Wednesday, May 2, 2007

மனம் குன்றிய பிஞ்சுகள் :நல்வாழ்வு குழுமம்

குழந்தைகள் என்றாலே மனம் இளகும். அதிலும் மனம் குன்றிய குழந்தைகளென்றால் உருகிவிடும். அத்தகைய குழந்தைகளின் நல்வாழ்வுக்கென எவ்வளவு செய்தாலும் சொன்னாலும் போதாது. அவர்களின் மேம்பாட்டுக்கென குழுமம் (FORUM) வடிவமைப்பில் ஒரு வலை துவக்கப்பட்டுள்ளது. இது ஒரு பள்ளிக்கென செய்யப்பட்டிருப்பினும் இத்தகைய சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும்ஒன்று சேர்க்கும் வகையிலும், உலகத்தின் பல பாகங்களில் இது விஷயமாக நடைபெற்றுவரும் நல்ல காரியங்களையும் பரிமாற்றம் செய்து கொள்ளும் நோக்கோடு இவ்வடிவமைப்பு தரப்பட்டுள்ளது.

மனநலம் குறைப்பாடுள்ள குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள் எவருமே இதில் அங்கத்தினராகி கருத்துக்கள் சொல்லலாம். தனியாக வலையில்லாமல் செயல்பட்டுவரும் பள்ளிகளும் இத்தளத்தை, தங்களுடைய நடவடிக்கைகளை எல்லோருக்கும் தெரியும் வகையில் பயன்படுத்தலாம்.

தமிழ் பயணி நாடோடி இந்த வலையகத்தை அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

வாசகர்கள் அனைவரும் இதை தேவைப்பட்டவர்களுக்கு- இவ்வகை சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், எந்த நாட்டினராயினும்- எடுத்துச் சொல்லி உறுப்பினராக்குங்கள். நீங்களும் ஆகுங்கள்

வலையகம் மற்றும் குழுமம் பார்வையிட இங்கே சொடுக்கவும்.

No comments: