Sunday, February 28, 2010

நல்லாப் பாடுறே ! கொஞ்சம் உச்சரிப்பு....

வண்ண மயமான விளக்குகள் ஒளியூட்டிய மேடையிலே உயிரைக் கொடுத்து “உயிரே உயிரே” என்று அந்த சிறுமி பாடி கொண்டிருக்கிறாள். பல லட்சம் ரூபாய் பெறுமான பரிசு என்றால் சும்மாவா!

“கேக்க சகிக்கில. சேனலை மாத்து” அப்படின்னு தம்பி. அவனுக்கு ஜேக்கி-சான் படம் பார்க்கணும்

ரிமோட்டை கையில பிடித்துக் கொண்டிருக்கும் அக்காவோ “போடா ஒனக்கு பாட்டு வராது, புரியாது....”

ஆமாமா, நீ மட்டும் பெரிசா பாடிக் கிளிச்சியாம். அந்த பாட்டு டீச்சர், ’சுருதியே சேரல உங்கப் பொண்ணுக்கு’அப்படீன்னு அம்மாகிட்ட மூஞ்சில் அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சாங்களே. எங்களுக்குத் தெரியாத உங்க பாட்டு லட்சணம்..

இது ஓயாத சண்டை. சண்டை நடுவில பாட்டை விட்டாச்சு, ஜட்ஜஸ் ரவுண்ட் வந்தாச்சு.

ஜட்ஜ் கள் அந்த சிறுமியை பார்த்து, ஒப்புக்காக

”நல்லா பாடினே, கொஞ்சம் மாடுலேஷன்ல கவனம் வேண்டும்”

”உன் காஸ்ட்யூம் சூபர், யூ ஹேவ் வொண்டர்புல் ப்ரஸன்ஸ். கொஞ்சம்..கொஞ்சம் உச்சரிப்பை சரியா பார்த்துகணும். வல்லினம் மெல்லினம் எல்லாம் தெளிவா இருக்கணும்.”

இத்யாதி இத்யாதி..

”தேங்க்யூ மேடம்.... ஓகே ஸர்... என்று சொல்லிக் கொண்டு வந்த டென்ஷன் சிறுமிக்கு தான் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றதுமே அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவளை விட அவள் தாயாருக்கு கோபம் அதிகமாயிற்று. அங்கேயே விவாதம் சூடு பரக்க ஆரம்பித்தது. சஸ்பென்ஸை தொடர்வதற்காக சேனல் தயாரிப்பாளர் பிரேக் கொடுத்தாரோ நாம பிழச்சோமோ :)))

இந்த மாதிரி நேரத்துலதான் நினைவுக்கு வருவார் சினா-சோனா.


IT IS DIFFICULT TO
ESTEEM A MAN
AS HIGHLY AS
HE WOULD
WISH

யாவருமே அவரவர் நினைப்பில் பெரிய ஆர்டிஸ்ட்தான், படிப்பாளிதான். ஆனால் பிறர் அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்களா என்ன ?

அதற்கான தகுதி, உழைப்பு, பொறுமை இவற்றை வளர்த்துக் கொள்ளாமல் அங்கீகாரத்திற்காக அவசரப்படும் போது பிறருடைய நகைப்பு ஆளாகி விடுகிறார்கள்.

இதைதான் ஆங்கிலத்தில் “sitting in his own ivory tower" என்கின்றனரோ! அப்போது வளர்ச்சி நின்று போகிறது.

Tuesday, January 12, 2010

வீரத்துறவியின் சலியா வழி



இலக்கு ஒன்றை தேர்ந்திடு
இரவும் பகலும் உழைத்திடு

இலக்கு அதுவே வாழ்க்கை
இலக்கு அதுவே கனவாம்

நாடி நரம்பு மூச்செல்லாம்
நாடி நிற்கட்டும் நும் இலக்கு

அணுஅணுவும் உயிர்க்கட்டும்
அனுதினமும் உந்தன் இலக்கு

வெற்றிக்கு இல்லை வேறுவழி
பற்றுவோர்க்கு வெற்றியே, வாழி
!

Take an idea, make that one idea your life; think of it, dream of it, live on idea. Let the brain muscles nerves everyy part of your body be full of that idea and just leave every other idea alone. This is the way to success. - swami vivekananda

இன்றைக்கு இளைஞர் தினமாகக் கொண்டாடப்படும் விவேகானந்தர் பிறந்தநாள் சமர்ப்பணம்.
(thanks to " ibibo.com” for
picture courtesy)