா பின்னுக்குத் தள்ளி என்னத் தாண்டிக்கிட்டே வெளில ஷெட் பக்கமா போனாரு. நானும் பின்னாடியே ஓடினேன். அங்கிருந்த 'புல்லட்'ட ஸ்டார்ட் செஞ்சு 'நோ,நோ. அப்படித்தான் ஜாலியா இருக்கணும். ஐ ஆம் ஹாப்பி'ன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.

அப்படியே ஸ்டன்னாயி நின்னுட்டேன். இன்னிக்கு ஏன் புல்லட்-ல இவ்வளவு சீக்கிரமா வந்தாரு? அவரோட ஜிப்ஸி எங்க போச்சு? இப்படி பல கேள்வி மனசுக்குள்ள. அதுக்கான விடையெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லேங்கறதுனால எழுதலை. ஆனா அவரு பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல பெரிய சைகாலிஜ்ஸ்ட் கூட. அவரு பெயரு Dr.C.V.சேஷாத்ரி, திவான் பகதூர் Sir C.P.ராமஸ்வாமி அய்யர் அவர்களின் பேரன்.

காலப்போக்கில புரிஞ்சிக்கிட்டேன். கள்ளம் இல்லா மனசுலதான் சந்தோஷம் இருக்கும் சந்தோஷம் இருக்கிற எடத்துலதான் பாட்டு இருக்கும். நான் சந்தோஷமாயிருக்கிறதப் பார்த்து அவரு சந்தோஷப் பட்டிருக்காரு. ரொம்ப பெரிய மனசு !

இதைத் தான் சினா சோனா கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்காரு. “பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கிற நேரத்துல கெட்ட எண்ணங்கள் வராது”. இது சாதாரண ஜனங்கள் விசயத்துல அனுபவ பூர்வமான உண்மை. அதனால எப்போவெல்லாம் மனசு தளர்ந்து பொகுமோ அப்போதெல்லாம் சத்தம் போட்டு பாடுங்க. யாரு என்ன நெனப்பாங்களோங்கற கவலையெல்லாம் வேணாம். எதிர்மறை எண்ணங்கள் ஓடிப்போயிடும். பாட்டரி சார்ஜ் ஆயிடும்.

ரெண்டாவது சினா-சோனா வும் (அக்டோபர் 6) நல்லா யோசிக்க வேண்டிய விஷயம் தான். இதுல odd even ங்கிற வார்த்தைகளை நல்லா பயன் படுத்தியிருக்காரு. At odds அப்படின்னா சரியா புரிஞ்சுக்க முடியாம சங்கடப்படுவது. get even அப்படீன்னா சரியாப் போச்சு, புரிஞ்சுக்கிட்டதா அர்த்தம். ஒரு சுய பரிசோதனை.

“ Most men remain at odds with themselves trying to get even "

“பெரும்பாலான மக்கள் தங்களை தாங்களே புரிஞ்சுக்கிறதுக்காக ரொம்ப சங்கடப்படுறாங்க”

உதாரணத்துக்கு, சிலருக்கு சட்டு புட்டுன்னு மூக்குக்கு மேல கோவம் வரும். எதிர்ல இருக்கிறவரை சரியோ தப்போ திட்டிடுவாங்க.

அப்புறம் உக்காந்துகிட்டு 'சே ஏன் தான் இப்படி இருக்கேனோ' அப்படீன்னு யோசிக்கிறாங்க பாருங்க அது தாங்க சுய பரிசோதனை. அப்படி யோசிக்கிறதே ஒரு நல்ல அறிகுறிதான். கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க!

ஆரம்பத்துல சினிமாப் பாட்டோட ரெண்டாம் லைன் ரெண்டாவது படத்துக்கு பொருந்தும்னு சொன்னேன். ”...பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே”

சுய சோதனை செஞ்சுகிட்டு நம்மோட தப்பு தண்டாவெல்லாம் நாமே மாத்திக்கிட்டாத்தானே இன்னொருத்தர் நம்மப் பார்த்து சிரிக்காம வாழ முடியும்.

என்ன சொல்றீங்க ? 'சினா சோனா சொன்னா சரிதான்' இல்லே !

Sunday, December 16, 2007

குட்டக் குட்ட குனிபவன் : சினா சோனா-2

குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனியகுனிய குட்டுபவனும் முட்டாள் அப்படீன்னு சொல்லுவோம் இல்லையா அதே மாதிரி

'The First faults are theirs that commit them - The second ,theirs that permit them"


முதல் தப்பு அதை செய்யறவன், இரண்டாவது தப்பு அதை விட்டு வச்சவன்

சினா-சோனா தன் வீட்டுக்காரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு புலம்புவது போல் இருக்கும் இந்த சித்திரம் எல்லா இடத்துக்கும் பொருத்தம் .

சினா சோனா -சொன்னா சரிதான்

Thursday, December 13, 2007

Chiனா-Choனா சொன்னது என்னா ?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல ஆண்டுகாலம் Ching Chow என்கிற கேலிச் சித்திரத் துணுக்கு ஒன்றைப் பிரசுரித்து வந்தது. இதை Chicago Tribune என்ற அமெரிக்கப் பத்திரிக்கையினிடமிருந்து பதிப்புரிமை பெற்று வெளியிட்டது.

1927ல் ஸிட்னி ஸ்மித் என்பவரும் ஸ்டான்லி லிங்க் என்பவரும் அப்பத்திரிக்கையில் கருத்துப்படத் தொடர் ஒன்றைத் துவங்கினர். நம் தினத்தந்தியில் வரும் சாணக்கியன் சொல் போல என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆட்டு தாடி சாணக்கியனை போல் வெறுமனே நின்று கொண்டிருக்காமல், சீனத்துக் குடுமி வைத்த சிங்-சோவ் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது போலவோ அல்லது இக்கட்டில் சிக்கிக் கொண்டிருப்பது போலவோ அவர்கள் கேலிப்படம் வரைந்தனர். பிற்காலத்தில் குடுமியை மாற்றி அவனது சிகையை நவீன முறையிலேயே சித்தரிக்க ஆரம்பித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

சிங் சோவ் கேலிச் சித்திரங்களில் மெல்லிய நகைச்சுவையும் உட்கருத்தும் பொதிந்திருக்கும். ஒரு சிலவற்றில் ஆங்கில வார்த்தைகளை வைத்து சிலேடைகள் இருக்கும். பல இடங்களில் சித்திரம் இல்லாமல் புரியாது. இவை தவிர உப்பு சப்பு இல்லாமல் வந்த துணுக்குகளும் உண்டு.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் இதனால் கவரப்பட்டு என்னிடம் காலியாக இருந்த நாட்குறிப்பேட்டில் தினமும் வரைந்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். சிங் சோவ் மட்டுமல்லாது அன்றைய தேதியில் வெளியான Think it over யும் சேர்த்தே எழுதி வைத்துக்கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பியதும் காபி குடித்துக் கொண்டே முதலில் செய்யும் காரியம் இது தான். இதற்கு தேவைப்பட்ட நேரம் சுமார் பத்து நிமிடங்கள். பலரும் இதை பாராட்டவே சுமார் நான்கு வருட காலம் (1978-1982)தொடர்ந்து செய்து வந்தேன். அதாவது நான்கு டைரிகள்.தொடராததற்குக் காரணம் அந்த தொடர் நின்று போனது தான். இப்பொழுது என்னிடம் உள்ளது இரண்டு டைரிகளே. இன்னும் இரண்டு யாரிடம் உள்ளது என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

பிற்காலத்தில் அவற்றை புரட்டிப் பார்க்கும் போது முன்பு புரியாதிருந்த பல கருத்துப் படங்கள் புரிந்தன. பல நிர்வாக உண்மைகள் புரிய ஆரம்பித்தன. மீண்டும் மீண்டும் புரட்டும் பொழுது என் அனுபவத்திற்கேற்ப பல புது பரிமாணங்கள் தெரிந்தன. இதில் எனக்குப் பிடித்த சிலவற்றை அவ்வப்போது நம் இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் "சினா-சோனா சொன்னது என்னா" என்ற தலைப்பில் பதியவிருக்கிறேன்

சிங்-சோவ் (Ching Chow)என்பதை சினா சோனா என்று நாம் தமிழ் படுத்திக் கொள்வோம். அதனோடு எனக்கு தோன்றும் கருத்துகள் இருப்பின் அவற்றையும் சொல்லுவேன். படித்தபின் உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.

Give a big hand to Chiனா Choனா


'its wisely written
More important than seeing through things is, seeing things through

பனிமழையில் முன்னே இருப்பதை பார்க்க முடியவில்லை என்பதால் பயணத்தை ரத்து செய்யாமல் காரியமே கண்ணாக பயணத்தை தொடர வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் உள்ளது இந்த படம்.

சற்று யோசித்துப் பார்த்தால் seeing through things என்பது நடப்பனவற்றை கவனித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் நிகழ்சிகளின் உள்நோக்கங்களையும் ஆராய்வது. "Seeing things through" என்பது எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வது.

நாம் அன்றாடும் காணும் உண்மை ஒன்று.

ஒரு முக்கியமான project-ல் உள்ள உறுப்பினர்கள் அதை வெற்றிகரமாக முடிக்க செயல்படுவது seeing things through ஆகும். அங்கே உட்பூசலும் குழப்பமும் இருந்தால் ஒருவரின் செய்கையை, முடிவுகளை மற்றவர் சந்தேகக் கண்கொண்டு அணுகுவதே seeing through things. வெற்றிக்கு எது தேவை ?

சினா-சோனா சொல்வது சரிதான்!
More important than "seeing through things" is, "seeing things through